Search This Blog

Thursday, June 9, 2011

தி.மு.க. இன்றைக்குத் தோல்வி அடைந்திருக்கலாம் சமுதாயத் துறையில் பெற்றிருக்கின்ற வெற்றி மிகப்பெரியது

தி.மு.க. இன்றைக்குத் தோல்வி அடைந்திருக் கலாம். ஆனால் சமுதா யத் துறையில் பெற்றிருக் கின்ற வெற்றி சாதாரண மானதல்ல என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறி விளக்கி பேசினார்.

தி.மு.கழக அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் இல்ல மண விழாவை  (8.6.2011)  தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்து ரையாற்றினார் அவர்.  உரை வருமாறு:-

கழகத்தின் அமைப் புச் செயலாளர் கல் யாணசுந்தரம், திருமதி திலகா ஆகியோரின் அன்பு மகன் டாக்டர் கதிரவன் அவர்களுக்கும், ஈரோடு டாக்டர் இ.கே.சகாதே வன் - டாக்டர் உஷா ஆகியோரின் அன்பு மகள் டாக்டர் ரோகிணி அவர்களுக்கும் இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கின்றது. நாமும் நம்முடைய மன மகிழ்ச்சியைத் தெரிவித்து அவர்களை வாழ்த்தியிருக்கிறோம்.

கொள்கைப் பிரச்சாரம்

இங்கே பேராசிரியர் பேசும்போது திராவிட முன்னேற்றக் கழகத் திற்கு அரசியல் மாத்திர மல்ல, இதைப் போன்ற திருமணங்களை நம்மு டைய தமிழ் முறைப் படி, தமிழ் நெறிப்படி நடத்துகின்ற அந்தப் பணியும் திராவிட முன் னேற்றக் கழகத்தினுடைய பணிகளிலே ஒன்று தான் என்று குறிப்பிட்டார்.  திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு இந்த அளவிற்கு வளர்ந்திருக் கிறதென்றால், மாநாடு களைப் போட்டு அல்ல, பெரிய பெரிய நிகழ்ச்சி களை நடத்தி அல்ல, ஆட்சிப் பொறுப்பிலே அரும்பெரும் காரியங் களை நடத்தி அவை களை யெல்லாம் விழாக் களாகக் கொண்டாடி மட்டும் அல்ல.

தி.மு. கழ கத்தின் வளர்ச்சி ஆரம்ப காலத்திலேயிருந்து இதுவரையிலே மெல்ல மெல்ல ஆனால் உறு தியாக நடைபெற்றிருக் கின்றது என்றால் அதற் குக் காரணம் நாம் தொடர்ந்து ஆற்றி வரு கின்ற கொள்கைப் பிரச் சாரம், சமுதாய எழுச்சிப் பிரச்சாரம், தாழ்த்தப் பட்ட மக்கள், பிற்படுத் தப்பட்ட மக்கள், நடுத் தர மக்கள், சிறுபான்மை மக்கள் இவர்கள் எல் லாம் தமிழகத்தில் நல் வாழ்வு பெற வேண்டு மென்பதற்காக சூளு ரைத்து இன்று வரை யிலே தொடர்ந்து அந் தப் பணியினை ஆற்றி வருகின்ற காரணத்தினா லேதான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

பேராசிரியர் எடுத்துச் சொன்னதைப் போல தோல்வி நமக்கு ஒரு தடைக் கல் அல்ல. என் னைப் பொறுத்த வரை யில் நான் உங்களுக்குச் சொல்வேன் - இந்தியா வினுடைய இளந்தலை வர் ராஜீவ் காந்தி அவர் கள் மறைவுற்றபோது திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது  பொய்ப் பழி சுமத்தி, மாற்றுக் கட்சிக்காரர்கள் செய்த பிரச்சாரத்தின் காரண மாக நாம் மக்களுடைய ஆதரவை பெருவாரி யாக இழந்தோம்.

அப்படி, இழந்த அந்தக் கால கட் டத்தில் நான் மாத்திரம் துறைமுகம் தொகுதியில் ஒரேயொரு ஆள் வெற்றி பெற்றேன். ஒரே ஒரு தொகுதியில் தான் நாம் வெற்றி பெற முடிந்தது.

அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் பல இடங்களிலே வெற்றி பெற்று, இன்னும் சொல் லப் போனால் தமிழ் நாட்டில் முதன் முதலாக 185 இடங்களில் வெற்றி பெற்ற இயக்கம், திரா விட முன்னேற்றக் கழ கம் என்கின்ற பெருமை யைப் பெற்று ஆட்சியை நடத்தியதை யாரும் மறந்து விட இயலாது.

இரண்டு  நாட்களுக்கு முன்பு ஒரு அம்மையார் - சூரியன் மறைந்தது  மறைந்ததுதான் , அஸ் தமனமானது - அஸ்த மனமானது தான், இனி உதிக்காது என்று சொல் லியிருக்கிறார். சின்னப் பிள்ளை ஒன்றைக் கூப் பிட்டு, இன்றைக்கு சூரி யன் மறைந்தால் நாளைக்கு என்ன ஆகும் என்று கேட்டால், நாளைக்கு மீண்டும் உதிக்கும் என்று சொல்லும். ஒரு குழந் தைக்குத் தெரிந்த ரகசி யம் கூட குவலயத்தை ஆளுவதாகச் சொல்லிக் கொள்ளும் கோதை களுக்குத் தெரியாதது ஆச்சரியம்தான்! எனவே பகலும், இருளும் மாறி மாறி வருவதைப் போல வெற்றியும், தோல்வியும் ஒரு இயக்கத்திற்கு மாறி மாறி வருவது இயல்பு தான்.

இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வருகின்ற இந்தக் கழகத் திற்கு நீதிக் கட்சி என்ற பெயர் இருந்தபோது - எவ்வளவு பெரிய தோல் விகளை யெல்லாம் இது சந்தித்தது என்பதை தமிழ்நாட்டின் வரலாற் றைத் தெரிந்தவர்கள் புரிந்து கொண்டிருப் பார்கள்.

அதற்குப் பிற கும்கூட, திராவிட முன் னேற்றக் கழகம் என்ற பெயரால் நாம் போட்டி யிட்ட போது, முதலில் 15 இடங்களில்தான் வென்றோம், அதற்குப் பிறகு 50 இடங்கள், அதற் குப் பிறகு ஆட்சிப் பொறுப்பு என்ற அள விற்கு படிப்படியாகத் தான் வளர்ந்தோம்.

ஆகவே படிப்படி யாக வளர்ந்து தமிழ் நாட்டு மக்களை படிப் படியாக முன்னேற்று கின்ற அந்தப் பணியிலே ஈடுபட்டிருக்கின்ற இந்தக் கழகத்தை அவ் வளவு சுலபத்திலே யாரும் புறம் தள்ளி விட முடி யாது. யாரும் வெற்றி கொள்ள முடியாது.

இண உணர்வின் அடையாளம்

திராவிட முன்னேற் றக் கழகம் என்பது ஒரு இயக்க மல்ல, ஒரு கட்சி யல்ல, திராவிட முன் னேற்றக் கழகம் என்பது ஒரு இன உணர்வின் அடையாளம். அந்த இன உணர்வை அழித்து விட்டு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் தோற்கடிப் போம் என்று யாராவது சொன்னால், அவர்களை பைத்தியக்காரர்களின் பட்டியலிலேதான் வைக்க வேண்டுமே தவிர, வேறெங்கும் எது வும் சொல்ல இயலாது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கழகம் இன்றைக்கு தோல் வியைச் சந்தித்திருக்கிறது என்றாலும், சமுதாயத் துறையில் பெற்றிருக் கின்ற வெற்றி சாதாரண மானதல்ல. பலப்பல வெற்றிகளை திராவிட முன்னேற்றக் கழகம் சமுதாயத் துறையிலே பெற்றிருக் கின்றது, அப் படிப்பட்ட வெற்றிக ளிலே ஒன்று தான் இந் தத் திருமண வெற்றி.

திருமணத்தை நம் முடைய தம்பி கல்யாண சுந்தரம் அவர்கள், அவ ருடைய இல்லத்திலே இவ்வளவு சிறப்பாக நடத்துகிறார், இவ்வளவு பேர் இந்த மண விழா விற்கு வந்திருக்கிறோம் என்றால், இது திரும ணம் மூலமாகவும் நம் முடைய கழகத்தின் கொள்கைகளைப் பரப் புவதற்குக் கிடைத்திருக் கின்ற வெற்றி என்பதை யாரும் மறுக்க முடி யாது. தலைமைக் கழ கத்திலே பாடுபடுகின்ற தம்பிகளில் கல்யாண சுந்தரம் தலைசிறந்தவர்.

அப்படிப்பட்ட தம்பி யின் இல்லத்தில் நடை பெறுகின்ற இந்த மண விழாவிலே கலந்துகொள் வதிலும் மணமக்களை வாழ்த்துவதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து மன நிறைவடைந்து இந்த அளவோடு வாழ்க மண மக்கள் என்று கூறி விடை பெறுகிறேன்.

- இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

1 comment: