Search This Blog

Tuesday, June 11, 2013

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அவசரமாக தொடங்கியது ஏன்? தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி



தி.மு.க தலைவர் கலைஞரின் 90ஆவது பிறந்த நாள் விழா மற்றும் ஒகேனக் கல் கூட்டு குடிநீர் திட் டம் வழங்கிய தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோ ருக்கு பாராட்டு விழா ஓசூரில் நேற்று (9.6.2013) மாலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். நாடாளு மன்ற உறுப்பினர் இ.ஜி.சுகவனம் மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
கலைஞரால் உரு வாக்கப்பட்ட ஒகேனக் கல் கூட்டு குடிநீர் திட் டத்தை முழுமையாக நிறைவு பெறாத நிலை யில் அவசர அவசரமாக தொடங்கி வைத்துள்ள னர். தி.மு.க ஆட்சியில் 90 சதவீத பணிகள் முழுமை பெற்றிருந்தன. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் 10 சதவீத பணிகள் முடிக்க தாமதம் ஆனது.
கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதால் தாமதப்படுத்தினார்களா?. திட்டத்தை தாமதப் படுத்த என்ன காரணம்? என்று கேட்டேன்.
என்னிடம் 2 மாதம் இந்த பணிகளை முடிக் கும் அதிகாரத்தை தாருங் கள், முடித்து தருகிறேன் என்று கூறினேன். இதை பார்த்த ஜெயலலிதா, அவசரமாக இந்த பணி களை முடித்ததாக கூறி தொடங்கி வைத்தார்.
தருமபுரி, கிருஷ்ண கிரி மாவட்டத்தில் 30 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் இந்த திட்டம் தி.மு.க ஆட்சி யில் தொடங்கப்பட்டு பணிகள் நடந்தது. ஆனால் தி.மு.க ஆட்சி யில் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டதாக இந்த மாவட்டஅமைச் சர் அபாண்டமான பொய்யை கூறி வருகிற ர். 1997இல் தி.மு.க ஆட்சியில் ரூ.576 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத் திற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
பின்னர் பொக்ரான் அணுசக்தி சோதனை யால் திட்டம் காலதாமத மானது. பின்னர் 2001 - 2006 அ.தி.மு.க ஆட்சி யில் அந்த திட்டம் கிடப் பில் போடப்பட்டது. இம்மியளவு கூட பணி நடக்கவில்லை. அவ் வாறு நடந்ததாக நிரூபித் தால் இதே மேடையில் நான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். 2006இல் தி.மு.க ஆட்சி யில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப் பேற்ற பிறகு இந்த திட் டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. ரூ.1928 கோடி ஜப்பான் நாட்டு நிதியுத வியுடன் இந்த திட்டம் 26.6.2008 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2 நாட் களுக்கு முன் ஓசூரில் நடந்த கூட்டத்தில் அ.தி. மு.க அமைச்சர் கே.பி. முனுசாமி என்னிடம் 3 கேள்விகள் கேட்பதாக கூறினார்.
நீங்கள் அமைச்சர், நான் தான் உங்களிடம் கேட்க வேண்டும். எதிர் கட்சியிடம் தான் ஆளுங் கட்சியினர் பதில் கூற வேண்டும். 2012 இல் முடிக்க வேண்டிய இந்த திட்டம் தாமதமாக யார் காரணம்? இப்போது தொடங்கி வைத்ததாக கூறுகிறீர்களே, இன்னும் 50 சதவீத இடங்களுக்கு கூட தண்ணீர் போய் சேரவில்லை. இதை நான் ஆதாரபூர்வமாக நிரூபிப் பேன்.
எங்களை மைனா ரிட்டி ஆட்சி என்று கூறினார்கள். இப்போது நடப்பது 110 ஆட்சி. சட்டமன்றத்தில் எதிர் கட்சி உறுப்பினர்கள் பேச வாய்ப்பு தருவ தில்லை. அது முதல்வரை பஜனை பாடும் மடமாக உள்ளது. சேது சமுத்திர திட்டத்தை தடுக்க அ.தி. மு.க அரசு முயற்சிக் கிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் அதிகளவில் நடக்கிறது. இந்த ஆட்சியில் பத்திரி கைகள் மீது மட்டுமல்ல, டி.வி செய்தி வாசிப்பா ளர்கள் மீது கூட வழக் குகள் போடப்படுகிறது. இதே நிலை நீடித்தால் டி.வி பார்ப்பவர்கள் மீது வழக்கு பதியும் நிலை ஏற்படும். சசிகலா குடும் பத்தினர் மீது எதற்காக வழக்கு போடுகிறார்கள்? எதற்காக விடுவிக்கிறார் கள் என்று தெரியவில்லை.
-இவ்வாறு மு.க.ஸ்டா லின் பேசினார்.

No comments:

Post a Comment