Search This Blog

Friday, October 1, 2010

தி.மு.க.வை எந்த தீய சக்தியாலும் வீழ்த்த முடியாது தமிழக நிதியமைச்சர் அன்பழகன் பேச்சு


விழாவில், ஒரு மாணவருக்கு அமைச்சர் அன்பழகன் கணினியை வழங்கினார். அருகில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கே.பி.பி.சாமி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.
திருவொற்றியூர், அக்.1- `தி.மு.க.வை எந்த தீய சக்தியாலும் வீழ்த்த முடியாது' என்று அமைச்சர் அன்பழகன் கூறினார்.
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.பி. பி.சாமியின் தந்தையும், முன்னாள் கவுன்சிலரு மான கே.பரசுராமனின் 18-வது நினைவு நாளை யொட்டி ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா, திரு வொற்றியூர் விம்கோ நகரில் நடந்தது. விழாவில் 10 பேருக்கு ஆட்டோ ரிக்ஷா, ஒருவருக்கு மினி லாரி உள்பட 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் அன்ப ழகன் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
திருவொற்றியூர் பகுதி யில் தி.மு.க.வை வளர்த்திட பரசுராமன் ஆற்றிய பணிகளை அண்ணா, கலைஞர், நான் உள்பட அனை வரும் நன்கு அறிவோம். தனக்கு பதவி கிடைக்கும் வாழ்வு கிடைக்கும் என்று எண்ணி அவர் கழக பணி யாற்றவில்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவரைப்போல் தி.மு.க. தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் படிப்படியாக வளர்ந்து தி.மு.க.வாக மாறி ஒளி பெற்று விளங்குகிறது.
தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆட்சி செய்கி றான் என்பதை பெருமை யான விஷயமாக நாம் கருதவேண்டும். உழைக் கும் மக்களின் பிரதிநிதி யாக ஏழை எளிய மக்க ளுக்கு பல்வேறு திட் டங்களை தீட்டி கலைஞர் ஆட்சி செய்து வருகிறார். கலைஞர் 6 ஆவது முறையாக முதல்வராக வருவது உறுதி. நமக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற ஆசை இல்லை. ஆனால் நாம் இல்லையென்றால் அந்த இடத்தில் அராஜக ஆட்சி வந்து விடும்.
நாம் யார் எப்படி அரசியல் கட்சி தொடங் கினோம். நேற்று சினி மாவில் நடித்து விட்டு இன்றைக்கு முதல்வர் ஆகிவிடலாம் என்று கட்சி தொடங்கி னோமா? யாருடனாவது கூட் டணி வைத்துக் கொண்டு யார் தோளிலாவது ஏறி மகனுக்கு பதவி வாங்கி விடலாம் என்று அரசி யல் நடத்துகிறவர்களா? ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நானே அமைச்சராக இல்லாவிட் டாலும் தி.மு.க. கட்சி நடக்கும். தி.மு.க. அடித் தட்டு மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம்.
கலைஞர் ஆட்சியில் பயன்பெறாத குடும்பமே இல்லை என்று கூறலாம். வண்ணத்தொலைக்காட்சி, இலவச எரிவாயு அடுப்பு, தொழில் தொடங்க உதவி, மாற்று திறனாளி களுக்கு உதவி என்று பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். எந்த உதவி யும் பெறாதவர்கள் யாராக இருந்தாலும் கூட 108-ன் உதவியை மறக்க முடி யாது. அதையாவது பெற்று இருப்பார்கள். 5 ஆண்டுகளில் நாம் நிறை வேற்றின சாதனைகள் வேறு எந்த ஒரு மாநி லத்திலும் நடைபெற்றி ருக்காது. தி.மு.க.வை எந்த தீய சக்தி யாலும் வீழ்த்த முடி யாது.
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் பேசினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கவிஞர் கவி தைப்பித்தன், டி.கே.எஸ். இளங்கோவன், கும்மி டிப்பூண்டி கி.வேணு, கத்தி வாக்கம் நகரசபை தலை வர் ந.திருசங்கு, நகர செய லாளர்கள் பாண்டியன், முத்துசாமி, பி. ஆதிகுரு சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


பேரூராட்சிப் பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:
அமைச்சர் அய்.பெரியசாமி
திண்டுக்கல், அக் 1- பேரூராட்சிப் பகுதிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட் டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் ஆலோ சித்து வருவதை அடுத்து, மத்திய அரசு இந்த யோச னைக்கு விரைவில் ஒப்பு தல் அளிக்கும் என வரு வாய்த் துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித் தார்.
திண்டுக்கல் மாவட் டம், சிறீராமபுரத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை, அமைச்சர் வழங்கிப் பேசியதாவது: தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருப்பதால், மத்திய அரசு அதற்கு மகிழ்ச்சி யோடு ஒப்புதல் அளித்து வருகிறது. எனவே, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை, பேரூராட் சிக்குள்பட்ட கிராமங் களில் செயல்படுத்த முதல்வர் ஆலோசித்து வருகிறார்.
மத்திய அரசு இதற்கு விரைவில் ஒப்பு தல் அளிக்கும். தமிழகத் தில் 7.5 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டாக் கள் வழங்கப்பட்டுள்ளன. சிறீராமபுரத்தில் ரூ. 65 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 6 சிமென்ட் சாலைகளும், 4 இடங் களில் தண்ணீர் வசதிக ளுடன் கூடிய கழிப்பறை கள், திருமலைராயபுரம், வெள்ளமடத்துப்பட்டி, சிறீராமபுரம் ஆகிய பகு திகளில் மகளிருக்கான கழிப்பறை ஆகியன கட் டப்பட உள்ளன என்றார் அமைச்சர்.

No comments:

Post a Comment