Search This Blog

Thursday, June 9, 2011

தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியால் கைவிடப்பட்ட திட்டங்கள்

ஆளுநர் உரை தரும் தகவல்கள்


சென்னை, ஜூன் 3- தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப் பட்ட திட்டங்கள், முடிவெடுக் கப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கைவிடப்படுகின் றன என்னும் தகவல்கள் இன் றைய ஆளுநர் உரையில் வெளிப் படுத்தப்பட்டுள்ளன. விவரம் வருமாறு:

இம் மாநிலத்தில் சட்ட மேலவை ஒரு தேவையற்ற அமைப்பாகக் கருதப்பட்ட தால் 1.11.1986 அன்று எம்.ஜி.ஆர். அவர்களால் கலைக்கப்பட்டது.

எனவே, மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டுவரத் தேவையில்லை என இந்த அரசு கருதுகிறது. சட்டப் பேரவை யில் இப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச் செயலகக் கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப் படுவதற்கு முன்பே மார்ச் 2010 இல் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் புதிய கட்டடத்தில் போதிய வசதிகள் ஏற்படுத்தப் படவில்லை. அடிப்படை வசதி கள்கூட அங்கு இல்லை.

கட்டுமானப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பே அவசர அவசரமாக ஒரு சில துறை களும், முதலமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களும் அந்தப் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன.

ஆறு செயலகத் துறைகள் மட் டுமே புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் மீத முள்ள 29 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய கட்டடத்திலேயே இயங்கி வந்தன. அமைச்சர் களின் அலுவலகங்கள் மட்டும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தொடர்புடைய துறை அலுவலகங்கள் தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டையிலே உள்ள பழைய தலைமைச் செயலகக் கட்டடத் திலேயே செயல்பட்டு வந்தன.

இவ்வாறு துறைகளை ஒரு இடத்திலும், அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் ஒரு சில துறைகள் மட்டும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு மாற்றியது தேவையற்ற நிருவாகப் பிரச்சினையை ஏற்படுத்தியதுடன் பொதுமக்களுக்கும் இடையூறாக அமைந்துள்ளதால், இந்த அரசு புனித ஜார்ஜ்  கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகக் கட்டடத்திலேயே தனது நிருவாகப் பணிகளைத் தொடர முடிவு செய்துள்ளது.

புதிய தலைமைச் செயலகக் கட்டடப் பணிகளுக்குக் கூடுதலான மற்றும் பயனற்ற செலவு, காலதாமதம், தரமற்ற கட்டுமானப் பணிகள் போன்ற குறைபாடுகள் உள்ளதாக பல்வேறு குற்றச் சாற்றுகள் எழுந்துள்ளன.

இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணை முறையாக நடைபெற ஏதுவாக புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்.

கடந்த ஆட்சியில் செயல்படுத்தப் பட்டு வந்த ஊரக வீட்டு வசதித் திட்டம் பல குறைபாடுகளுடன் உள்ளது. கட்டுமானச் செலவு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்துவிட்ட நிலையில் அத்திட்டத்தில் ஓர் அலகிற்கு வழங்கப் படும் நிதியான ரூபாய் 75 ஆயிரம் மிகக் குறைந்த அளவாக உள்ளது.

இதனால் ஏழை எளிய குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக மிக அதிக எண்ணிக்கையில் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட வில்லை.

எனவே, இத்திட்டத்தினை கை விடுவதென இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாற்றாக, கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தொடங்கப்படும்.  இத்திட்டத்தில் சுமார் 300 சதுர அடி அளவில் ரூபாய் 1.80 லட்சம் செலவில் அரசே வீடு கட்டிக் கொடுக்கும்.

அதே போல், நகர்ப்புற ஏழைகளின் வீட்டு வசதிக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் நிதியை ஒருங்கிணைத்து ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை நகரில் ஆற்றோரங்களில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான நவீன வீடுகள் வழங்கப்படும்.

அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய தரமான மருத்துவ சேவையை வழங்குவதே இந்த அரசின் நோக்கமாகும். தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் தேவைகளை நிறைவு செய்யத் தக்க வகையில் முழுமையாக இல்லை என்பதால், இத்திட்டம் கைவிடப்படும்.

அனைவருக் கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப் படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தும்.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை மக்கள் பயன் பெறக்கூடிய வகையில் 24 மணி நேரமும் செயல்படும் மய்யங்களாக மாற்ற்றி மைக்கப்படும். மருத்துவச் சுற்றுலாவை ஒரு பெரிய அளவில் ஊக்குவிக்க ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய மருத்துவ நகரங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப் படும். மருத்துவத் துறையில் தனியார் மூல தனத்தை அதிகரிக்கும் வகையில் தெளி வான வழிமுறைகள் இந்த அரசு வகுக்கும்.

தரமான பள்ளிக் கல்வியை இலவச மாக அனைவருக்கும் வழங்குவது இந்த அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன் றாகும். முக்கிய கல்வி சார்ந்த குறியீடுகளான பள்ளிச் சேர்ப்பு விகிதத்தை அதிகரித்தல், இடை நிற்றலைக் குறைத்தல் போன்ற வற்றுடன் அடிப்படைக் கட்டமைப்பு களை மேம்படுத்தவும் இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். சமச்சீர் கல்வி என்ற பெயரில் பள்ளிக் கல்வியின் தரத்தைக் குறைத்து அதனால் மாணவர் களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதை இந்த அரசு விரும்பவில்லை.

பள்ளிக் கல்வி முறை மாணவர்களின் செயல் முறை அறிவாற்றலையும், ஆக்க பூர்வமான சிந்தனைத் திறனையும் மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் பிற மாணவர் களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் வகையில் உருவாக்க இந்தக் கல்வி முறை வகை செய்யவேண்டும்.

ஆனால், தற்போது தயாரிக்கப் பட்டுள்ள பொது பாடதிட்டம் இந்த நோக் கத்தை எய்த போதுமானதாக இல்லை. எனவே சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டங்கள் மறு ஆய்வு செய்யப் படும். ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு இது குறித்து ஆய்வு செய்து பரிந்துரை களை அளிக்க உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

அதிக எண்ணிக்கையில் உயர் கல்விக்கான பல்கலைக் கழகங்களைத் தொடங்கி விட்டால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்துவிடாது என இந்த அரசு கருதுகிறது. அண்ணா பல்கலைக் கழகங் களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதால் சென்னை அண்ணா பல்லைகக் கழகம் வலுவிழந்து விட்டது.

இதனால் கல்விச் சேவையின் தரம் உயராமல் சுயமாகச் செயல்பட இயலாத பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர இந்த அரசு முடிவெடுத்துள் ளது.

இந்த அரசு பல்கலைக் கழகங்களை சீரமைத்து உலகத் தரம் மிக்க நிறுவனங் களாக மாற்றிமைக்க சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும்.

No comments:

Post a Comment