Search This Blog

Thursday, June 9, 2011

தமிழ்நாட்டில் இலவசமாக வழங்க தரிசு நிலம் இல்லையாம்!


சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தகவல் சென்னை, ஜூன் 8- சட்டசபையில் உறுப்பினர் சிதம்பரம் பால கிருஷ்ணன் (சி.பி.எம்) பேசும்போது ``தமிழ்நாட்டில் கிடக்கும் தரிசு நிலங்களை ஏழை, எளிய விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா (குறுக்கிட்டு) பதில் அளித்தபோது கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஏற்கெனவே கிடந்த தரிசு நிலங்களை, எம்.ஜி.ஆர். ஆட்சியிலும், என் தலைமையில் நடைபெற்ற ஆட்சியிலும், வழங்கப்பட்டுவிட்டன. மேலும் வழங்குவதற்கு தரிசு நிலமே இல்லை என்று கூறினார்.

No comments:

Post a Comment