Search This Blog

Friday, October 1, 2010

பொதுப்பணித் துறை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் முதல்வர் கலைஞர் உத்தரவு

முதலமைச்சர் கலைஞர் தலைமையில், பொதுப்பணித்துறை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் எஸ். மாலதி மற்றும் அரசு உயரதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளனர் (சென்னை, 30.9.2010).
சென்னை, அக்.1- பொதுப்பணித் துறை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆய் வுக் கூட்டத்தில் முதல் வர் கலைஞர் உத்தரவிட் டார். தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பொதுப் பணித் துறையின் நீர்வள ஆதா ரம் மற்றும் கட்டடப் பிரிவுகள் மூலம் தமிழ கத்தில் செயல்படுத்தப் பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன் னேற்ற நிலை குறித்து முதல்வர் கலைஞர் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தலைமை செயலாளர் மாலதி, பொதுப் பணித் துறை முதன்மைச் செய லாளர் ராமசுந்தரம், நிதித் துறைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொதுப் பணி துறை(நீர்வள ஆதா ரம்) மூலம் மேற்கொள் ளப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்கள், தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத் தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய திட் டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக, காவிரி ஆற்றின் குறுக்கே கட் டளைப் பகுதி மாயனூ ரில் ரூ.165 கோடியில் கதவணை கட்டும் திட் டத்தை முடிக்க முதல் வர் கலைஞர் அறிவுறுத் தினார். தாமிரபரணி, கருமேனி ஆறு, நம்பி யாறு இணைப்புத் திட் டம் ரூ.369 கோடி மதிப் பீட்டில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
முதற்கட்ட மற்றும் 2 ஆம் கட்டப் பணிகளின் முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்த முதல்வர், இந்தியாவின் முன்னோ டித் திட்டமாகிய இத் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றிப் பயனுக்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத் தரவிட்டார்.
பாலாறு மற்றும் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மணல் எடுத்து வருவதால் ஏற் பட்டுள்ள பிரச்சினை கள் குறித்து விவாதிக் கப்பட்டது. இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள் ளுவதை முழுமையாக தடை செய்வதற்கும், கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் அதிக அள வில் மணல் படிந்திருப் பதால் அங்கிருந்து மணல் எடுப்பதை அனுமதிப்ப தற்குத் தேவையான நட வடிக்கைகளை மேற் கொள்ளவும் முதல்வர் கலைஞர்அறிவுறுத்தினார்.
சென்னை மாநகரில் ஜவஹர்லால் நேரு நகர்ப் புற புனரமைப்புத் திட் டத்தின் கீழ் ரூ.633 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் முன்னேற்ற நிலைகள் குறித்து அதி காரிகளிடம் கேட்டறிந் தார். வடகிழக்குப் பருவ மழை தொடங்கவிருப்ப தால், மழைக் காலங் களில் மக்களுக்கு ஏற் படும் சிரமங்களை முற் றிலும் அகற்றுவதற்காக இப்பணிகளை விரைவு படுத்த அறிவுறுத்தினார்.
தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நிலத் தடி நீரை உயர்த்தும் திட்டப் பணிகள் நடை பெறும் பகுதிகளிலுள்ள மக்களுக்கு இத்திட்டத் தின் பயனை விளக்கி அதன்மூலம் அவர்களின் முழு ஒத்துழைப்போடு பணிகள் நிறைவேற்றப் படுகின்றனவா என்றும், இத்திட்டத்திற்கான வழி காட்டி நெறிமுறைகளின் படி பணிகள் நடை பெறுகின்றனவா என் றும் கேட்டறிந்தார்.
மேலும் மண்டலம் வாரி யாக திட்ட செலவினங் கள், திட்டப் பணிகள் முன்னேற்றம் பற்றியும் ஆய்வு செய்தார். சென்னை அரசினர் தோட்டத்தில் கலைவா ணர் அரங்கம் கட்டுவ தற்கான பணிகளை உட னடியாக தொடங்கி, விரை வாக முடிக்க கூறினார். வெளிச்சந்தையில் சிமென்ட் விலை அதி கரித்துள்ளதால் வேறு மாநிலங்களிலிருந்து அல்லது மாற்று ஏற் பாடுகள் செய்து நியாய மான விலையில் சிமென்ட் கொள்முதல் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற் கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
ஆய்வு முடிவில், பொதுப்பணி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ள நிதி முழுவதையும் செலவிட்டு, திட்டங் களின் பணிகளை தர மாகவும், உரிய காலத் திற்குள் முடிக்க மாவட் டங்களிலுள்ள அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
http://www.viduthalai.periyar.org.in/20101001/news03.html

No comments:

Post a Comment