Search This Blog

Saturday, November 27, 2010

மாவீரர்நாள் அறிக்கை-தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்

மாவீரர்நாள் அறிக்கை:
26-11-2010
தமிழீழம்

எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது.

சத்தியத்தை சாட்சியாக வரித்து சத்தியப் போர் புரிந்த எமது மாவீரர்களை நாமனைவரும் பூசிக்கும் தூயஏழல் இது. விடுதலையின் முதல் வித்தாக விழி மூடிய லெப்.சங்கர் என்ற அக்கினிக் குழந்தையின் வழித் தடம் நடந்து சத்திய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் வீரப் புதல்வர்களையும், வீரப் புதல்விகளையும் தமிழினம் ஆராதிக்கும் இந்த நாட்களில் தனியரசுப் பாதையில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை வேண்டி நாமனைவரும் உறுதிபூண்டு நிற்கின்றோம்.

மரணம் என்பது மாவீரர்களுக்கு உரித்தானதன்று. அக்கினிப் பிழம்பாக, தீமைகளைச் சுட்டெரிக்கும் எரிமலையாக தமிழீழ தேசம் முழுவதும் வியாபித்து நிற்கும் மாவீரர்களை சாவு தீண்டுவதில்லை. காற்றோடு காற்றாகவும், கடலோடு கடலாகவும், மண்ணுக்குள் விதையாகவும் நித்தியத் துயில் கொள்ளும் எங்கள் வீரமறவர்கள் சாவை வென்ற சரித்திர நாயகர்கள்.

பெருந்தலைவன் வழிகாட்டுதல்படி...

எமது மாவீரர்களின் வாழ்வும், வரலாறும் வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டது. எமது மாவீரர்களின் அடியும், முடியும் எவராலும் அளவிட முடியாதது. எமது பெருந்தலைவனின் வழிகாட்டலில் களமாடி எமது மாவீரர்கள் புரிந்த சாதனைகள் எண்ணிலடங்காதது. அடங்கிக் கிடந்த தமிழினத்திற்கு முகவரியளித்த எமது தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து எமது மாவீரர்கள் புரிந்த ஈகங்களின் அர்த்த பரிமாணங்கள் மனிதகுல வரலாற்றில் என்றுமே நீடித்து நிலைத்துநிற்கும்.

காலநதியின் ஓட்டத்தில் உலக ஒழுங்கு கட்டவிழ்ந்து செல்கின்றது. புதுப்புது முடிச்சுக்களுடன் கட்டவிழும் உலக ஒழுங்கில் ஓயாத பயணமாக எமது விடுதலைப் போராட்டமும் முடிவின்றித் தொடர்கின்றது. எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் இருபது ஆண்டுகள் இயங்கிய தமிழீழ நடைமுறை அரசு எதிரியால் சிதைக்கப்பட்டு, இருண்ட பூமியாக இன்று எமது மண் மாற்றப்பட்டுள்ளது.

அவலங்களின் மத்தியில் வன்னிமண்...

அடங்காப் பற்றாக வணங்காது தலை நிமிர்ந்து நின்ற வன்னிமண் இன்று அந்நிய ஆக்கிரமிப்பின் உறை விடமாக அழிவுற்றுக் கிடக்கின்றது. ஈழத் தமிழினத்தின் வரலாற்றுப் பெருமை கூறும் யாழ்ப்பாணமும், திருகோணமலையும், மட்டக்களப்பும், அம்பாறையும் இன்று தமது வரலாற்றுப் பெருமைகளை இடிபாடுகளுக்குள் தொலைத்து நிற்கின்றன.

தமிழினத்தின் வரலாற்று வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு அங்கெல்லாம் பௌத்த விகாரைகளும், சிங்களப் பண்பாட்டுச் சின்னங்களும் முளைவிடுகின்றன. தமிழ் நிலங்களை புத்தர் சிலைகளும், அந்நிய ஆக்கிரமிப்புச் சின்னங்களும் ஆட்சிசெய்கின்றன. எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், வளங்களும் அந்நியர்களிடம் விலை பேசப்படுகின்றன. பேச்சுரிமை இழந்து, உயிர்வாழும் உரிமையும் மறுதலிக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டிய இனம் என்ற வரையறைக்குள் ஈழத் தமிழினத்தை சிங்களம் பகுத்துள்ளது.

யுத்த வெற்றிக் களிப்பில் திளைத்து நிற்கும் சிங்களம், ஆணவத்தின் உச்சத்தில் ஏறிநின்று தமிழீழ மண்ணையும், தமிழீழ மக்களையும், தமிழ் மொழியையும் துடைத்தழிக்கும் வெறிகொண்டு இனவழிப்பை அரங்கேற்றுகின்றது. தென்னிலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் காட்டாட்சி நர்த்தனமாட, தமிழீழ தாயகத்தில் சிங்களத்தின் பேயாட்சி தலைவிரித்தாடுகின்றது.

அதியுச்ச படை வலிமையுடனும், ஈவிரக்கமற்ற படைக்கலப் பிரயோகத்துடனும் எமது மக்களைக் கொன்று குவித்து எமது தாய்மண்ணை ஆக்கிரமித்த சிங்களம், எமது மாவீரர்கள் நித்தியத் துயில் கொள்ளும் கல்லறைகளையும் விட்டு வைக்கவில்லை. மாவீரர் நினைவாலயங்களை இடித்து வீழ்த்திய சிங்களம், மாவீரர் துயிலும் இல்லங்களை உழுதெறிந்து மாவீரர்களின் உறைவிடங்கள் மீது படைத் தளங்களையும், விமான ஓடு பாதைகளையும் நிறுவிக் குரூரத் திருப்தியடைந்துள்ளது.

துட்டகாமினியும் ராஜபக்சேவும்:

துட்டகாமினியின் மறுபிறப்பாக தன்னை முன்னிறுத்தி மகாவம்ச மனவுலகில் முடிசூடியிருக்கும் சிங்கள அதிபர் ராஜபக்ச, தனது மூதாதையரை விஞ்சிய இனவெறியராகத் தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றார். அன்று எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றிகொண்ட துட்டகாமினிகூட எல்லாளனுக்கு சமாதியமைத்து தமிழ் மன்னனின் வீரத்திற்கு மதிப்பளித்து நற்பெயர் தேடினான். ஆனால் துட்டகாமினியின் இரத்தவாரிசாகத் தன்னை அடையாளப்படுத்தும் ராஜபக்சவோ மாவீரர்களின் உறைவிடங்களை உழுதெறிந்து பௌத்தத்தின் காவலனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இனவெறிகொண்டு மாவீரர்களின் உறைவிடங்களை சிங்களம் உழுதெறிந்தாலும்கூட, எமது மண்ணுக்குள்ளேயே அந்த வீரமறவர்கள் நித்தியத் துயில் கொள்வதை சிங்களத்தால் தடுக்க முடியவில்லை.

எமது தேசத்தை ஆகர்சித்து நிற்கும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமையை முடக்கவும் இயலவில்லை. கல்லறைகளில் கண்ணீர் சொரிந்து, வாச மலர்களைப் பொழிந்து, மாவீரர்களுக்கு ஈகைச் சுடரேற்றும் எமது மக்களின் உரிமையை ஆயுத வலிமையால் இன்று சிங்களம் தடுத்து நிறுத்தினாலும், தமது இதயங்களில் மாவீரர்களுக்கு எமது மக்கள் அகச் சுடரேற்றுவதை சிங்களத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகெங்கும் ஒரேநேரத்தில் தமிழினம் அணிதிரண்டு அக்கினிப் பிழம்பாக மாவீரர்களைத் தரிசிப்பதையும் சிங்களத்தால் முடக்க இயலவில்லை.

எமது அன்பார்ந்த மக்களே,

வரலாறு காணாத மிகப் பெரும் சோதனையை இன்று ஈழத் தமிழினம் சந்தித்து நிற்கின்றது. போரை வெற்றி கொண்டு அமைதியை நிலை நாட்டியிருப்பதாக உலகிற்குப் பிரகடனம் செய்திருக்கும் சிங்களம், கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் எமது மண் மீதும், மக்கள் மீதும் புதிய வடிவில் போர் தொடுத்துள்ளது.

படைக்கல வலிமையில் கடந்த ஆறு தசாப்தங்களாக வெளிப்படையாக சிங்களம் அரங்கேற்றிய தமிழின அழிப்பு என்பது இன்று சத்தம்சந்தடியின்றி நிகழ்ந்தேறுகின்றது.

அபிவிருத்தியின் பெயரால் எமது வளங்கள் அந்நியர்களிடம் தாரை வார்க்கப்படுகின்றன. மீள்குடியேற்றத்தின் பெயரால் எமது மண் கபளீகரம் செய்யப்படுகின்றது. அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் பெயரால் எமது குடிநிலங்கள் வல்வளைப்புச் செய்யப்படுகின்றன. இன நல்லிணக்கத்தின் பெயரால் கடுகதியில் எமது மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் வேரூன்றுகின்றன. பௌத்த தர்மத்தின் பெயரால் எமது மக்களின் பண்பாட்டு வாழ்வு சிதைக்கப்படுகின்றது. தன்னாட்சியுரிமைக்கும், அதனடிப்படையிலான தனியரசுக்கும் உரித்தான எமது இனம், சிறுபான்மையினமாக சிறுமைப்படுத்தப்பட்டு எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், உரி மைகளும் பறிக்கப்படுகின்றன.

மறுபுறத்தில் தனது ஆயுதப் படைகளின் ஆட்பலத்தைப் பெருக்குவதிலும், படைக்கல வலிமையை தக்க வைப்பதிலும் கவனம்செலுத்தித் தனது யுத்தப்பாதீட்டிற்குப் பெரும்தொகையில் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கும் சிங்களம், தமிழீழ தாயகப் பகுதிகளை முழுஅளவில் படைவலயங்களாகக் கட்டமைத்து வருகின்றது.

இருந்த பொழுதும் தமிழினத்தின் இதயங்களில் தணியாத தாகமாக, அணையாத தீயாகக் கொழுந்துவிட்டெரியும் தமிழீழ தனியரசுக்கான இலட்சியக் கனலை சிங்களத்தால் அணைத்துவிட முடியவில்லை.

எமது பாசத்துக்குரிய மக்களே,

சிங்களம் எக்காளமிடுவது போன்று நாம் அழிந்துவிடவில்லை. எமது இலட்சியப் பயணம் ஓய்வுக்கு வந்துவிடவுமில்லை. காலநதியின் ஓட்டத்திற்கேற்ப, வரலாற்றின் வழிகாட்டலுக்கு இணங்க எமது போராட்ட வடிவம் புதுமெருகூட்டப்பட்டுப் பரிணமித்துள்ளதே தவிர எமது இலட்சியம் மாறிவிட வில்லை.

போர் வெறியர்கள் அல்ல...

நாம் போர் வெறியர்கள் அல்ல. நாம் அமைதியை விரும்பும் ஒரு தேசிய இனம். எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியையும், பண்பாட்டையும், பொருண்மிய வாழ்வையும் பேணி உலகின் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணி சகவாழ்வு புரிவதற்கே நாம் விரும்புகின்றோம். காலனித்துவ ஏகாதிபத்தியத்திடம் பறிபோய், இன்று சிங்களம் ஆக்கிரமித்திருக்கும் எமது இறையாண்மையை நிலைநாட்டி, எமது சொந்த மண்ணில் தனியரசு அமைத்து எம்மை நாமே ஆட்சிசெய்வதற்கே நாம் விரும்புகின்றோம்.

ஆயுதத்தின் மீது அலாதிப் பிரியம் கொண்டு எமது இனம் ஆயுதப் போர் புரியவில்லை. தந்தை செல்வாவின் வழிகாட்டலில் அறவழி தழுவி அன்று எமது மக்கள் போராடினார்கள். அன்று சமவுரிமை கோரிய எமது மக்கள் மீது குண்டர்களின் அடக்குமுறையை ஏவிச் சிங்களம் கலகம் புரிந்தது. பின்னர் சுயாட்சி கோரி அறப்போரை தீவிரப்படுத்திய எமது மக்கள் மீது ஆயுத அடக்குமுறையை ஏவி அரச பயங்கரவாதத்தை சிங்களம் கட்டவிழ்த்து விட்டது.

அறவழியில் எமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே அன்றைய எமது இளைய தலைமுறை ஆயுதமேந்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆயுதப் போராட்டத்திற்கான புறச்சூழலை நாம் தோற்றுவிக்கவில்லை. எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட சிங்கள ஆயுத அடக்குமுறையே எமது இளைய தலைமுறையை தற்காப்புப் பாதையில் ஆயுத மேந்துவதற்கு நிர்ப்பந்தித்தது. எமது தேசத்தின் மீது சிங்களம் ஏவிய வன்முறைப் புயலே எமது விடுதலை இயக்கத்தின் தோற்றத்திற்கும், எழுச்சிக்கும் காலாக அமைந்தது.

இருந்த பொழுதும் அமைதி வழியில் எமது உரிமைகளையும், தேசிய விடுதலையையும் வென்றெடுப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், ஒவ்வொரு இடைவழியையும் நாம் தவறவிட வில்லை.

திம்புவில் இருந்து ஜெனீவா வரை நிகழ்ந்தேறிய ஒவ்வொரு அமைதி முயற்சிகளிலும் நாம் பங்குபற்றினோம். போருக்கு ஓய்வு கொடுத்து அமைதிவழியில் தீர்வு காண்பதற்கு முன்னர் இந்தியப் பேரரசும், பின்னர் நோர்வேயும், இணைத்தலைமை நாடுகளும் அளித்த ஒவ்வொரு வாய்ப்புக்களையும் இதயசுத்தியுடன் நாம் அணுகினோம். இறுதியாக நார்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல விட்டுக்கொடுப்புக்களை எமது மக்களும், நாமும் புரிந்தோம். எமது இலட்சியத்தில் உறுதியாக நாம் நின்ற பொழுதும், உலகின் வேண்டுகைக்கு செவிசாய்த்தும், மதிப்பளித்தும் நெகிழ்வுப் போக்குடன் நாம் நடந்து கொண்டோம்.

எனினும் எமது மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு அரசியல் தீர்வு என்ற மாயைக்குள் எமது போராட்டத்தை மழுங்கடிப்பதிலேயே சிங்களம் குறியாக நின்றது. போர் நிறுத்தத்தின் விதிகளை அப்பட்டமாக மீறி எம்மை சீண்டியிழுப்பதற்கு சிங்களம் முற்பட்டது. அரசியலமைப்பு என்ற சட்டகத்திற்குள் நின்றவாறு கடும்போக்கைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளுக்கான புறச்சூழலை படிப்படியாக சிங்களம் இல்லாதொழித்த பொழுதுகூட நாம் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ளவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் புரிந்திராத புதுமையாக நாமேயொரு இடைக்கால நிர்வாக வரைவைத் தயாரித்து உலகிற்கும், சிங்கள தேசத்திற்கும் முன்வைத்தோம்.

எமது நெகிழ்வுப் போக்கை தவறாகப் புரிந்து கொண்ட சிங்களம் எம்மால் சமர்பிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிப் பேச மறுத்தது. ஒட்டுக் குழுக்களைக் கட்டமைத்து எமக்கு எதிராக நிழல் யுத்தத்தை தொடுத்தது. இருந்த பொழுதும் போர்நிறுத்த உடன்படிக்கையை நாம் முறித்துக் கொள்ளவில்லை. சமாதானத்தின் மீது கொண்ட எமது பற்றுறுதியை வெளிப்படுத்தும் நிமித்தம் உலகின் அழைப்பிற்கு மதிப்பளித்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் நாம் பங்குபற்றினோம்.

எனினும் பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கு முரணாக எமது தேசத்தின் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தை சிங்களம் தொடுத்தது. பேசித் தீர்க்க வேண்டிய மாவிலாறு நீர்ப் பிரச்சினையைப் பூதாகரப்படுத்தி எமது மண் மீது நில ஆக்கிரமிப்புப் போரை சிங்களம் ஏவிவிட்டது. ஈற்றில் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் சிங்களம் கிழித்தெறிந்தது.

ஆயுதப் போராட்டமும், போரும் நாம் விரும்பியேற்ற தெரிவுகளல்ல. இவையிரண்டும் எம்மீது திணிக்கப்பட்டவை. வன்னிப் போர் உக்கிரமடைந்த பொழுதுகூட போர் நிறுத்தம் செய்வதற்கான பற்றுறுதியை மீண்டும் மீண்டும் நாம் வெளிப்படுத்தினோம். எமது மக்களுக்காகத் தமது உயிரை வேலியாக்கிக் களமாடிய எமது வீரர்கள், மக்களுக்காக எந்தவொரு அதியுச்ச ஈகத்தையும் புரிவதற்குத் தயாராகவே இருந்தார்கள். அந்நிய ஆக்கிரமிப்பால் எமது நிலப்பரப்பு சுருங்கிய பொழுதுகூட மக்களைக் காத்து, மக்களின் துயர்துடைப்பதற்காகவே எமது வீரர்கள் அரும்பணி புரிந்தார்கள். எமது மக்களுக்காக உயிரையே ஈகம் செய்யத் துணியும் எமது விடுதலை இயக்கம், எமது மக்களின் பாதுகாப்பை உலகம் பொறுப்பெடுக்கும் என்ற நம்பிக்கையில் முள்ளிவாய்க்காலில் அதியுயர் ஈகங்களைப் புரிந்தார்கள்.

எமது அன்பார்ந்த மக்களே,

போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை. எமது மக்களின் உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு சலுகைகளுக்காக சிங்களத்தை நாம் யாசிக்கவுமில்லை. மென்வழி தழுவி எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உலக சமூகம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளித்தே கடந்த ஒன்றரை ஆண்டாக ஒருதலைப்பட்சமான முறையில் நாம் அமைதியைப் பேணி வருகின்றோம்.

நாம் எடுத்திருக்கும் இந்தத் தெரிவு மிகவும் கடினமானது. நார்வே அரசின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நாம் புரிந்த விட்டுக்கொடுப்புக்களை விட இது உன்னதமானது. அக்காலப் பகுதியில் நாம் சந்தித்த இழப்புக்களை விட இது அதிக அளவிலானது.

முள்ளிவாய்க்கால் போரில் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நிராயுதபாணிகளாகப் பேசச் சென்ற எமது அரசியல் போராளிகளை நயவஞ்சகமான முறையில் சிங்களம் படுகொலை செய்தது. களத்தில் விழுப்புண்ணெய்தி குற்றுயிராகத் துடித்த எமது போராளிகளை சிங்களம் சிறைப்பிடித்தது. உலகை நம்பி முள்ளிவாய்க்கால் கடலோரத்தில் காத்துநின்ற எமது மக்களை வகைதொகையின்றி சிங்களம் நரபலி வேட்டையாடியது.

எஞ்சிய மக்களை விலங்குகளை விடக் கேவலமான முறையில் வதைமுகாம்களில் அடைத்துக் கொடும்வதை புரிந்தது. எமது பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை ஏவிவிடப்பட்டது. முள்வேலி முகாம்களுக்குள் எமது மக்கள் சந்தித்த துயரங்கள் வார்த்தைகளில் விபரிக்க முடியாதவை. அவலங்கள் அளவிட முடியாதவை. உலகின் மனச்சாட்சி மீது நம்பிக்கை கொண்டு, மென்வழி தழுவி நின்ற எமது மக்களுக்கு சன்மானமாக சாவையே சிங்களம் பரிசளித்தது.

உலக சமூகம் மீது நம்பிக்கை:

இருந்த பொழுதும் உலகின் மனச்சாட்சி மீதும், தர்மத்தின் மீதும் நாம் நம்பிக்கை இழந்து விடவில்லை. எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது சொந்த மண்ணில் தமிழீழத் தனியரசை அமைத்து நாம் வாழ்வதற்கும் உலகம் வழி சமைக்கும் என்று நாம் நம்புகின்றோம். பொறுமையின் எல்லைக்கு இன்று எமது தேசத்தை சிங்களம் இட்டுச் சென்றாலும்கூட உலகின் நீதியான அணுகுமுறை மீதான எமது நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை.

எமது தேசத்தின் தனியரசு உரிமையை உலக சமூகம் பகிரங்கமாக ஏற்க மறுத்தாலும்கூட, எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக அடிக்கடி உலகத் தலைவர்கள் குரல் கொடுப்பது எமக்கு ஆறுதலை அளிக்கின்றது. எமது தேசத்தின் மீது இனவழிப்பை சிங்களம் கட்டவிழ்த்து விட்டிருப்பதை ஒப்புக்கொள்வதற்கு உலக சமூகம் பின்னடித்தாலும்கூட, போர்க் குற்றங்கள் பற்றி உலகத் தலைவர்கள் பேசுவது எமக்குத் தெம்பூட்டுகின்றது.

இந்த வகையில் ஈழத் தீவில் தமிழினத்தை வேரோடு துடைத்தழிக்கும் இனவழித்தொழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆறு தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தி வரும் சிங்களத்திடமிருந்து இனியும் எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழினம் எதிர்பார்ப்பது அபத்தமானது என்பதைப் புரிந்து கொண்டு, நீதியின்பால் நின்று எமது தேசத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு உலகத் தலைவர்கள் வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

பிரிவினைவாதிகள் அல்லர்...

சிங்கள தேசத்திற்கு உரித்தான மண்ணைப் பிரித்தெடுத்து அரசமைப்பதற்கு நாம் முற்படவில்லை. அன்றி பயங்கரவாத வெறிகொண்டு நாம் பிரிவினைவாதம் பேசவுமில்லை.

நாம் பயங்கரவாதிகளோ அன்றி இனச் சுத்திகரிப்பை சித்தாந்தமாகக் கொண்ட பிரிவினைவாதிகளோ அல்லர். நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, அரசியல் சுதந்திரத்திற்காக, ஐக்கிய நாடுகள் சபையும், உலகின் வளர்ச்சியடைந்த தாராண்மைத்துவ நாடுகளும் போற்றிப் பேணும் தேசிய தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் எமது தேசத்தின் இறைமையை நிலைநாட்டுவதற்காகப் போராடும் ஒரு தேசிய விடுதலை இயக்கம்.

இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு எமது தேசத்தின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, தமிழீழத் தனியரசுக்கான புறநிலைகளை தோற்றுவித்து எமது மக்களின் விடிவிற்கு வழிவகை செய்யுமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். இதேநேரத்தில் எமது மக்கள் மீது இனவழிப்புப் போரைத் திணித்த சிங்கள ஆட்சியாளர்களை போர்க் குற்றவாளிகளாக்கித் தண்டிக்குமாறும் உலக சமூகத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.

முள்ளிவாய்க்கால் போரில் நயவஞ்சகமான முறையில் சிறைப்பிடிக்கப்பட்ட எமது போராளிகளையும், எமது விடுதலை இயக்கத்திற்கு உறுதுணை நின்ற மக்களையும் கண்காணாத இடங்களில் சிங்களம் சிறை வைத்துள்ளது. இதேபோன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால நடைமுறையின் கீழும் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்ட எமது மக்களை நீதிவிசாரணைகள் இன்றி சிங்களம் சிறைவைத்துள்ளது. நீதிக்குப் புறம்பான முறையில் சிங்களம் சிறைவைத்துள்ள போர்க்கைதிகளையும், அரசியல்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்தை நாம் வேண்டி நிற்கின்றோம்.

புலம் பெயர் வாழ் தமிழர்களின் பொறுப்பு:

உலக சமூகத்தின் நீதியான அணுகுமுறை மீது நம்பிக்கை கொண்டு நிற்கும் எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு காலம் தாழ்த்தாது எமது தேசத்தின் அரசியல், சமூக, மனித உரிமைகளை உறுதிசெய்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை உலகத் தலைவர்கள் எடுப்பார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையுண்டு.

இத்தருணத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும்தூணாக விளங்கும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை தமது தேசியப் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு உரிமையுடன் நாம் கோருகின்றோம்.

தாய் மண்ணை விட்டுத் தொலை தூரம் புலம் பெயர்ந்தாலும், தமிழீழ தாயகத்திலேயே ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழர்களின் வேரும் ஆழப்பதிந்து நிற்கின்றது. தாயக மண்ணைவிட்டுப் பிரிந்த வலியை நன்கு உணர்ந்தவர்கள் என்ற வகையில், தமிழீழ தேச விடுதலைக்காக ஓயாது குரலெழுப்பி உலக சமூகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பித் தேச விடுதலையை வென்றெடுக்கும் பொறுப்பு இன்று ஒவ்வொரு புலம் பெயர்வாழ் தமிழரையும் சார்ந்துள்ளது.

இதுவரை காலமும் எமது விடுதலைப் போராட்டத்தையும், மக்களையும் தாங்கிநின்ற புலம்பெயர்வாழ் உறவுகள், தொடர்ந்தும் எமது தாயக உறவுகளுக்கான மனிதநேய உதவிகளை வழங்கி, அவர்களின் அவலங்களைத் துடைத்து, இயல்புவாழ்வை தோற்றுவிப்பதற்கான பணிகளை தொடருமாறு வேண்டுகின்றோம்.

சோதனைகள் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் புகலிட உறவுகளைப் போன்று எமது மக்களின் விடிவிற்காக அயராது குரலெழுப்பும் தமிழகத் தலைவர்களுக்கும், எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக உறவுகளுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். காலத்தின் தேவையறிந்து காலம்காலமாக எமது தொப்புள்கொடி உறவுகள் புரியும் தார்மீக உதவி தமிழீழ தேசத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியது.

இந்தியாவின் ஆதரவு...

எமது போராட்டத்திற்கான இந்தியப் பேரரசின் தார்மீக ஆதரவைப் பெற்றுத்தரும் பணியை தமிழக உறவுகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்று நாம் உரிமையுடன் கோருகின்றோம்.

சத்திய இலட்சியத்தை உயிர் மூச்சாக வரித்துக் கொண்ட எமது மாவீரர்களின் ஆன்மீக வல்லமை மகத்தானது. அந்த சரித்திர நாயகர்களை நினைவு கூரும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளாக முகிழ்க்கும் தமிழீழ தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27ஆம் நாளன்று உலகத் தமிழினத்தை அணிதிரண்டு மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றுமாறு உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம். அன்றைய நாளில் அந்நிய ஆக்கிரமிப்பில் சுடரேற்றும் வாய்ப்புக்கள் மறுதலிக்கப்பட்ட எமது உறவுகளை தமது இதயங்களில் அகச்சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எத்தனை தடைகளை எதிர்கொண்டாலும், எத்தனை இடர்களுக்கு ஆளானாலும் எம்தலைவனின் வழிகாட்டலில், மாவீரர்களின் இலட்சியப் பாதையில் பயணித்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என உறுதிபூணுவோமாக.

நன்றி.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

அ.தி.மு.க.வின் அதிகார மையமான சசிகலா!


                          திருச்சி என்றால் திருப்பு முனை என்பார்கள் அரசியல்வாதிகள். திருச்சிசங்கம் ஓட்டலில் நடந்த குடும்ப பஞ்சாயத்தில் நல்ல திருப்பம் ஏற்படும்என்று நம்புகிறாராம் அ.தி.மு.க.வின் அதிகார மையமான சசிகலா! புதியநிர்வாகிகள் நியமனத்துக்கு பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் இடையிலானபிரச்சினை மேலும் பெரிதாகிவிட்ட நிலையில் இந்த சமாதான பேச்சுவார்த்தையைநடத்தியிருக்கிறார் சசிகலா. 2 மணி நேரத்துக்கு மேலாக திவாகர், மகாதேவன், இளவரசி, என்ஜினியர் கலியபெருமாள், டாக்டர் வெங்கடேஷின் பெற்றோர் சுந்தரவதனம்- சந்தானலட்சுமி என குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களைஅழைத்து தனித்தனியாக பேசினாராம் சசிகலா. இந்த சமரச கூட்டத்தில் என்னபேசப்பட்டது என்பது பற்றி விவரம் அறிந்த நெருக்கமானவர்களிடம் கேட்டோம்.

""திருச்சியில் நடந்த மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனரும், தியானேஸ்வரன் தம்பியுமான பொன்னுசாமி மகள் நர்மதா திருமணத்தில் இளவரசியும்,அமைச்சர் நேருவும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித் தார்கள்னு நக்கீரனில்எழுதியிருந்தீங்களே... அந்த திருமண நிகழ்ச்சிக்கு பிறகு சங்கம் ஓட்டலுக்குஎல்லா குடும்ப உறுப்பினர் களையும் வரச் சொல்லியிருந்தாங்க சின்னம்மா.பொன்னுசாமி மகளை கைப் பிடித்த மாப்பிள்ளை ராஜபிரபு இளவரசியின் இரண்டாவதுமருமகன் ராஜராஜனின் தம்பி. மணமக்கள் இரண்டு பேருடைய குடும்பமும்நெருக்கமான உறவுகள் என்பதால் மன்னார்குடி குடும்பத்தில் இருந்து எல்லோரும் வந்திருந்தாங்க. டி.டி.வி.தினகரனும், அவர் மனைவி அனுராதாவும் வரலை.திருமணத்துக்கு முதல் நாள் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுநாகப்பட்டினம் போய்விட்டார் டாக்டர் வெங்கடேஷ். அதனால் சங்கம் ஓட்டல்கூட்டத்தில் டாக்டரும், டி.டி.வி.யும் மட்டும் மிஸ்ஸிங்'' என்றுமுன்னோட்டம் கொடுத்தவர்கள் சங்கத்தில் நடந்த சமரசம் பற்றியும்விளக்கினார்கள்.

""திவாகர்தான் அன்னைக்கு சின்னம்மாகிட்ட கடுமையாக சண்டை போட்டவர்.கட்சியினர் யாரும் திவாகருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஜெ.உத்தரவு போட்டபிறகும் பழைய தஞ்சாவூர் ஜில்லா ஏரியாவில் அவர் அனுமதிஇல்லாமல் எதுவும் செய்யமாட்டார்கள் கட்சிக்காரர்கள். ஒரு கட்டத்தில்கார்டனில் செல்வாக்கு பெற்றவராக டி.வி.மகாதேவன் வலம் வந்தபோதும் தன்சித்தப்பா திவாகருக்கு கட்டுப்பட்டே நடந்தார். அப்படி தஞ்சை, திருவாரூர்,நாகை மாவட்டங்களில் கட்சிக்காரர்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தவருக்குநெருக்கடி கொடுக்கும் விதமாக தஞ்சை மண்டல செயலாளராக ஓ.பி.எஸ். நியமிக்கப்பட்டபோதே கடும் அதிருப்தி அடைந்தார் திவாகர். இப்போது தஞ்சை உள்ளிட்ட 4மாவட்ட பொறுப்பாளராக டாக்டர் வெங்கடேஷை நியமித்திருப்பதில் மேலும்அதிருப்தி யில் இருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில்தான் அக்கா சசிகலாவிடம், "அந்தம்மா என்னநினைக்கிறாங்க. குடும்பத்துக்குள் கொம்பு சீவி விடும் வேலையில்இறங்கியிருக்காங்களா?. இதையெல்லாம் நீ வேடிக்கை பார்த்துக்கிட்டுஇருக்கியா? சீசனுக்கு ஒருத்தரா குடும்பத்தில் இருந்து தூக்கி விடற மாதிரிதூக்கி கீழே வீசுது. ஒட்டுமொத்தமாக குடும்பத்தில் யாருக் கும் எந்தபொறுப்பும் இல்லாமல் விட்டுடுங்க. பொறுப்பு இல்லாமலேயே கட்சிக்கு வேலைபார்க்கிறோம்'’என்று பொங்கித் தள்ளிவிட்டார். தம்பியின் கோபத்தை ஏற்கனவேஅறிந்திருந்த சின்னம்மா அவரை கன்வின்ஸ் செய்தார்.

தனது ஆதரவாளரான ஓ.எஸ்.மணியன் எம்.பி. மீது கொடூரத் தாக்குதல் நடத்தியபழனியப்பன் மீது உடனடியாக எந்த ஆக்ஷனும் எடுக்காமல் இருப்பதிலும் கடும்கோபத்தில் இருந்தார் திவாகர். இப்படியே விட்டீங்கன்னா கட்சிக்காரன் யாரும்கட்டுப்பாட்டில் இருக்கமாட்டான் என்று கடுப்படித்த தம்பி திவாகரின்கோபத்தை தணிக்க உடனடியாக பழனியப்பனை கட்சியில் இருந்து நீக்குவதற்கானஏற்பாடு களை செய்தார் சின்னம்மா. நாகையில் நடந்த இளைஞர் பாசறைகூட்டத்தினால் திருமணத்திற்கும், சங்கம் ஓட்டல் சமரச கூட்டத்திற்கும்வரமுடியாமல் போன டாக்டர் வெங்கடேஷ் சார்பில் அவரின் பெற்றோர் அங்கேஇருந்தார்கள். சித்தப்பா திவாகருடனும், அண்ணன் மகாதேவனுடனும் சுமுகமாகஇருக்க வேண்டும் என்கிற டாக்டரின் விருப்பத்தை சொல்லி அவர் யாருக்கும்எதிரியாக இருக்க விரும்பவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்'' என்று விரிவாக சொல்லி முடித்தார்கள் குடும்பத்துக்கு நெருக்கமானவர் கள்.



அதே நேரத்தில் இரண்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாமல்திரும்பியிருக்கிறார் சசிகலா. ""இளவரசியின் சம்பந்தியான என்ஜினியர்கலியபெருமாளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருவது சரியில்லை. அவர்எதுக்கெடுத்தாலும் நேரடியாக அம்மாவுடன் பேசிக்கொள்கிறார். அது உங்களுக்கேஅபாயமாக முடியும்'' என்று திவாகர், மகாதேவன், வெங்கடேஷின் பெற்றோர் எனஅத்தனை பேரும் ஒரே குரலில் சொல்லி யிருக்கிறார்கள். கலியபெரு மாளும்இவர்களோடு சமா தானமாக போக விருப்பம் காண் பிக்காததால் தொடர்கிறதுபனிப்போர். அதே போல டாக்டர் வெங்கடேஷ்- டி.டி.வி. தினகரன் இடையிலானபிரச்சினை உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. தன்னுடைய சொந்த மைத்துனராகஇருந்தாலும் வெங்கடேஷை தன்னுடைய முக்கிய எதிரியாக பார்க்கதொடங்கியிருக்கிறாராம் டி.டி.வி.தினகரன். டாக்டர் வெங்கடேஷுக்கு எதிரானசெய்திகளைத் தொடர்ந்து பத்திரிகைகள் மூலம் பரப்பி வரும் வேலையில்டி.டி.வி.தினகரன் நேரடி யாக இறங்கியிருப்பதாக சொல்லும் வெங்கடேஷ் தரப்புஅதற்கான ஆதாரங்களையும் திரட்டி யிருக்கிறது. இது பற்றியும் சசிகலாவிடம்சொல்லப்பட்டதாம்.


விரைவில் இந்த மோதலில் ஒரு முடிவு வந்துவிடும் என்கிறார்கள் இரண்டுதரப்புக்கும் நெருக்கமானவர்கள். தேர்தலுக்கு முன்பு குடும்பத்தில் சமரசம்உண்டாக்கிவிடவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் சசிகலா.

-ச.கார்த்திகைச்செல்வன்
படங்கள்: மகி

Friday, November 26, 2010

பதினான்கு வருடங்களாக பல்வேறு காரணங்கள் கூறி விசாரணையை இழுத் தடித்தடிக்கும் ஜெயலலிதா

ன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 14 வருடங்களாக ஜெயலலிதா, இழு... இழு... என இழுத்தடிப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. இளைஞரணியினருக்கு உத்திரவிட்டிருந்தார் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4-ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. இளைஞரணியினர், ஜெ.வை கண்டித்து ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு காரணமான, ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 14 வருடங்களாக என்னதான் நடக்கிறது என்பதை விசாரித்தோம்.

18-09-1996

முதல் தகவல் அறிக்கை வழக்கு. குற்ற எண்: 13 ஏ.சி./96/ஹெட்குவார்ட்டர்ஸ் Charge u/s.13(1) (e) r/w 13(2) of the P.C.Act and u/s.120-B r/w 109 IPC  (கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள் இந்தியாவிற்குள் உள்ளவை.)

04-06-1997

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

05-06-1997

நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை விசா ரணைக்கு ஏற்றுக் கொண்டு குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்பியது.

21-10-1997

2, 3 மற்றும் 4-ம் குற்றவாளி களான சசிகலா, சுதாகரன், இளவரசி தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்து 4 குற்றவாளிகள் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

02-09-2000

இரண்டாவது வழக்கு. குற்ற எண்: 2 ஏ.சி./2000/ஹெட் குவார்ட்டர்ஸ் Charge u/s.13(1) (e) r/w 13(2) of the P.C.Act and u/s.120-B r/w 109 IPC  (கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள் லண்டனில் உள்ளவை.)

23-03-2001

2-வது வழக் கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது.

17-04-2001

குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டது. (முதல் குற்றவாளி ஜெயலலிதாவை தலைமையாகக் கொண்ட அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது. முதல் குற்றவாளி ஜெயலலிதா மே 2001-ல் முதலமைச்ச ரானார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கண்டனத் தால் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 21-09-2001-ல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதே சமயம், முதல் குற்றவாளி ஜெயலலிதா 02-03-2002-ல்  இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.)

நவ 2002-பிப் 2003

76 சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட்டு விசாரிக்கப் பட்டனர். அவர்கள் ஏற்கனவே கொடுத்த வாக்குமூலத்திலிருந்து பல்டி அடித்தனர்.

21-02-2003

அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவுற்றது.

24-02-2003

குற்றவாளிகளிடம் 313 சி.ஆர்.பி.சி. படி கேள்விகள் கேட்கப்பட்டது.

27-02-2003

குற்றவாளிகள் தரப்பில் சாட்சிகள் 1 மற்றும் 2 விசாரிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.

28-02-2003

கடந்த தேதியில் நடைபெற்ற விவாதம் தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் டிரான்ஸ்பர் பெட்டிஷன் 77-78/2003-ல் இந்த வழக்கிற்கு தடைவிதித்தது. 18-11-2003 இரண்டு வழக்குகளும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றத்திற்கு சிறப்பு வழக்கு எண்.208/2004 மற்றும் 209/2004 ஆக உச்சநீதிமன்றத்தால் மாற்றம் செய்யப்பட்டது.

28-03-2005

சாட்சிகளின் வாக்குமூலங்களும் வழக்கு ஆவணங்களும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகளுக்கும் மற்றும் தமிழக அரசிற்கும் வழங்கப்பட்டது.

27-06-2005

முதல் குற்றவாளி ஜெயலலிதா 11-02-2002-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து  நிலுவையில் இருந்த மனுவை பெங்களூர் நீதிமன்றம் விசாரித்து 2 வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டது.

ஜூலை 2005

2 வழக்குகளையும் சேர்த்ததை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் எஸ்.எல்.பி. 3828/2005 என்ற மனு பேராசிரியரால் தாக்கல் செய்யப்பட்டது.

05-08-2005

உச்சநீதிமன்றம் 3828/2005 வழக்கில் பெங்களூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்தது.

07-12-2009

உயர்நீதிமன்றம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எண்:938/2009-ஐ ஏற்றுக் கொண்டு 2-வது வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது.

30-01-2010

சிறப்பு அரசு வழக்கறிஞர் 45 சாட்சிகளை திரும்ப அழைப்பதற்கு அனுமதி கேட்டு மனு எண்.: 321/2010 தாக்கல் செய்தார். அதே நாளில், குற்றவாளிகள் தரப்பில் வழக்கு விசாரணைக்கு அனுமதித்த உத்தரவில் காட்டப்பட்டிருந்த 2 அறிக்கைகள் வழக்கில் தாக்கல் செய்வதற்காக அனுமதி கேட்டு மனு எண்: 322/2010 தாக்கல் செய்தது.

25-02-2010

சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு எண்:321/2010 நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த மனு எண்: 322/2010 நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

03-03-2010

அரசு தரப்பு சாட்சிகள் 42 பேரும் நேரில் ஆஜராகுமாறு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சாட்சிகள் விசாரணை 18-03-2010 முதல் 26-03-2010 வரை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது. அதே நாளில் குற்றவாளிகள் தரப்பில் மனு எண்: 340 மற்றும் 341 தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் சம்மன்களை ஒப்புதல் அட்டையுடன்    கூடிய பதிவு அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும் என்று குற்றவாளிகள் கோரினர்.

04-03-2010

03-03-2010-ல் 42 அரசு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டதை மாற்றம் செய்யக் கோரி (மனு எண்: 346) குற்றவாளிகள் மனு தாக்கல் செய்தனர். அதே நாளில் 340, 341 மற்றும் 346 அனைத்திலும் விவாதம் நடைபெற்றது.

05-03-2010

மனு எண்: 340, 341, 346-ஐ தள்ளுபடி செய்தது விசாரணை நீதிமன்றம்

மார்ச் 2003

05-06-1997-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து மனு எண்: 79/2010 கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் குற்றவாளிகள்.

10-03-2010

79/2010 கர்நாடக உயர்நீதிமன்றத்தால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

19-03-2010

மனு எண்: 79/2010 தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. 2248/2010 குற்ற வாளிகள் தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கு பற்றி சில கருத்துக்களை தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

22-03-2010

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தேதிகள் மற்றும் விசாரணையை மறு பட்டியலிட்டு 03-05-2010-க்கு வழக்கை மீண்டும் துவக்க நாள் குறித்தது விசாரணை நீதிமன்றம்.

18-04-2010

இந்த வழக்கின், விசாரணை அதிகாரிக்கு அனு மதி வழங்கப்படவில்லை. அதனால் இதன் விசாரணை முழுவதும் சட்டவிரோதமானது என்றும் வழக்கு விசாரணை முழுவதையும் இத்துடன் நிறுத்த வேண்டும் என்றும் குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு மனு எண்: 359-ஐ தாக்கல் செய்தனர்.

27-04-2010

ஆனால் இந்த மனுவை (மனு எண்: 359) விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

07-05-2010

11-05-2010-ல் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை வருகிறது அதனால் இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்தில் முதல் குற்றவாளி ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். அதனால் வழக்கு 11-05-2010-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

11-05-2010

விசாரணை நீதிமன்றத்தில் மனு எண்: 359 தள்ளுபடி செய்யப்பட்டதால் அதனை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி.3836/2010 மனுவை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் குற்ற நடைமுறை சட்டம் 482-ன்    படி தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து இந்த      மனு வாபஸ் பெறப்பட்டது.

மே 2010

70,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் கண்ட ஆவணங்களில் 3 நகல்கள் தேவையென முதல் குற்றவாளி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.

21-07-2010

3-ம் குற்றவாளி சுதாகரன் சார்பிலும் அதே மனு தாக்கல் செய்யப்பட்டது.

22-07-2010

மனு எண்: 396, விசாரணை நீதிமன்றத்தால் சில வழிகாட்டுதல்களுடன் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் சாட்சிகள் ஆஜராகியிருந்தபோதிலும் குற்றவாளிகள் வழக்கை ஒத்திவைக்க கேட்டுக் கொண்டதால் வழக்கு விசாரணை 6-8-2010, 9-8-2010, 11-08-2010 மற்றும்  13-08-2010 ஆகிய தேதிகளில் சாட்சிகளை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

29-07-2010

மனு எண்: 396 நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முதல் குற்றவாளி ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ( வழக்கு எண்: 3748/2010 ).

30-07-2010

மனு எண்: 396-ல் வழங்கப்பட்ட உத்தரவில் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் ஒரு பகுதிக்கு அரசு சார்பில் அரசின் சிறப்பு வழக்கறிஞர்   எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார் (வழக்கு எண்: 3766/2010). கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 16-08-2010-ல் மேற்படி இரண்டு மனுக்களும் விசாரணைக்கு வருகின்றன.

இப்படி கடந்த பதினான்கு வருடங்களாக பல்வேறு காரணங்கள் கூறி விசாரணையை ஜெயலலிதா இழுத் தடித்துக் கொண்டேயிருந்தாலும் இறுதியில் இவ்வழக்கில் தனக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்றும் இந்த வழக்கிலிருந்து நாம் தப்பிக்க முடியாது என்பதை ஜெயலலிதா உணர்ந்தே இருப்பதாலும்தான் மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்துக் கொண் டிருக்கிறார் என்று வழக்கறிஞர்கள் வட்டாரம் கூறுகின்றது.

-இளையசெல்வன்

Thursday, November 25, 2010

ஜெயலலிதாவும் -கம்யூனிஸ்டுகளும்

பழைய ஞாபகம்; இல்லையோ!
 திருமங்கலம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வை ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்கு கேட்கும்போது - தி.மு.க. மீது கடுமையாக பாய்ச்சல் நடத்துகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. பற்றியும், அதன் தலைவி ஜெயலலிதா பற்றியும் சுமார் இருபது மாதங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களும், அதே காலக் கட்டத்தில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி உதிர்த்த சில கருத்துக்களும் - இங்கே தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. அதனைப் படித்துப் பார்த்தால் நம் எண்ணத்தில் தோன்றுவது யாருக்கும் ஞாபகமில்லையோ! என்பதுதான்.

***

மதுரைமேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராசன் பேசியது. (தீக்கதிர் - 19-6-2007)

மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் இந்தியாவின் - தமிழகத்தின் அரசியல் அதிகாரம் எந்தத் திசை வழியில் செல்ல வேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருவோம் என வாக்குறுதி தந்த போது அதை ஜெயலலிதா கேலி பேசினார். தி.மு.க. வாக்குகள் பெறுவதற்காக இப்படி வாக்குறுதி தருவதாக கூறினார். பின் அவரே சில நாட்களில் 20 கிலோ அரிசி தருவதாக அந்தர் பல்டி அடித்தார். ஆனாலும் அவர் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். அப்படிப்பட்ட அ.தி.மு.க.தான் மேற்குத் தொகுதியில் வாக்கு கேட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீலகிரியில் 800 ஏக்கர் சொகுசு பங்களாவில் தங்கியிருந்ததாக தொடர்ந்து செய்தி வருகிறதே, அதற்கு அவர் பதில் அளிக்க வேண்டாமா? நில உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் 50 ஏக்கர் நிலத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்ற நிலையில் ஜெயலலிதா எப்படி 800 ஏக்கர் நிலத்தில் பங்களா கட்டினார்? என்ற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள்.


கடந்த 12 மாதங்களாக மைனாரிட்டி தி.மு.க. அரசை தொலைத்தே தீருவேன் என ஜெயலலிதா பேசி வருகிறார். ஒரு கட்சியை அழிக்கவா தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்காகவா கட்சி கொள்கை வைத்துள்ளது?

17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என அ.தி.மு.க. கூக்குரல் இடுகிறது. மத வெறிக்கு சாதகமாக துணை நின்று சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டேன் என அச்சக்திகளுக்கு ஜெயலலிதா துணை நிற்கிறார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவர் வற்புறுத்தியதால் தான் வாஜ்பாய் சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி தந்ததாக மேடைக்கு மேடை பேசி வந்தார். தற்போது அதற்கு எதிராக ஜெயலலிதா மதவெறியைக் கிளப்பும் வகையில் பேசி வருவதை எதிர்த்துப் பேச முடியாமல் வைகோ சிக்கித் தவிக்கிறார்.

மதவெறிக்கு பின்னால் நின்று பக்க மேளம் வாசிப்பது தான் அ.தி.மு.க. வின் இன்றைய நிலை.

தமிழகத்தின் தி.மு.க. அரசு நீடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

கடந்த ஆட்சியின் போது நானும் சி.பி.அய். மாநிலச் செயலாளர் தா. பாண்டியனும் ஜெயலலிதாவைச் சந்தித்து 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தருவது சரியல்ல என்றும், அதை நிலம் இல்லாத கூலி விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தினோம்.

அதற்கு ஜெயலலிதா, முதலில் நிலம் கேட்பீர்கள், பிறகு அதை உழுவதற்கு பணம் கேட்பீர்கள் என்று கேலி பேசினார். அப்படிப் பட்டவர் எந்த முகத்தோடு ஓட்டு கேட்க வருகிறார்?

******************************
*******************

மதுரை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராசன் பேசியது. (தீக்கதிர் - 25-6-2007)

இந்தியாவின் பெரிய பதவியான ஜனாதிபதி தேர்தலுக்கு மாதர் குலப் பிரதிநிதியாக பிரதிபா பாட்டீலை அறிவித்தபோது நாடே மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது. அதை எதிர்த்து தமிழ் நாட்டில் இருந்து ஒரு அவலக் குரல் - பிரதிபா பாட்டீல் தேர்வு அரசியல் ஜோக் என ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதா கூட்டத்தின் இந்த அகம்பாவத்திற்கு மேற்குத் தொகுதி மக்கள் சரியான அடி கொடுக்க வேண்டும்.

தேச நலன் கருதி, எடுத்த சிறந்த முடிவை அரசியல் ஜோக் என்பது அகம்பாவம். உத்தரப்பிரதேசத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யச் சென்ற ஜெயலலிதா பா.ஜ.க. பற்றி வாயே திறக்க வில்லை. நாளை மதவெறிக் கூட்டத்தோடு இணைக்க ஜெயலலிதா எடுக்கும் முயற்சி தான் இது. இதை வாக்காளப் பெருமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்காலத்தில் வதந்திகளைப் பரப்புவது தேசத் துரோகம் என்று கூறப்பட்டது. தற்போது ஜெயலலிதா வதந்திகளைப் பரப்பி வருகிறார். தமிழகத்தில் குடிசைகளுக்கு பட்டா வழங்கப்படுவது குறித்து குறை சொல்ல ஜெயலலிதாவிற்கு அருகதை உள்ளதா?

************************************************************
திண்டுக்கல் கூட்டத்தில் என். வரதராசன் பேச்சு. (தீக்கதிர் - 15.6.2006)

ரூபாய் இரண்டுக்கு ஒரு கிலோ அரிசி வழங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அ.தி.மு.க. வின் அராஜக ஆட்சியால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியில் நெசவுத் தொழில் சீரழிக்கப் பட்டது. தீப்பெட்டித் தொழில் நசிந்து போனது. சேலம் மாவட்டத்தில் கொலுசு தயாரிக்கும் தொழிலாளிகள் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக என்னிடம் மனு கொடுத்தார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழகம் முழுவதும் உள்ள சிறு தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாயின. சட்டமன்றத்தில் உள்ளவர்களை காட்டு மிராண்டிகள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அத்தகைய ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவு கட்டியதோடு நமது கடமை முடிந்து விடவில்லை. அவர்களை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும். மதுரை தொகுதி சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் பேசியது (தீக்கதிர், 16-7-2006)

முதல்வர் கருணாநிதி உறுதியாக தொழிலாளி பக்கம் நின்று போராட்டத்தை வெற்றி அடையச் செய்ததை மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. நெய்வேலி போராட்டத்திற்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தார். ஆட்சியில் இருந்தால் ஒரு நிலை, இல்லை என்றால் ஒரு நிலை என அவர் பம்மாத்து செய்கிறார். ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களை பழிவாங்கியவர்தானே ஜெயலலிதா. ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கருணாநிதி, என். வரதராசன், நல்லகண்ணு போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்கு தொடுத்தவர்தானே ஜெயலலிதா? அரசு சிறப்பாக நடைபெற தொழிலாளர்கள் சில நேரங்களில் கசப்பு மருந்தைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமென்று சொன்னவர்தானே ஜெயலலிதா.

**************************************************************

விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் டி.கே. ரெங்கராஜன் (தீக்கதிர் 4-8-2006)

ஜெயலலிதா சட்டமன்றத்தில் 2 மணி நேரம் பேசியிருக்கிறார். ஆனால் அவ்வளவு நேரம் பேசியதில் எவ்வித உருப்படியான ஆலோசனையும் இல்லை. தி.மு.க. வை தோழமைக் கட்சிகள் தவறாக வழிகாட்டுவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். கடந்தமுறை ஜெயலலி தாவுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோமே, அப்போதும் இப்படித்தான் நடந்து கொண்டோமா? வண்ணத் தொலைக்காட்சி கொடுக்கவே முடியாது எனக் கூறியவர் - இப்போது அதன் அளவு பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். சினிமாவுக்கு கால்ஷீட் கொடுப்பது போல சட்டமன்றக் கூட்டத்திற்கு வந்து போகிறார்.

**************************************************************************

சென்னை கூட்டத்தில் என். வரதராஜன் பேச்சு. (தீக்கதிர் - 13-8-2006)

தி.மு.க. அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ள மக்களுக்கான பல சிறந்த திட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் தேவையின்றி எதிர்க்கிற கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கவும் லாயக்கற்றதாக அக்கட்சி மாறியிருக்கிறது.

சிறுதாவூரில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா தங்குவதற்காக கட்டப்பட்ட பங்களா யாருக்குச் சொந்தமானது என்பதைக்கூட சொல்ல முடியாமல் தட்டுத் தடுமாறுகிறார்.

சட்டமன்றத்தில் எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். கம்யூனிஸ்டுகள் தி.மு.க. அரசுக்கு ஜால்ரா போடுவதாக கூசாமல் பேசுகிறார்கள். யார் ஜால்ரா போடுவது? உள்நாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் பன்னாட்டு பகாசூர முதலாளிகளுக்கும் ஜால்ரா போட்டது அ.தி.மு.க. ஆட்சிதான் என்பதை மக்கள் அறிவார்கள். தமிழக முதலமைச்சர் அவர்கள் ரேஷன் கடைகளில் இருந்து நல்ல அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறோம்.
கல்விக் கொள்ளைக்குத்தான் கடந்த கால ஜெயலலிதா அரசு உடந்தையாக இருந்தது.

****************************************************************


மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் என். வரதராசன் பேச்சுக்களிலிருந்து சில பகுதிகள்.


வண்டலூர் பகுதியில் துணை நகரம் அமைப்பது குறித்து அரசின் அறிவிப்பைக் கண்டித்து ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அது மிகவும் ஆரோக்கியமற்ற முறையிலும், முதலமைச்சர் கருணாநிதி மீது தனி நபர் வெறுப்பைக் காட்டுகிற முறையிலும் வெளி வந்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

துணை நகரம் சம்பந்தமான விஷயங்களை விட்டு விட்டு, இன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினரையும், சொந்தபந்தங்களையும் குறி வைத்து வன்மத்துடன் செய்யப்பட்ட தனி நபர் தாக்குதல் நடவடிக்கையாகும்.

ஜெயலலிதாவின் இந்த அணுகுமுறை, காழ்ப்புணர்ச்சியாகவும், அருவருக்கத் தக்க வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தக் கூடிய விவாதமாகவும் மாறி சட்ட மன்றம் முடக்கப் படுவதில் சென்று முடிவடைகிறது.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு அவை நடவடிக்கைகளை குலைப்பதிலும், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை திசைதிருப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். இது சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி உள்ளது. 2006 மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அவர்களின் அராஜக மக்கள் விரோதப் போக்கிற்கு மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் புகட்டிய பாடத்தை அவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. (தீக்கதிர்- 4-9-2006)

அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு பல்லாயிரக்கணக்கானோர் மனு செய்தனர். ஆனால் அவற்றை அந்த ஆட்சி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது. (என். வரதராசன் பேச்சு - தீக்கதிர் - 9-10-2006)


************************************************************

கம்யூனிஸ்ட்கள் குறித்து பேரவையில் ஜெயலலிதாவின் பாராட்டுகள்.

கம்யூனிஸ்டுகளால் எந்தக் காலத்திலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அதனால்தான் எங்களுடன் கூட்டணி சேர்ந்து இடங்களை வென்று விட்டு, எங்களையே சதா சர்வ காலமும் குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள் (ஜெயலலிதா - 27-3-2003)

நாங்கள் கம்யூனிஸ்ட் பக்கம் கையைக் காட்டினால்தான் அவர்கள் இந்த அவைக்கே வந்து தங்கள் கருத்துகளைக் கூற முடியும் (ஜெயலலிதா - 27-3-2003)

மார்க்சின் சித்தாந்தத்தினைப் பற்றி அந்தக் கட்சியின் உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். இதனால்தான் இந்தக் கம்யூனிஸ்ட் இயக்கங்களே மக்களுக்குப் பயன்படாமல் போய்விட்டன. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இரண்டே காரியங்களைத்தான் செய்கின்றன. ஒன்று எப்போது பார்த்தாலும், எங்கே பார்த்தாலும் போராட்டம்; போராட்டம், போராட்டம்; இல்லையென்றால் பொலிட் பீரோ, செயற்குழு என்று ஒரு கூட்டம் போட்டு 3 நாட்கள், 5 நாட்கள், 7 நாட்கள் என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். இதைத் தவிர வேறு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை (ஜெயலலிதா - 8-4-2003)

மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதன் இரகசியம் - தேர்தலின் போது சுபைபபே செய்கிறார்கள். (ஜெயலலிதா - 8-4-2003)

மாண்புமிகு உறுப்பினர் தங்களுடைய கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகின்ற மேற்கு வங்காளத்தைப் பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார். இங்கே ஒரு ஆதாரத்தை மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவருக்கு நான் கொடுக்க விரும்புகிறேன். இதில் மேற்கு வங்காளத்தில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து, சட்டசபை முன்பு போராட்டம் நடந்தது. அப்போது மறியல் செய்த ஒருவரை போலீஸ்காரர் துப்பாக்கியால் அடித்து விரட்டும் காட்சி என்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கோவை - மாலைமலர் பத்திரிகையிலே வெளிவந்தது. அதற்கு தலைப்பே தர்ம அடி என்று கொடுக்கப்பட்டிருக்கிறது (ஜெயலலிதா - 8-4-2003)

பசியைப் போக்குவது தான் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் என்கிறார். ஆனால் எந்தக் கம்யூனிஸ்ட் ஆட்சியிலும் சத்துணவுத்திட்டமோ, அன்னதானத்திட்டமோ இல்லை (ஜெயலலிதா - 28-4-2003)

கம்யூனிஸ்ட்கள் வெத்து வேட்டுப் போராட்டங்களை நடத்துவார்கள்; மேடையிலே முழங்குவார்கள்; ஆங்காங்கே கொடி பிடித்துக்கொண்டு நிற்பார்கள் (ஜெயலலிதா - 10-32005).

------------------- நன்றி :"முரசொலி", 4.1.2009

Tuesday, November 23, 2010

ஜெ வோடு விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தாலும் ...! - போட்டு தாக்கும் துரைமுருகன்

தி.மு.க.வை தாக்கிப் பேசும் தனது சுருதியை சமீபகாலமாக அதி கப்படுத்திக் கொண்டிருக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். இதுகுறித்தும், நடப்பு அரசியல் குறித்தும் தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரும் சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகனை சந்தித்து கேட்டபோது நக்கலாகவும், சீரியஸாகவும் பதில் தந்தார் துரைமுருகன்.

* தி.மு.க.வை ஆட்சியிலிருந்து இறக்குவதுதான் என் லட்சியம்’என்று விஜயகாந்த் சபதம் போட்டிருக்கிறாரே?

முதலில் இப்படி ஒரு கேள்வியை நான் எதிர்கொள்வதற்காக வருத்தப்படுகிறேன். ஏன்னா... தலைவர் கலைஞருக்கு நிகரான ஒரு தலைவர் கருத்து சொல்லியிருந்தால் அதற்கு நான் பதில் சொல்லலாம் அல்லது தி.மு. கழகத்திற்கு இணையான ஒரு கட்சி கருத்துச் சொல்லியிருந்தால் அதற்கு பதில் சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆனால் விஜயகாந்த்.... கலைஞருக்கோ கழகத்திற்கோ நிகரான இணையானவரா? அதனால்தான் வருத்தப் படுவதாகச் சொன்னேன். சரி.... கேள்விக்கு வருவோம்.... பாவம் விஜயகாந்த்... தேர்தலுக்கு தேர்தல் தலையைத் தூக்கி நான் இருக்கிறேன் என காட்டுபவராக இருக்கிறார். இதைத் தவிர அவரிடம் என்ன இருக்கிறது?

ஒவ்வொரு வருஷமும் பொங்கல் சமயத்தில் வண்டிமாடுகள் மஞ்சுவிரட்டுக்காக அலங்கரிக்கப்பட்டு ஓடும். இதற் காகவே அந்த சமயத்தில் மாடுகள் தலையைத் தூக்கும். அது போல தேர்தலுக்கு தேர்தல் தலையைத் தூக்குகிற விஜயகாந்த், தி.மு.க. வை ஆட்சியில் இருந்து இறக்கு வேன் என சபதம் போடுகிறாரா? நல்ல கதை. ஒவ்வொரு நாளும் பொழுது விடியும், அவருக்கு தெளியும். யாராவது பக்கத்தில் இருப்பவர்கள் தேர்தல் வருவதைப் பற்றி அவருக்குச் சொல்லுவார்கள். இவரும் ஒரு நாளைக்கு மக்களோட கூட் டணி என்பார். மறு நாளைக்கு நான் இல்லாம யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பார், இன்னொரு நாளைக்கு அவரை விட மாட்டேன், இவரை விடமாட்டேன் என்று கதறுவார். சில நேரங்களில் அரசியலில் இவரைப்போல ஜோக் அடிக்கிற போர்வழிகள் தேவைப்படு கிறார்கள். அந்த வரிசையில் அவர் இருந்துவிட்டுப் போகட்டும்.

தேர்தல் நேரத்தில் ஒரு அப்பாவியை அழைத்து அவர் பாக் கெட்டில் இருக்கிற பணத்தை எடுத்து டெபாஸிட் கட்டவைத்து தேர்தலில் நிற்கவைப்பார். அவருக்கு டெபாஸிட் போய்விடும். அடுத்த தேர்தலில் இன்னொரு அப்பாவி மாட்டுவார். அவருக்கும் டெபாஸிட் போய்விடும். தேர்தலில் டெபாஸிட் இழப்பதையே தொழிலாக கொண்ட ஒரு கட்சியை நடத்தும் விஜயகாந்த், தி.மு.க.வை விமர்சிப்பதா? தி.மு.க. ஒரு அகன்ற ஆறு. விஜயகாந்த் ஒரு வாய்க்கால் கூட இல்லை. அப்படிப் பட்டவருக்கு சவால் விடவும் சபதம் போடவும் தகுதியுமில்லை, மக்கள் செல்வாக்கும் இல்லை.

* ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் கூட்டணிக்காக நெருங்கி விட்டதால்தான் தி.மு.க.வை விஜயகாந்த் தாக்குகிறார் என்கிறார்களே?

தேர்தல் காலத்தில் யாரும் யாரோடும் கூட்டணி சேரலாம் அல்லது சேராமல் போகலாம். ஆனால் யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை யாரும் தடுத்து விட முடியாது. ஜெயலலிதா-விஜயகாந்த் கூட்டணி எல்லாம் ஓட்டப் பந்தயத்திற்கு உதவாத கூட்டணி.

* அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகளின் அடிப்படையில் அந்த கூட்டணிக்கு 35 சதவீத வாக்கு பலம் இருக்கிறது. அந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் 8 சதவீத வாக்குபலம் கொண்ட விஜயகாந்த்தின் தே.மு.தி.க. கூட்டணி வைக்கும் பட்சத்தில் அ.தி.மு.க. கூட்டணியின் பலம் 43 சதவீதமாக அதிகரித்துவிடும். இது தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கி றார்களே?

அ.தி.மு.க. கூட் டணியில் கட்சிகளின் எண்ணிக்கை கூடலாமே தவிர அவர்களின் வாக்கு எண்ணிக்கை கூடப் போவதில்லை. அவர்கள் போடும் வாக்கு சதவீத மனக்கணக்குகளை யெல்லாம் மாற்றி அமைக்கும் வல்லமையும் ராஜதந்திரமும் கலைஞருக்குத் தெரியும். அதனால் இந்த சதவீத கணக்குகளைச் சொல்லியெல்லாம் எங்களை பயமுறுத்த முடியாது.

* தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கடுமையான விமர்சனங்களால் தி.மு.க. கூட்டணி பலகீனமடைந்துள்ளதாக காங்கிரஸ்காரர்களிடமே எதிரொலிக்கிறதே?

காங்கிரஸ் கட்சி தி.மு.க.வோடு இருக்கிறபோதும் சரி... அ.தி.மு.க.வோடு இருக்கிற போதும் சரி... இரண்டு கட்சிகளுக்கிடையே குறுக்குசால் ஓட்டுகிறவர்கள் இருப்பது உண்டு. அப்படி குறுக்குசால் ஓட்டுபவர்கள் ஒரு கட்டத் துக்குப் பிறகு அடிபட்டு போவதும் உண்டு. அப்படிப் பட்டவர்களின் விமர்சனங்களால் எல்லாம் கூட்டணி பலவீனமாகிவிடாது. இதுபோன்ற சலசலப்புகள் எல்லாம் இந்த கூட்டணியின் பயணத்தின் வேகத்தைக் குறைத்து விடவும் முடியாது. அதனால், இதையெல்லாம் நாங்கள் பெரிதுபடுத்துவது இல்லை.

* தி.மு.க. கூட்டணிக்குள் மீண்டும் நுழைவதற்கு பா.ம.க. முயற்சிக்கிறது. இது தொடர்பாக ஜி.கே.மணி உங்களை அடிக்கடி சந்திக்கிறார். ஆனால், டாக்டர் ராமதாஸோ தி.மு.க.வை விமர்சிக்கிறார். இந்த நிலையில் பா.ம.க.வைப் பற்றி தி.மு.க.வின் நிலைப்பாடுதான் என்ன?

ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க. குழுவினர் ஒருமுறை கலைஞரை சந்தித்து ஆலோசித்து விட்டுப் போனார்கள். அதன்பிறகு, அவர்களிடத்திலிருந்து எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களின் கட்சி நலன் சார்ந்து எந்த முடிவும் எடுக்கலாம். என்ன முடிவு எடுப்பார்கள்ங்கிறது எனக்குத் தெரியாது. ஆனால், யேசுநாதர் சொன்னதுபோல, "இதய சுத்தியுடன் என்னிடத்தில் வருவோரை புறம் தள்ளுவதில்லை' என்பது எங்கள் சித்தாந்தம்.

* தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிகள் எப்படி அமையும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

கூட்டணிகள் எப்படி அமையும் என்று அனுமானிக்கக் கூடிய கட்டம் இன்னும் வரவில்லை என்பதுதான் என் கணிப்பு. ஒரு கட்சி கூட இன்னும் தேர்தல் கிரவுண்ட்டுக்கு வரவில்லை. எல்லா கட்சிகளுமே தனித்தனியாக மரத்தடியில் நின்றுகொண்டு எக்ஸர் சைஸ்தான் பண்ணிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், ஒன்றை மட்டும் என்னால் கணிக்க முடியும். அது... தி.மு.க. -காங்கிரஸ் -விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி நிலை யானது என்பதுதான். எங்கள் கூட்டணிக்குள் மேலும் சிலர் இணையலாம். ஆனால், இணையத் துடிப்பவர்கள் ரெண்டு, மூணு சீட்டுகளை அதிகம் பெற வெளியில் பிகு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விறைப்பும் முறைப்பும் தேர்தலில் நாமினேசன் காலம் நெருங்க நெருங்க வெயிலில் உருகும் பனிக்கட்டிபோல கரைந்து விடும். இதனை பல தேர்தல்களில் பார்த்தவன் நான்.

* பிகு பண்ணுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது பா.ம.க. வைத்தானே?

தனிப்பட்ட எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு நான் சொல்லவில்லை. பொது வாகத்தான் சொல்கிறேன். அதேசமயம் யார், யார் பிகு காட்டுகிறார்கள் என்பது எங்களைவிட நக்கீரனுக்கு நன்றாகவே தெரியும்.

* எம்.ஜி.ஆர். காலத்திலும் அரசியல் செய்திருக்கிறீர்கள். ஜெயலலிதா காலத்திலும் அரசியல் செய்கிறீர்கள். இப்போது புதிதாக விஜயகாந்த். இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தி.மு.க.வால் உருவாக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு அவர் பிரிந்த பிறகும் பகையான பிறகும்கூட சில அரசியல் மரபுகளை மீறியதில்லை. முறித்ததும் இல்லை. உதாரணமாக.... சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் ஒருமுறை, சட்டமன்றத்தை விட்டு வெளியேறி... எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் இருந்த தி.மு.க. கட்சி ஆபீசுக்கு வந்துவிட்டார். ஆனால், கலைஞர் சட்டசபைக்கு வரவேண்டுமென விரும்பினார் எம்.ஜி.ஆர். உடனே க.ராசாராம் தலைமையில் அமைச்சர்கள் சிலரை அனுப்பி கலைஞரை அழைத்துவரச் செய்தார். அரசியல் பண்பாடும் நாகரிகமும் எம்.ஜி.ஆரிடத்தில் பட்டுப்போகவிலை என்பதற்கு இது உதாரணம்.

அதேபோல, ஒருமுறை சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆரை எதிர்த்துப் பேசி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டேன் நான். பதறிப்போன எம்.ஜி.ஆர்., தனது இருக்கையிலிருந்து எழுந்து எதிர்க்கட்சி லாபிக்கு ஓடிவந்து என்னைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு முதலுதவி சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்தார். வீட்டுக்கு அனுப்பி வைத்ததோடு அல்லாமல் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை "துரைமுருகன் நல்லா இருக்கிறாரா?' என்று விசாரித்துக்கொண்டே இருந்தார். தி.மு.க.வில் இப்போது இணையவரும் எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க. விசுவாசிகள், "கலைஞர் பெயரை கருணாநிதி என்று யார் சொன்னாலும் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார் எம்.ஜி.ஆர்.' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

ஒரு முறை கலைஞரை சிறையில் வைத்தார் எம்.ஜி.ஆர். அதேசமயம் சட்டத்துறை அமைச் சர் நாராயணசாமி முதலியாரை சிறைக்குச் சென்று கலைஞரின் நலன் விசாரித்துவிட்டு வரச் சொன்னார் எம்.ஜி.ஆர். இப்படி நிறைய சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆக எம்.ஜி.ஆர்., அண்ணாவிட மும் தி.மு.க.விடமும் பெற்ற பண்பாட்டு உணர்வுகளை மதித்தவர். அதனை பாதுகாத்தவர். அரசியல் பண்பாடும், நாகரிகமும் எம்.ஜி. ஆரிடத்தில் பட்டுப்போகவே இல்லை. ஆனால் ஜெயலலிதாவிடம் தி.மு.க.வின் அரசியல் பண்பாடும், அண்ணாவின் அரசியல் நாகரிகமும் ஏன்... குறைந்தபட்சம் எம்.ஜி.ஆரின் மனித உணர்வும் கூட இருப்பதில்லை. ஜெயலலிதாவைப் பற்றி ஒரு வரியில் சொல்வதானால், அண்ணாவின் வார்த்தைகளால் சொல்லலாம். அது... "விளைந்த காட்டில் திரிந்த குருவி' ஜெயலலிதா. அதனால், இவரிடம் அரசியல் பண்பாட்டை எதிர்பார்க்கக் கூடாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பேசக்கூடியவர் அல்ல விஜயகாந்த் என்பதால்... இதுவெல்லாம் அவருக்குத் தெரியாது. பாவம் விஜயகாந்த் அவரை விட்டு விடுங்கள்.

சந்திப்பு : இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின்
நக்கீரன் 18-09-2010

சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்

"2ஜி' அலைக்கற்றை பிரச்னையை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி மாற்றப்பட்டதற்கான காரணத்தை ஆதாரத்துடன் விளக்கத் தயாரா? என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு கருணாநிதி விளக்கம் அளிக்க முடியுமா? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"2ஜி' அலைக்கற்றை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு விளக்கம் கேட்டு தன்னைப் போலவே என்னையும் நினைத்துக் கொள்கிறார் ஜெயலலிதா.

இன்றைக்கு என்னைப் பார்த்து சி.பி.ஐ. அதிகாரியை மாற்ற யார் காரணம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு நான் காரணமல்ல; நிச்சயமாக நான் காரணம் அல்ல. இதற்கு மேலும் உங்களிடம் ஆதாரம் ஏதாவது இருக்குமானால் அதை ஆதாரத்துடன் சொல்லத் தயாரா?

அதிகாரிகள் மாற்றம்: ஜெயலலிதா மத்தியில் உள்ள அரசுடன் தோழமையாக இருந்த காலத்தில் சில அதிகாரிகளின் பெயர்களை தன் கைப்படவே எழுதி அவர்களையெல்லாம் மாற்ற வேண்டும் என்றும், அவர்களுக்குப் பதிலாக தான் குறிப்பிடும் நபர்களை அந்த இடத்திலே நியமிக்க வேண்டுமென்றும் கோரியது எல்லா பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரிபாஸ்கர், சி.ராமச்சந்திரன் ஆகியோரின் தாற்காலிக வேலை நீக்கங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்; என்.எல்.சி., முன்னாள் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பூபதியின் இடைக்கால வேலை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அதிகாரிகள் பெயர்கள் அடங்கிய பெரிய பட்டியல் ஜெயலலிதாவினால் கொடுக்கப்பட்டது.

அவற்றை ஏற்க மத்தியில் அப்போதிருந்த பாஜக அரசு முன்வரவில்லை. மத்திய அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்க்கப்பட்டது.

அரசியல் உள் நோக்கமா? அலைக்கற்றை பிரச்னையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவினை கேட்டுப் பெற வேண்டியதுதானே என்று ஜெயலலிதா சொல்கிறார்.

அலைக்கற்றை விவகாரத்தில் தவறு நடந்திருக்கிறது என்றால், தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட பிறகு அதைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமரும், மத்திய அமைச்சர்களும் மீண்டும் மீண்டும் உறுதி அளித்துள்ளனர்.

அதற்கு முன்வர பாஜகவும், இடதுசாரிகளும் தயங்குவது ஏன்? முறைப்பட மக்களவையில் விவாதிக்கப்பட்ட பிறகு, அந்த அறிக்கை அனுப்பப்பட வேண்டிய பொதுக்கணக்குக் குழுவின் முன்னால் கொண்டு போகப்பட்டு, அந்தப் பொதுக் கணக்குக் குழுவிடம் விவரங்களைத் தெரிவிக்க வேண்டியதுதானே? அந்தக் குழுவின் தலைவராக அவர்களுக்கு வேண்டிய பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர்தானே இருக்கிறார்.

தணிக்கைக் குழு அறிக்கையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் இதற்கு முன்பெல்லாம் பொதுக் கணக்குக் குழுவின் முன்னால்தான் விசாரிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது மட்டும் அதற்கு இணங்காமல் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழு வேண்டுமென்று கேட்பது ஏன்? இதிலே என்ன அரசியல் உள்நோக்கம் இடம் பெற்றுள்ளது?

தகுதி போதாது: பெரியாரின் கொள்கைகள், அண்ணாவின் கோட்பாடுகளை நான் அடகு வைத்து விட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ""விநாயக சதுர்த்தி'', ""சரஸ்வதி பூஜை'' போன்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் வாழ்த்துச் செய்தி கொடுத்தும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு விமானத்திலே பறந்துச் சென்று ரங்கநாதருக்கு பூஜை நைவேத்தியங்கள் செய்தும் ஜெயலலிதா, பெரியாரின் கொள்கைகளையும், அண்ணாவின் கோட்பாடுகளையும் காப்பாற்றுவதைப்போல நான் காப்பாற்றவில்லைதான்.

எனது அரசியல் குருகுலமே பெரியாரின் ஈரோட்டில் தொடங்கியது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எனது கொள்கை, கோட்பாடு பற்றி விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு தகுதி போதாது. அடையாறு பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டப் போவதாக அறிவித்து, அங்கு அடிக்கல் நாட்டினார்.

அங்கு நடந்த பூஜையில் கிரானைட் கல் வைக்கப்பட்டு அதில் தனலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது. முதல்வர் ஜெயலலிதா கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தார். பய பக்தியுடன் சாமி கும்பிட்டார்.

கற்பூர ஆரத்தியைத் தொடர்ந்து, தன் கைப்பட விபூதி குங்கும பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கினார் ஜெயலலிதா. இப்படிப்பட்டவருக்கு பெரியாரின் கொள்கை, அண்ணா கோட்பாடுகளைப் பற்றி பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.dinamani.com/edition/story.aspx?artid=335849&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

Monday, November 22, 2010

ஜெ கோட்டையைக் கலக்கிய அழகிரி!

திருவிழாக் கோலம் பூண்டிருந்தது ஆண்டிப்பட்டி. அப்பல்லோ மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனைகளை இணைத்து.. உ.பி.க்கள் இலவச மருத்துவ முகாமை கோலாகலமாக ஏற்பாடு செய்ய.... 18-ந் தேதி எல்லாப் பக்கமும் கூட்டமான கூட்டம்.

முகாமைத் தொடங்கி வைக்க உற்சாகத்தோடு ஆண்டிப்பட்டி நோக்கிப் புறப்பட்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை வரவேற்க... க.விலக்கு தொடங்கி கடமலைக்குண்டு வரையி லான 26 கி.மீ.தூரத்திற்கும் மக்கள் கூட்டம், கொடி, தோரணங்கள், டிஜிட்டல் போர்டுகள் என அமர்க் களப்பட்டது. அ.தி.மு.க. கோட்டையிலேயே இவ்வளவு கூட்டமா’என ர.ர.க்களே திகைத்துப் போனார்கள்.

மக்கள் கொடுத்த மனுக்களுடன், விழாவில் மைக் பிடித்த அழகிரி ""இந்தத் தொகுதியில் இருந்து ஜெயித்த வர் உங்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பத்தே நாட்களுக்குள் உங்களுக்குத் தேவையான குடிநீர், சாலை, பேருந்து போன்ற வசதிகள் அனைத்தையும் செய்து தருவோம். அரசு நிதி தாமதமானால் என் சொந்தக் காசிலாவது உங்கள் குறைகளைத் தீர்ப்பேன்''’என்று சொல்ல... கூட்டம் ஆரவாரித்தது. முகாமுக்கு வந்தவர்களின் மனநிலை எப்படி?

பொன்னம்படகைச் சேர்ந்த மஞ்சனத்தம்மாளோ ""கொஞ்சநாளா பிரஷர், சுகர்னு கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தேன். ஆனா.. கலைஞர் கட்சிகாரங்க இப்படி ஒரு முகாமை நடத்தி மருந்து, மாத்திரை கொடுத்து தைரியமும் தந்திருக்காங்க. அவங்க நல்லா இருக்கணும்''’என்று கை கூப்பினார்.

கடமலைக்குண்டு பவுன்தாய் நம்மிடம் ’""ஆறுமாசமா கால் வலியால் அவதிப்பட்டுகிட்டு இருந்தேன். இங்க ஒரு ஊசி போட்டாங்க. இப்பவே கால் சரியான மாதிரி வலி குறைஞ்சிருக்கு'' என்றார் நெகிழ்ச்சியாய். ""கண் தெரியலைன்னு பல இடம் போனேன். ஒண்ணும் சரிப்படலை. இங்க பார்த்த டாக்டர்கள் கண்ல புரை இருக்குன்னு சொன்னதோடு நாளைக்கு மதுரை அப்பலோவுக்கு வந்து ஆபரேசன் பண்ணிக்கச் சொல்லியிருக்காங்க. சரியாயிடுமாம். அப்பல்லோவை நினைச்சுக்கூட பார்த்ததில்லை''’ -சொல்லும் போதே சின்னமனூர் ராஜின் கண்கள் கசிகிறது.

தன் குழந்தைக்கு சிகிச்சை பெற்று திரும்பிக்கொண்டிருந்த வருசநாட்டுக் கலாவோ “""விட்டுவிட்டு பிள்ளைக்குக் காய்ச்சல். நாளைக்கு மதுரை ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லியிருக்காங்க. இலவசமா எல்லா செக்கப்பும் பண்ணி குணப்படுத்திடலாம்னு சொல்லியிருக்காங்க. அது போதும்ங்க. இனி தேர்தல்ல தப்பு பண்ணமாட்டோம்''’என்றார் குரல் கமற.

""மலைமக்கள் உட்பட 11 ஆயிரம் பேர்வரை வந்திருக்காங்க. இதைக் கேள்விப்பட்ட கலைஞரே.. அழகிரியை போன்ல பிடிச்சி வாழ்த்தினார்னா பார்த்துக்கங்க''’என்கிறார் தி.மு.க., மா.செ. மூக்கையா பூரிப்பாய்.

அழகிரியின் ஆண்டிப்பட்டி விசிட்... ஜெ. தரப்பை ஆட்டம்காண வைத்திருக்கிறது.

-சக்தி
நக்கீரன் -24-07-2010

ஜெயலலிதா டீ

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்த அடுத்த நாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் கலைஞரிடம் பத்திரிகை நிருபர் ஒருவர்... "கொடநாட்டில் விதிமுறைகளை மீறி டீ எஸ்டேட் கட்டப்படுவதாக தகவல் வெளியாகிறதே, அதற்கேனும் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்று அந்த நிருபர் கேட்ட கேள்வியில் உண்மை இருக்கிறதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஊரக வளர்ச்சி இயக்குநர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்திருக்கிறார்.

இதையடுத்து கொடநாடு தேயிலை எஸ்டேட்டில் ஜெ. தரப்பின் பயங்கர கெடுபிடி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. கொடநாடு டீ எஸ்டேட்டில் ஜெ. தரப்பு விதி முறைகளை மீறிக் கட்டிக் கொண்டிருக்கும் தகவல் உண்மைதானா என விசாரணையில் இறங்கி தடைகள் பல தாண்டி ஜெ. டீ தொழிற் சாலையில் நாம் எடுத்த படங்களை எடுத்துக் கொண்டு கொடநாடு தி.மு.க. ஊராட்சிமன்றத் தலைவரான பொன்தோஸிடம் காட்டினோம்.

""ஆமாம்... இதுதான் புதிதாய் கட்டப் படும் டீ தொழிற்சாலை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொடநாடு மேலாளர் நடராஜன் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக் கும் கொடநாடு தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் 1500 சதுர அடி அளவில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி கோரி விண்ணப்பித் திருந்தார். 1500 சதுர அடிக்குள் கட்டிடம் கட்ட யார் அனுமதி கேட்டாலும் கொடுக்க வேண்டிய கடமை ஊராட்சிமன்றத் தலைவருக்கு இருப்பதால் அனுமதி கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அதற்கடுத்த சில நாட்களிலும் அதற்கடுத்த மாதங்களிலும் தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலேயே வெவ்வேறு இடங்களில் 1500 சதுர அடி அளவுள்ள 3 கட்டிடங்களுக்கு தனித்தனியாக அனுமதி கோரி கொடநாடு தரப்பிலிருந்து விண்ணப்பிக்கப் பட்டதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த நான்கு கட்டி டங்களும் வெவ்வேறு இடங்களில் கட்டப்படுவதாய் சொல்லி அனுமதிகளை வாங்கிக்கொண்ட அவர்கள் ஏற்கனவே இருந்த அந்த அனுமதிகளை ஒரே கட்டிடமாக தேயிலை தொழிற்சாலையை விரிவு படுத்திக் கட்டுவதாக தகவல் வந்தது.

நீலகிரி மாவட்டம் மலைப் பிரதேசம் என்பதால் ஒருசேர இந்தளவுக்கு தொழிற்சாலைகளைக் கட்டுவதென்றால் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் அனுமதியும், வனத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, புவி தொழில்நுட்பத்துறை போன்ற துறைகளிடமும் தொழிற்சாலை கட்ட ஆட்சேபம் இல்லை என்று அனுமதி வாங்க வேண்டும். அதோடு அம்மாதிரியான தொழிற்சாலைகளுக்கு த்ரிபிள் ஏ கமிட்டி மற்றும் மலைப்பகுதி பாதுகாப்பு அதிகாரத் திடமும் அனுமதி வாங்க வேண்டும்.

ஆனால் இது மாதிரியான அனுமதிகள் எதையும் வாங்காமல் தொழிற்சாலை கட்டுவது குறித்து விளக்கமளிக்குமாறு 21-11-2009 அன்றே கொடநாடுக் கும் கொடநாடு எஸ்டேட் பங்குதாரர் களான ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் நான் கடிதம் அனுப்பினேன். கொடநாடு எஸ்டேட்டுக்கு ஆய்வு செய்ய சென்றேன். ஆனால் ஜெயலலிதாவும், சசிகலாவும், கொடநாடு எஸ்டேட்டும் பதில் தராமல் நான் அனுப்பிய கடிதத்தைத் திருப்பி அனுப்பியது போலவே கொடநாடு எஸ்டேட்டிற்குள் என்னை நுழைய விடாமல் திருப்பி அனுப்பியது. அதனால் 22-12-09 அன்றே 4 கட்டிடங்களுக்கு கொ டுக்கப்பட்ட அனுமதியை நான் ரத்து செய்து ஆர்டரும் போட்டுவிட்டேன்.

அதற்குப் பின்னால் கொஞ்ச காலம் கட்டிட வேலைகளை நிறுத்தி வைத்திருந்த அவர்கள் பின்னால் கட்டத் தொடங்கினர். இப்போது கிடைத்த தகவல், அவர்கள் மேலும் நான்கு கட்டிடங்களை எந்தவித அனுமதியும் இன்றி கட்டிக்கொண்டி ருக்கிறார்கள் என்பதுதான். நிச்சயம் கலைஞர் அமைத்திருக்கும் விசாரணைக் கமிஷன் மேலும் கொடநாடு எஸ்டேட்டில் நடக்கும் அநியாயங்களை வெளிக்கொண்டு வரும்'' என்கிறார் உறுதியாய்.

கொடநாடு தேயிலைத் தொழிற் சாலையிலிருந்து தயாரிக்கப்படும் டீத் தூள்கள் கொடநாடு டீத்தூள் என்ற பெயரில் பாக்கெட் செய்யப்பட்டு லோக்கலில்-குன்னூரில் மட்டும் விநியோகம் செய்வதோடு எக்ஸ்போர்ட்டும் செய்யப் படுகிறதாம்.

ஆனால் ஜெயலலிதாவோ "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தொடர் நோக்கில்தான் கொடநாட்டில் இருக்கும் லோக்கல் தி.மு.க.காரர்களையும் லோக்கல் தி.மு.க. அமைச்சரையும் வைத்து எனக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற வகையில்தான் பல அவதூறு பிரச்சாரங்களைப் பரப்பிக்கொண்டிருக் கிறார் கருணாநிதி.

உண்மை என்னவென்றால் கொடநாடு எஸ்டேட்டில் மண் சுவரிலான 142 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொழிற் சாலை ஒன்று முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கும் நிலையில் இருக்கிறது. அதனால் அங்கு பணி புரியும் தொழி லாளர்களின் உயி ருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நல் நோக்கத்திற்காகவே தொழிற்சாலையை புதுப்பிக்கும் பணி கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன.

சட்டத்திற்கு உட்பட்டு சம்பந் தப்பட்ட அதிகாரி களிடம் முறையான அனுமதி வாங்கித் தான் பழைய தொழிற்சாலையை செப்பனிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் முறையாக நடக்கும் செப்பனிடும் பணிகள் குறித்து விசாரணை செய்ய ஓர் அதிகாரியை கருணாநிதி நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது' என்று மறுப்பு தெரிவித்திருக்கிற நிலையில்... புதிய கட்டிடம் கட்ட கொடநாட்டிலிருந்து அனுமதி கோரிய விண்ணப்பமும், பொன்தோஸ் 4 கட்டிடங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தர விட்ட ஆர்டர் காப்பியையும் வாசகர்களின் பார்வைக்கு நக்கீரன் வைக்கின்றது.

இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். கொடநாட்டுக்கு ஆய்வு செய்ய வருவதையொட்டி பலத்த எதிர்பார்ப்புகள் கொடநாடு முழுக்க பெய்யும் மழையையும் பொருட்படுத்தாது எதிர்பார்த்து நிற்கின்றன. ஆனால் வேண்டுமென்றே இப்படியானப் பொய்களைப் புனைந்து ஆய்வு செய்ய வரும் ஆய்வுக்குழுவை அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கிறதாம் கார்டன் தரப்பு.

-அருள்குமார்
nakkeeran-03-07-2010

கொடநாடு எஸ்டேட்டை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு வழக்கு(செவ்வாய்க்கிழமை, 24, ஆகஸ்ட் 2010 (21:52 IST)
கொடநாடு தேயிலைத் தோட்டத்தை ஆய்வு செய்ய அனுமதிக்க கோரி கொடநாடு ஊராட்சிமன்ற  தலைவர் பொன்தோஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவிற்கு, மூன்று வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு எஸ்டேட் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ் தாக்கல் செய்த மனுவில், கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் 4 கட்டிடங்கள் கட்ட கடந்த ஆண்டு அனுமதி வாங்கியது. ஆனால் விதிமுறைகளை மீறி தொழிற்சாலையைப் போன்று ஒரே கட்டிடங்களை கட்டி வருகிறது. இதனால் அந்த கட்டிடம் கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து எஸ்டேட்டை ஆய்வு செய்ய நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 6ஆம் தேதி வருவாய்துறை அதிகாரிகள் எஸ்டேட்டை ஆய்வு செய்ய சென்றபோது, ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுதொடர்பாக எஸ்டேட் நிர்வாகம் மூன்று வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளன.
--nakkeeran--

கொடநாடு பஞ்சாயத்து தலைவரின் வழக்கை தள்ளுபடி செய்ய கோரி ஜெயலலிதா மனு(திங்கள்கிழமை, செப்டம்பர் 13, 2010, 16:39[IST]

)

கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு நடத்த அனுமதி கோரி பஞ்சாயத்து தலைவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா முறையான அனுமதியின்றி தேயிலை தொழிற்சாலை கட்டுவதாக புகார் வந்ததையடுத்து அதுகுறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரனை தமிழக அரசு நியமித்தது.

அவரது உத்தரவின் பேரில் கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ் மற்றும் அதிகாரிகள் எஸ்டேட்டிற்குள் ஆய்வு செய்யச் சென்றனர். ஆனால் அவர்களை எஸ்டேட் நிர்வாகிகளும் அதிமுகவினரும் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.

இந் நிலையில் கொடநாடு எஸ்டேட் மானேஜர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில் எஸ்டேட்டுக்குள் ஆய்வு நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, எஸ்டேட்டிற்குள் தேயிலை தொழிற்சாலை கட்ட உரிய அனுமதி பெறப்பட்டிருப்பதால் அங்கு ஆய்வு நடத்தத் தேவையில்லை என்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கொடநாடு எஸ்டேட்டிற்குள் சர்வே எண்- 171ல் உள்ள பகுதியில் அனுமதியை மீறி தேயிலை தொழிற்சாலை கட்டப்படுவதாகவும், அதை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதற்கு ஜெயலலிதாவின் சார்பில் வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனுவில், 171 என்ற இல்லாத சர்வே எண்ணை குறிப்பிட்டு அதில் அனுமதி மீறி கட்டிடம் கட்டுவதாக கொடநாடு பஞ்சாயத்து தலைவர் கூறியுள்ளார். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி தர்மாராவ், நீதிபதி சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.

எஸ்டேட் நிர்வாகத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்:

இதற்கிடையே கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பொது பாதையை கிராம மக்கள் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் விதித்த தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு கொடநாடு எஸ்டேட் நிர்வாகிகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது
http://thatstamil.oneindia.in/news/2010/09/13/jaya-asks-hc-reject-kodanadu-panchayat-petition.html

கொடநாடு வழக்கு-அவகாசம் கேட்க ஜெ தரப்புக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்(திங்கள்கிழமை, அக்டோபர் 25, 2010, 15:55[IST])

திங்கள்கிழமை, அக்டோபர் 25, 2010, 15:55[IST]

கொடநாடு பாதை தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மீண்டும் அவகாசம் ஜெயலலிதா தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் வழியே சென்று வர கிராம மக்களுக்கு வழி விடுவது தொடர்பான அப்பீல் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் முகந்தகன் சர்மா, அனில் தவே ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் ஒருவார காலம் அவகாசம் கேட்டார். இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த தரப்பினருக்கு ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டது. மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் அது வழங்கப்பட்டது. இப்போதும் ஒரு வார அவகாசம் கேட்பது சரியல்ல. என்றாலும், மீண்டும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. இனி அவகாசமே கேட்கக்கூடாது என்று நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
http://thatstamil.oneindia.in/news/2010/10/25/sc-condemns-jaya-advocate-kodanadu.html

விஜயகாந்த் வேண்டாம் காங்கிரஸ் தான் வேண்டும் மனம் திறந்த ஜெ !


"மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொண்டால் எந்தவித நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவைக் கொடுப்போம்' என்கிற ஜெ.வின் மனம் திறந்த பேட்டி இந்திய அரசியல் அரங்கில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

பல நாட்களுக்கு முன்பே ஜெ. சந்திப்புக்கு டைம்ஸ் நவ் செய்தியாளர்கள் நேரம் கேட்டிருந்த நிலையில், திடீரென 11-ம் தேதி காலை வந்துவிடும்படி முதல் நாள் மாலையில் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. அதுவும்கூட மரியாதை நிமித்தமான சந்திப்புக்கான நேரம் என்றுதான் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் சேனல்காரர்கள் எதற்கும் தயாரான நிலையில் போயிருக்கிறார்கள். தன் பேட்டிக்கான டைரக்ட ராக ஜெயலலிதாவே மாறியிருக்கிறார். கேமரா எங்கே வைக்க வேண்டும்... எந்த ஆங்கிளில் இருக்க வேண்டும் என்பது உட்பட எல்லாவற்றையும் அவரே தீர்மானித்திருக்கிறார். கூடவே ஜெயா டி.வி.யின் இரண்டு கேமராக்களும் ஜெ. பேட்டியை ஷூட் செய்திருக்கின்றன. பேட்டிக்கான அறைக்கு ஜெ. வந்தபோது அங்கிருந்த அனைவரையும் வெளியேறச் சொல்லி... அவர் வந்து அமர்ந்த பிறகு செய்தியாளர்களை மீண்டும் அனுமதித்திருக்கிறார்கள். ஜெ. வரும்போது அந்த அறையில் யாரும் இருக்கக்கூடாது என்பது பொதுவாக நடைமுறையில் இருக்கும் விதி என்று அதற்கு காரணம் கூறியிருக்கிறார்கள்.

எப்போதும் ஒருவித இறுக்கத்துடனே இருக்கும் ஜெ. இந்த முறை பேட்டி எடுக்கச் சென்றவர்களிடம் ரொம்பவே நெருக்கம் காட்டி யிருக்கிறார். ஜெயா டி.வி. ஊழியர்களிடமும் இன்முகம் காட்டினாராம். பேட்டியை தொடங்கும் முன்பாகவே தன்னோடு பேசிய டைம்ஸ் நவ் சேனல் எடிட்டர் ஆர்னப் கோஸ்வாமியிடம்... தன்னைப் பற்றி அந்த சேனலில் ஒளிபரப்பான செய்தி ஒன்றுக்கான எதிர்ப்பையும் அழுத்த மாக தெரிவித்திருக் கிறார்.

தன்னிடம் கேட் கப்பட்ட 12 கேள்வி களுக்கும் தயக்கமோ, தடுமாற்றமோ இல்லா மல் பதில் கொடுத் திருக்கிறார். பேட்டி முழுக்க காங்கிரஸ் கட்சித்தலைமையின் கவனத்தை எப்படி யாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்.

""ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்தால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று காங்கிரஸ் பயப்படுகிறது. ஆட்சிக்கவிழாமல் இருக்க தி.மு.க.வின் 18 எம்.பி.க்கள் எண்ணிக் கையை சமன் செய்ய வேண்டும். எங்களிடம் 9 எம்.பி.க்கள் இருக் கிறார்கள். ஒத்த கருத் துடைய மற்ற கட் சித்தலைவர்களிடம் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக் கையையும் சேர்த்தால் 18க்கு மேலும் ஒன்றி ரண்டு கூடுதலாக இருப்பார்கள்''’’ என்று வெளிப்படையாக ஜெ. சொன்னபோது பேட்டி எடுத் தவரே ஒரு நொடி அதிர்ந்தார்.

""நீங்கள் கூட்டணியை மாற்றி அமைப்பது குறித்து பேசுகிறீர்கள். அப்படி என்றால் காங்கிரசை ஆதரிக்க நிபந்தனை எதையும் விதிப்பீர்களா?'' என்று கேள்வி எழுப்பப்பட, ""என்னுடைய தரப்பிலிருந்து எந்த நிபந்தனையும் இருக்காது'' என காங்கிரஸ் கட்சிக்கு உறுதி கொடுத்தார் ஜெ. காங்கிரஸ் அரசு கவிழாமல் காக்கும் அளவிற்கான எம்.பி.க்கள் தன்னிடம் இருக்கிறார்கள் என்பதை ஒரு முறைக்கு இருமுறை அழுத்திச் சொன்ன ஜெ., ஒத்தக்கருத்துடைய கட்சிகள் பெயரை சொல்ல மறுத்துவிட்டார்.

மத்தியில் கூட்டணி பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். மாநில அளவிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயாராக இருக்கிறீர்களா? என்று கேட்டால் அதைப்பற்றி காங்கிரஸ்தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார்.

சோனியா காந்தி குறித்த தன் விமர்சனங்கள்தான் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைப்பதில் சிக்கலாக இருக்கிறது என்பதால் அதிலும் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதை வெளிப் படுத்தினார் ஜெ. ""அரசியலில் பழைய பிரச்சினைகளை மறக்காமல், பின்னோக்கி பார்த்துக்கொண்டிருந்தால் முன்னேறி செல்ல முடியாது. எனவே கடந்த காலங்களில் நடந்தவைகளை மறந்துவிட வேண்டும். எதிர்காலத்தை நோக்கி நகர வேண்டும்'' என்று சோனியாவுக்கு தன் கருத்தை வெளிப்படுத்தினார் ஜெ.’’

இப்படி வெளிப்படையாக காங்கிரசுக்கு மெசேஜ் கொடுத்திருக்கும் ஜெ.வின் மனநிலை என்ன என்பதை அறிய கடந்த ஒரு வாரத்தில் அவரை சந்தித்த சிலரிடம் பேசினோம்.“ ""ஜெயலலிதாவைப் பொறுத்த வரை காங்கிரஸ் கூட்டணி இருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார். விஜயகாந்த் தரப்பில் இருந்து அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருப்பதால் அவர்களை எதிர்பார்க்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் ஜெ. கம்யூனிஸ்ட்டுகளும் நம்பிக்கையான கூட்டணிக்கட்சியாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். அதே போல ம.தி.மு.க.வின் ஒரு எம்.பி.யையும் 18 பேர் லிஸ்ட்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை அவர். காங்கிரஸ் கூட்டணிக்கு ஜெ.வை கொண்டு வர முயற்சிக்கும் அ.தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் ஆலோசனைப்படியே இந்தப் பேட்டியை கொடுத்தாராம்.

சோனியாவுடன் சமரசம் செய்ய விரும்புவதையும், நிபந்தனையற்ற ஆதரவு என்பதையும் வெளிப் படையாக அறிவியுங்கள் என்று ஜெ.யின் டெல்லி நண்பர்கள் கருத்தை தன் பேட்டியில் பிரதிபலித்து விட்டார். ஜெ.வைப் பொறுத்தவரை வரும் தேர் தலிலும் தோல்வி என்றால் பெரிய நெருக்கடி உருவாகும் என்று நினைக்கிறார். அந்த நிலையைத் தவிர்க்க கூட்டணி ஆட்சிக்கும் தயார் என தன் மனநிலையை வெளிப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் தன்னோடு வராவிட்டாலும் கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க.வை நிர்பந்திக்கும். அப்போது அவர்களுக்குள் பிரச்சினை வந்து தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்று நம்பு கிறார். எல்லாவற்றையும் விட குருப்பெயர்ச்சி தனக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்கிற நம்பிக்கையிலேயே இப்படி ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார்'' என்கிறார் கள் அந்த முக்கிய பிரமுகர்கள்.

-சகா
நக்கீரன்

Sunday, November 21, 2010

ஜெயலலிதா போட்ட உத்தரவு -தொண்டர்களுக்கு தொங்கும் தூக்கு கயிறு

""தீயில் கருகி துடிதுடித்து இறந்த அந்த 3 மாணவிகளை நினைக்கும்போது மனம் பதைபதைக்கிறது. அந்தக் கொடூரத்துக்குக் காரணமானவர்களை மன்னிக்கவே முடியாது. அப்பாவி மாணவிகள் தப்பிக்க முடியாத படி பஸ்சின் கதவை மூடித் தீவைத்து, திட்டமிட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைத்தான் சேலம் நீதிமன்றம் வழங்கியுள்ளது. குற்றவாளிகளின் மேல்முறையீட்டை ஏற்றால், நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே வீணாகிவிடும்...!''.

தருமபுரி பஸ்ஸில் மூன்று மாணவிகள் எரித்துக் கொல்லப் பட்ட வழக்கில், 30.8.10 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்கள் ஜி.எஸ்.சிங்வியும் பி.எஸ். சவுஹானும் கனத்த இதயத்தோடு குறிப்பிட்ட உருக்கும் வாசகங்கள் தான் இவை.

கொடைக்கானலில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.



தீர்ப்பு வந்த சிறிது நேரத்தில், அ.தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் பறந்தது. ஜெ.வுக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து, சாலைமறியல்கள் ஆர்ப்பாட்டங்கள் என்று தமிழகம் முழுதும் வன்முறைகள் நடந்தன. தருமபுரியிலும் நடந்தது...

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழக மாணவிகள் வந்த பேருந்தை தருமபுரி இலக்கியம்பட்டிப் பகுதியில் வழி மறித்து நிறுத்தி, பெட்ரோலை ஊற்றிப் பற்ற வைத்தார்கள். மாணவிகள் கோகில வாணியும், காயத்ரியும், ஹேமலதாவும் தீயில் கருகி உயிரிழந்தார்கள். அகில இந்தியாவையே அதிர வைத்த இந்தக் கொடூரக் கொலைச் சம்பவத்தில் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது சேலம் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு நடந்து கொண்டிருந்த போதே ஒருவர் இறந்து விட்டார். எஞ்சிய 30 பேரில் இருவரை விடுதலை செய்தது சேலம் நீதிமன்றம்.

மீதி 28 பேரில், ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனையும், முத்து (எ) அறிவழகன், ரவி, வி.முருகன், வடிவேல், காவேரி, மாணிக்கம், வீரமணி, உதயகுமார், சம்பத், நஞ்சன், ராஜு, மணி, மாதுராமன், முருகேசன், மணி, மாதையன், செல்வம், செல்வராஜ், தௌலத், பாஷா, வேலாயுதம், வி.பி.முருகன், சண்முகம், சந்திரன், செல்லக்குட்டி ஆகிய 25 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது சேலம் நீதிமன்றம்.

தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவருக்கும், சேலம் நீதிமன்றம் விதித்த தூக்குதண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், 25 பேருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுச் சிறைத் தண்டனையை 2 ஆண்டாக குறைத்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.

தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறி ஞர்கள் அல்தாப் அகமதுவும், சண்முகசுந்தரமும் ஆஜராகி ""கீழ்க்கோர்ட் குற்றவாளிகளுக்கு விதித்த தண்டனைகளை உறுதி செய்ய வேண்டும்!'' என்று வாதாடினர்.

அ.தி.மு.க.வினர் சார்பில் வாதாடிய சுஷில்குமார், ""இந்த வழக்கில் நம்பகத்தன்மையுள்ள சாட்சிகள் இல்லை. சாலைமறியலில் ஈடுபட்ட புகைப்பட ஆதாரங்களின் அடிப்படை யில் இந்த மூவரும்தான் பஸ்ஸை எரித்திருப்பார்கள் என்பது வெறும் யூகமே... ஆகவே மரண தண்ட னையை ரத்துச் செய்ய வேண்டும்!'' என்று வாதாடினார்.

25 பேருக்கு 2 ஆண்டுத் தண்டனையை உச்சநீதி மன்றமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த 25 பேரும் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த ஆகஸ்ட் 30 நண்பகலில் தருமபுரி அ.தி.மு.க. வட்டாரத்தில் கோபத் தையும் கண்ணீரையும் பார்க்க முடிந்தது.

""யாருக்காக வரிந்து கட்டிக் கொண்டு இதைச் செய்தார்கள். அம்மா வுக்காகத்தானே! அம்மா உத்தரவு போட்டதால் தானே செய்தோம். கீழ்க் கோர்ட்டிலும் ஹைகோர்ட்டிலும் தீர்ப்பு வந்தபோது அம்மா இருக்கிறார்... கட்சி இருக்கிறது... தூக்குத் தண்டனை இல்லாமல் பார்த்துக் கொள்வார்... காப்பாற்றுவார்னு சொன்னாங்களே... இப்ப என்ன நடந் திருக்கு தலைமை பேச்சை கண்ணை மூடிக்கிட்டு அடிமை போல கேட்டு நடந்த மூன்று தொண்டர்களின் கழுத்துக்கு தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றமும் உறுதி செஞ்சுடுச்சு. இனிமேல் என்ன சொல்லுவார்கள்? கருணை மனு போடலாம்னு தானே... சே... ச்சே...!'' என்று பகிரங்கமாகவே சத்தம் போட்டு தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.

அ.தி.மு.க.வினரால் எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை வீராசாமியை நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தோம்.

""தாமதமானாலும் நீதி சாகாது என்பதைத்தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. பெறாத பிள்ளைகளான சாட்சிகள் எந்த அதிகாரத்திற்கும் பயப்படாமல் சத்தியத்தில் நின்று சாட்சியளித்தார்கள். தங்கள் கட்சித் தலைமைக்காக எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் எரிக்கலாம், கொல்லலாம் என்று செயல்படுபவர்களுக்கு இதுதான் சரியான பாடம்...!'' கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் வீராசாமி.

எரித்துக் கொல்லப்பட்ட கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா பெயரில் "கே.ஜி.எச்.' அறக்கட்டளையை நிறுவிய அதன் தலைவர் அருள் நம்மிடம், ""உச்சநீதிமன்றம் மிக அரிதாகவே மரண தண்டனை விதிக்கிறது. அரசியல் தலைமையின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இனிமேலும், யாரும் இப்படிப்பட்ட கொடிய, இரக்கமில்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே இப்படிப்பட்ட தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு சக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெருத்த ஆறுதலாக அமைந்திருக்கிறது!'' என்கிறார்.

-வடிவேல்
nakkeeran

ஜெயலலிதாவின் கூட்டணி தர்மம் -மூத்த பத்திரிக்கையாளர் சோலை

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ராசாவை அமைச்சரவையிலிருந்து நீக்கினால் அ.தி.மு.கழகம் மன்மோகன்சிங் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரும் என்று செல்வி ஜெயலலிதா தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு புயலைக் கிளப்பியதா? புழுதியைக் கிளப்பியதா?

மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. விலகுமானால் அதனை ஈடுகட்ட 18 உறுப்பினர் களை அணிதிரட்டித் தருகிறேன் என்றும் அவர் காங்கிரஸ் தலைமைக்கு நம்பிக்கை தெரிவித்தார். மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கத் தயாராக இல்லை என்பதனை காங்கிரஸ் தலைமை உடனடியாகத் தெளிவுபடுத்திவிட்டது.

தமிழகத்தில் செயல்படும் காங்கிரஸ் -தி.மு.க. -விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இடம் காலியில்லை. "நோ வேகன்ஸி' என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சிக்கு அ.தி.மு.க. ஆதரவு என்ற அம்மாவின் அறிவிப்பை எல்லா ஏடு களும் ஊடகங்களும் அமர்க்களமாக வெளியிட்டன. அம்மா பெரிய ராஜ தந்திரி என்று டெல்லி தொலைக் காட்சி களின் சதுர்வேதிகளும் திரிவேதிகளும் கோஸ்வாமிகளும் பாஷ்யமே (விரிவு ரையே) எழுதிப் படித்துவிட்டனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதே தொலைக்காட்சிகள் எப்படிக் கணித்தன? தமிழகத்தில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று அம்மாவுக்கு லட்சார்ச்சனை செய்தன. மக்கள் தந்த தீர்ப்பு என்ன என்பது நாட்டிற்குத் தெரியும்.

வடமாநில தேர்தல் நிலவரம் பற்றி அதே தொலைக்காட்சிகள் எப்படிச் செய்தி வாசித்தன? பி.ஜே.பி.யின் பலம் பெருகி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் பி.ஜே.பி.க்கும் கடுகளவு தூரம்தான் இடைவெளி இருக்கும் என்று வாசித்தன. ஆமாம், அங்கே பி.ஜே.பி. வெற்றிபெற வேண்டும் என்று துடிப்பர். இங்கே அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண் டும் என்று ஆசைப்படுவர்.

அ.தி.மு.க.வை நம்பி மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பி.ஜே.பி. ஆட்சி அமைத்தது. தாங்கள் எதிர்கொள்ளும் நம் அன்னியச் செலா வணி வழக்குகள் -வெளிநாட்டு நிதி தொடர்பான வழக்குகள் என்று எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை நிர்பந்தித்தது. அப்போதுதான் அந்த தலைமை தந்த நிபந்தனையற்ற ஆதரவின் அர்த்தம் பி.ஜே.பி.க்கு புரிந்தது. கடைசியில் வாஜ்பாய் அரசை செல்வி ஜெயலலிதா கவிழ்த்தேவிட்டார். நாடு இன்னொரு இடைத்தேர்தலை எதிர் கொண்டது.

வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பின்னர் மீண்டும் மையத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சி தொடர்ந்தது. செல்வி ஜெயலலிதா டெல்லியில் முகாமிட்டார். ஒரு நட்சத்திர ஓட்டலின் பாதி அறைகள் ரிசர்வ் செய்யப்பட்டன.

சோனியாகாந்தியை பிரதமராக்க ஓர் முயற்சி நடந்தது. செல்வி ஜெயலலிதா நேராக அவ ரது இல்லம் சென்றார். அவர் பிரதமர் பீடம் ஏற ஆதரவு என்றார். அம்மாவின் பரந்த மனதைப் பாராட்ட பாரதம் காத்திருந்தது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மீண்டும் சோனியா இல்ல படிகளில் ஏறினார். நேற்று தந்த ஆதரவை இன்று வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் என்றார். சோனியா அமைதி காத்தார்.

இதில் என்ன சிறப்பு என்றால் ஜெய லலிதாவின் ஆதரவை சோனியா கோரவே யில்லை. இப்போது எப்படி அழையா விருந்தாளியாக காங்கிரஸ் கதவுகளைத் தட்டுகிறாரோ அப்படியேதான் அன்றைக்கும் தட்டினார். ஆதரவு என்றார். வாபஸ் என்றார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் செல்வி ஜெயலலிதா டெல்லி சென்றார். அனு பவத்தால் பக்குவப்பட்ட ஜெயலலிதா வந்திருக் கிறேன், கூட்டணிக்குத் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தார். தலைநகரத் தொலைக்காட்சி களெல்லாம் தகுந்த முக்கியத்துவம் தந்து ஒளிபரப்பின. ஆனால் காங்கிரஸ் தலைமை அம்மாவின் சரணாகதியைக் கண்டுகொள்ள வில்லை. தென்திசை வாடைக்காற்று அழையா விருந்தாளியாக வீசினாலும் வீசும் என்று சோனியா இல்ல ஜன்னல்களும் சாளரங்களும் மூடப்பட்டன.

அழையா விருந்தாளியாக செல்வி ஜெய லலிதா எங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டுகிறார், திறப்பதாக இல்லை என்று கடைசியாக இப்போது மத்திய அமைச்சர் நாராயண சாமியும் தெரிவித்துவிட்டார்.

தங்கள் கூட்டணி தி.மு.கழகத்துடன்தான் என்று பிரதமரும் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் அம்மா சரணாகதியடையவில்லை. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை உடைப்பதற்காகக் கூறினார் என்று இங்கே சில அரசியல் புரோகிதர்கள் அர்ச்சனை செய்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் இருந்து இன்று வரை அவர் காங்கிரஸ் உறவிற்காக பகீரத முயற்சி செய்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் எப்படியும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி காண இமாலய முயற்சி செய்தார். ஆனால் சோனியா இருக்கும்வரை அத்தகைய கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்பதனை அரசியல் விமர்சகர்கள் அறிவார்கள்.

காங்கிரஸ் கட்சியின் உதவியின்றி கரை சேர முடியாது என்பதனை செல்வி ஜெயலலிதா அறிவார். ஆனால் அதற்கான வாய்ப்புகளுக்கு வழியேயில்லாது போனதற்கு அவரேதான் காரணம். அவர் அவ்வப்போது தெரிவித்த கருத்துகளும், விடுத்த அறிக்கைகளும்தான் காரணமாகும். அவைகள் அறிக்கைகளா? ஏவப்பட்ட அக்னிச்சரங்கள். பெண்மைக்கு முடிசூட்ட வேண்டிய அவரே சோனியாவை எப்படியெல்லாம் கொச்சையாக, பச்சையாக விமர்சித்தார் என்பதனை எப்படி மறப்பர்?

காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று இப்போது அவர் கூறியது ராஜதந்திரமல்ல... சரணாகதி. உண்மையிலேயே காங்கிரஸ் உடன்பாட்டிற்கு பலப்பல வழிகளிலும் முயன்றார். முடியவில்லை. இனி நாமே கூட்டணிக்குத் தயார் என்பதனை அறிவித்துப் பார்ப்போம் என்ற முடிவிற்கு வந்தார். எனவே மத்திய அமைச்சர் ஆ.ராசா எதிர்நோக்கும் பிரச்சினையின் பின்னணியில் நின்று தயார் தயார் என்றார்.

அவருக்காக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கீச்சு கீச்சு என்று குரல் எழுப்பும் சில சிட்டுக்குருவிகள் உண்டு. அவர்களை அவர் நம்பினார். ஆனால் அந்தக் குருவிகளின் கீச்சுக் குரல் வண்ணாரப்பேட்டைக்குக் கூட எட்டுவதில்லை. டெல்லிப் பட்டணத்தை எப்படி எட்ட முடியும்?

கழகத்தின் வலிமையைக் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக கோவை, திருச்சி, மதுரையில் பெரும் பேரணிகள் நடத்தினார். ஆனால் அந்தப் பேரணிகளுக்குச் செலுத்தப்பட்ட முத லீடுகள் என்ன என்பது காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும். இந்தப் பேரணிகள் மூலம் தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்ட முயன்றார். நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்றார். வெற்றிக் கூட்டணியில் கைகோர்ப்போம் என்றார். ஆனால் இன்றைக்கு காங்கிரஸ் கூட்டணியில் அ.தி.மு.க.விற்கு இடம் இல்லை என்று அறிவிக்கப் பட்டது அந்தத் தொண்டர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் காங்கிரஸ் உடன் பாடு என்று அவர் மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி வந்தார்.

இன்றுவரை அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கருதுகின்றனவா? தனியாகப் பேரணி வேண்டாம். கூட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று அந்தக் கட்சிகள் மனு போட்டு மனு போட்டு சோர்வடைந்து விட்டன. அந்தக் கட்சித் தலைவர்களை அ.தி.மு.க. பேரணி மேடைகளில் கூட ஏற்றுவதில்லை. ஆனால் கூட்டணி தர்மத் திற்கு எந்த அளவு அ.தி.மு.க. தலைமை மரியாதை தரும் என்பதனை எண்ணிப் பார்க்க வேண்டும். 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நாடாளு மன்றத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி களுடன் அ.தி.மு.க. கூட்டணி கண்டது. பிரச் சாரத்திற்கு வந்த சோனியாவிற்கு விழுப்புரத்தில் எவ்வளவு பெரிய மரியாதை கிடைத்தது என்பதனை நினைவுபடுத்தத் தேவையில்லை.

தேர்தல் முடிந்தது. செல்வி ஜெயலலிதா முதல்வரானார். டெல்லி சென்றார். சோனியாவை சந்தித்தார். கூட்டணியில் அங்கம் பெற்றதற்கு நன்றி என்றார். அடுத்த சில நிமிடங்களில் திரும்பினார். சோனியா இல்ல வாசலில் நிருபர்கள் காத்திருந்தனர். காங்கிரஸ் கட்சியுடன் கண்ட கூட்டணி இத்துடன் முடிவுற்றது என்று அறிவித்தார். காங்கிரஸ் பாடம் கற்றுக் கொண் டது. இனி தி.மு.க.வுடன்தான் அணி என்று இறுதி முடிவு செய்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அம்மா பாடம் கற்றுக் கொடுத்தார். சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் வந்தது. சில தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட்டது. ஆனால் தோழமைக் கட்சிகளின் ஆதரவை அம்மா கேட்கவில்லை. வேறு வழியின்றி வலியச் சென்று ஆதரித்தன.

தொண்டாமுத்தூர், கம்பம், இளையான் குடி, பர்கூர் தொகுதிகள் இடைத்தேர்தலை எதிர்நோக்கின. இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அ.தி.மு.க. அறிவித்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி. எதிர்ப்பின்றி தி.மு.க. வெற்றி பெறுவது கூட்டணியைப் பலவீனப்படுத்தும் என்று கருதின. ஜனநாயகம் கருதி இந்தத் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்தன. களம் கண்டன.

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அ.தி.மு.க. ஆதரித்ததா? இல்லை.

ஆதரியுங்கள் என்று தொண்டர்களுக்குக் கட் டளையிட்டதா? இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டி யிடும் தொகுதிகளில்? அ.தி.மு.க. அமைதி காக்க வேண்டும், தேர்தல் பணி கூடாது என்று வாய்மொழி உத்தரவுகள் பறந்தன. அ.தி.மு.க.வின் நம்பகத்தன் மைக்கு இந்த நிகழ்வுகள் இன்னொரு எடுத்துக்காட்டு.

இந்தியாவிலேயே தர்மபுரி மாவட்டத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உறுப்பினர்கள் அதிகம் என்பார் கள். பர்கூர் தொகுதி தங்கள் பாசறை என்பார்கள். அந்தத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி யிட்டது. வெறும் ஆயிரத்து 400 ஓட்டுக்கள்தான் வாங் கியது. அ.தி.மு.க. கிளைக்கழக நிர்வாகிகள் ஓட்டுப் போட்டாலே அதற்கு டெபாசிட் கிடைத்திருக்கும்.

கம்பம் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி 2 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் சற்று ஆறுதல். 9 ஆயிரம் வாக்குகள் பெற்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி. மு.க.விற்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏணி. ஆனால் இடைத்தேர்தலில் அந்தக் கட்சிகள் போட்டி யிட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. தோணியாகப் பயன்படக் கூடாதா? காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு இல்லை என்ற நிலையில்தான் வந்த வழித்துணையை விடவேண்டாம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அ.தி.மு.க. உடன்பாடு கண்டது.

செம்மொழி மாநாட்டினைத் தொடர்ந்து கோவையில் அ.தி.மு.க. பேரணி நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்தப் பேரணி மேடையி லாவது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை ஏற்றியிருக்கலாம். ஏன் இடம் கொடுக்கவில்லை?

காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பிய ரகசியத் தூதர்கள் நல்ல செய்தி கொண்டு வருவார்கள் என்று அ.தி.மு.க. தலைமை காத்திருந்தது. எனவே கம்யூ னிஸ்ட் கட்சிகளைத் திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்க விட்டது.

இனி அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் நிம்மதியாக இருக்கலாம். ஏனெனில், அ.தி.மு.க.வோடு உறவு இல்லையென்று காங்கிரஸ் கட்சி கதவுகளைத் தாழிட்டுவிட்டது.
நக்கீரன்