Search This Blog

Friday, October 1, 2010

சென்னை கோட்டையில் அமைந்துள்ள செம்மொழி தமிழாய்வு நூலக அரங்கத்தில், இன்று (1.10.2010) நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுமக்களுக்கான நோய்த் தடுப்பு சுகாதார சேவையில் சிறப்பாக பணியாற்றிவரும், கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து நிலையத்திற்கு, இந்திய தொழில் கூட்டமைப்பு வழங்கிய 2010 ஆம் ஆண்டிற்காக விருதினையும், கிங் நோய்த் தடுப்பு நிலையத்தின் துணை இயக்குநர் டாக்டர் ப. குணசேகரனுக்கு, இந்தியன் அசோசியேஷன் ஆப் அப்ளைடு மைக்ரோ பயாலஜீஸ்ட் என்ற அமைப்பு வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வி.கே. சுப்புராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

No comments:

Post a Comment