Search This Blog

Friday, October 1, 2010

இந்தியா - சீனா இடையே உறவு வலுவடைந்து வருகிறது சீனாவில் நடந்த விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் கூட்டு தொழிற்சாலையை ஜியாங்-சூ மாகாணத்தில் திறந்து வைத்த போது எடுத்த படம்.
பீஜிங், அக்.1- இந்தியா - சீனா இடையேயான உறவு நாளுக்கு நாள் வலுவ டைந்து வருகிறது என்று சீனாவில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாட்டில் தொ ழில்முதலீடுகளை ஈர்ப்பதற் காக துணை முதல் அமைச் சர் மு.க.ஸ்டாலின் தலை மையிலான உயர்நிலைக் குழு சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. ஷாங்காய் நகரில் கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்துவைத்துப் பேசி னார். அப்போது அவர் கூறியதாவது,
கோவையைச் சேர்ந்த லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம் ஜவுளித்துறை யில் இந்திய அளவில் முன் னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஒட்டுமொத்த இந்திய ஜவுளித்துறையின் பங்க ளிப்பில் 60 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்டுள் ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் தரத்திற்கு பெயர் பெற்றவை.
இந்திய அளவில் புகழ் பெற்ற இந்த நிறுவனம் தற்போது உலக அளவில் பெரிய பன்னாட்டு நிறு வனமாக வளர்ந்திருப்ப தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். சீன நிறு வனத்துடன் கூட்டுசேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள அதன் புதிய தொழிற் சாலையை திறந்துவைப் பதில்பெருமைப்படு கிறேன். இந்த நிறுவனமும் தனது தாய்நிறுவனத்தைப் போல தரத்தை தொடர்ந்து பாதுகாக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஜவுளித்துறை எந்திரங் கள் ஏற்றுமதிக்கு சீனாவில் நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் சீனாவில் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம் கூட்டு நிறுவனம் தொடங்கியிருப் பதன் மூலம் நியாயமான விலையில் தரமான பொருள்களை உற்பத்தி செய்திட முடியும். தற் போது இந்தியாவில் இந்த நிறுவனம் எப்படி முன் னணியில் விளங்கு கிறதோ, அதேபோல் சீனாவிலும் முன்னணி நிறுவனமாக மாறும் என்பதில் சிறி தளவும் சந்தேகம் இல்லை.
பாகியான், யுவான் சுவாங் போன்ற சீன அறி ஞர்கள் இந்தியாவுக்கு வந் துள்ளனர். இதேபோல், இந்தியாவைச் சேர்ந்த போதி தர்ம முனிவர் சீனா சென்றுள்ளார். தொழில்வளர்ச்சியின் முதல் கட்ட வாய்ப்புகளை இரு நாடுகளும் தவறவிட் டாலும் தற்போது உலக அளவில் பொருளாதாரத் துறையில் இரு நாடுகளும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இரண்டு நாடு களுக்கும் மிகச்சிறப்பான எதிர்காலம் காத்திருக் கிறது. இந்தியா - சீனா இடை யேயான பொருளா தார ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவு நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகிறது. பொரு ளாதார வளர்ச் சியில் ஆசிய வட்டாரத்தில் ஜாம்ப வான்களாக விளங் கும் இரு நாடுகளும் அமைதி யையும், வளத்தையும் கொண்டு வரும். இவ்வாறு துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment