Search This Blog

Monday, July 25, 2011

சி.பி.அய்யின் உள்நோக்கத்துடனான செயல்பாடு! தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சி.பி.அய் என்ற அமைப் பைக் குறை சொல்ல வில்லை; அந்த அமைப் பில் உள்ள சிலர் உள் நோக்கத்துடன் செயல் படுகின்றனர் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

கோவையில் தி.மு.க. பொதுக்குழு முடிவுற்ற நிலையில் தி.மு.க. தலை வர் கலைஞர் அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர்:- இன்றைய பொதுக் குழு வில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?

கலைஞர்:- பொதுக்குழு உறுப்பினர் கள் மொத்தம் 1485 பேர். அவர்களில் வருகை தந் தோர் 1320 பேர். அணி களின் அமைப்பாளர் கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மொத்தம் 408 பேருக்கு வருகை தந்தோர் 400 பேர். சிறப்பு அழைப்பா ளர்கள் 348 பேருக்கு வருகை தந்தோர் 330 பேர். மொத்தம் 2241 பேர் களில் வருகை தந்தோர் 2050 பேர்.

செய்தியாளர்:- பொதுக்குழுவில் எடுத்த முக்கியமான முடிவுகள் என்ன?

கலைஞர்:- பொதுக் குழுவில் 25 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டு உங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அவைகள்தான் முக்கிய மான முடிவுகள்.

செய்தியாளர்:- தேர்தலுக்குப் பிறகு நடைபெறுகின்ற முதல் பொதுக்குழு இது. காங் கிரஸ் கட்சியோடு உங் கள் கூட்டணி தொடருமா என்பது பற்றியும் மத்தி யில் இரண்டு அமைச் சர்களை தி.மு.க. அனுப் புவது பற்றி முடிவு செய் யும் என்றும் சொல்லி யிருந்தீர்கள். அதைப்பற்றி முடிவெடுக்கப்பட்டதா?

கலைஞர்:- மத்திய அமைச்சரவையில் இரண்டு பேர் சேருவது பற்றி மூத்த மத்திய அமைச் சர்கள் என்னிடம் பேசி னார்கள். அதைப் பற்றி நானும், பேராசிரியரும் மற்றும் கழகத்தின் நிரு வாகிகளும், பாராளு மன்ற கழகக் குழுவின் நிருவாகிகளும் கலந்து பேசி எடுத்த முடிவைத் தான் இன்றைக்கு பொதுக் குழுவின் இறுதியில் நான் அறிவித்திருக்கிறேன். அதாவது Status quo will continue என்று சொல்லி யிருக்கிறேன்.

அதாவது இரண்டு அமைச்சர்கள் பதவிகள் தி.மு.கழகத்தில் இருந்து போனது போனதுதான். அவர்களுக்குப் பதிலாக யாரை யும் நியமனம் செய்ய வேண்டுமென்று நாங்கள் கேட்கவில்லை. ஏற்கெனவே ராஜா இல்லை, தற்போது தயாநிதிமாறன் விலகிவிட்டார். அந்த இரண்டு இடமும் தி.மு. கழகத்தைப் பொறுத்த வரை வெற்று இடங்களாக இருக்கும். அவற்றை நிரப்ப தி.மு. கழகம் முனையாது.

ஆனாலும், அந்த இரண்டு இடம் தி.மு.கழகத்தின் சார்பாக நிரப்பப்படாவிட்டா லுங்கூட, திராவிட முன் னேற்றக் கழகம் தொடர்ந்து காங்கிரஸ் அணியில் இருக்கும். அதைத் தான் ஆங்கிலத்தில் இங்கே Status quo will maintain - என்று சொன்னேன்.

செய்தியாளர்:- காங் கிரஸ் கட்சியின் மீது உங்களுக்குள்ள அதிருப் தியின் வெளிப்பாடு என்று சொல்லலாமா?

கலைஞர்:- கட்சி யின் மீது எங்களுக்கு அதிருப்தி இல்லை. ஆனால், இங்கே சில பேர் பேசிக் கொண்டி ருக்கிறார்கள். அவர் களுக்கு எங்கள் மீது இருக்கின்ற அதிருப் தியை நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம். அதாவது சில காங்கிரஸ்காரர்கள் இங்கே கூட்டங்களில் பேசுகிறார்கள் - அவர் கள் வெளிப்படுத்துகின்ற அதிருப்தியைத்தான் பொதுக் குழுவிலே உறுப்பினர்கள் எல்லாம் எடுத்துச் சொன்னார் கள்.

அதன் காரணமா கத்தான் எந்த மாற்றத் தையும் இப்போது நாங் கள் செய்யாமல் மத்திய அமைச்சர் பதவியை ஏற் காமல் புதிய அமைச்சர் களாக யாரையும் நியமிக் காமல் ஏற்கனவே இருக் கின்ற அமைச்சர்கள் அப்படியே நீடிப்பார் கள் என்பதைத் தான் நான் சொன்னேன்.

செய்தியாளர்:- பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு இடங் களைப் பற்றி தி.மு.கழ கம் அறிவிக்கும் என்று சொல்லியிருந்தாரே?

கலைஞர்:- தி.மு.கழ கத்தின் முடிவைத்தான் இப்போது அறிவித்திருக் கிறோம்.

சி.பி.அய்யின் செயல்பாடு

செய்தியாளர்:- மத் திய புலனாய்வுத் துறை - சி.பி.அய். ஏற்கனவே போபர்ஸ் வழக்கில் உலக அளவில் அது ஒரு சார்பானது என்பதை நிரூபித்திருக்கிறது. தற்போது நீங்கள் சி.பி.அய். உள்நோக்கத்தோடு செயல்பட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறீர்கள். அதைக் காரணமாக வைத்து நீங் கள் சி.பி.அய். மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பீர்களா?

கலைஞர்:- நாங்கள் சி.பி.அய். என்ற அமைப் பையே குற்றம் சொல்ல வில்லை. அந்த அமைப் பிலே உள்ள சிலர் - அந்த அமைப்பின் பொறுப் பிலே உள்ளவர்கள் - சில பேர் உள் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

செய்தியாளர்:- உங் களுக்குப் பிறகு யார் உங் கள் கட்சியின் தலை மைக்கு வருவார்கள் என்று கேட்டதற்கு நீங் கள் பொதுக்குழுதான் அதை முடிவு செய்யும் என்று சொல்லியிருக் கிறீர்கள். இந்தப் பொதுக் குழுவில் அடுத்த தலை மையைப் பற்றி முடிவு செய்யக்கூடிய சாத்யக் கூறுகள் அதிகமாக இருந்தது. அதைப் பற்றி முடிவெடுக்கப்பட்டதா?

கலைஞர்:- ஒவ்வொரு பொதுக்குழுகூடும் போதும், மீடியாக்கள் செய்கின்ற கலகத்திற் காக நாங்கள் ஆட்க ளையோ, தலைவர்க ளையோ மாற்றிக் கொண் டிருக்க முடியாது. இது சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட கட்சி. அண்ணா காலத்திலிருந்து சட்ட திட்டங்கள், விதி முறை களை வகுத்துக் கொண்டு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவது - எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்களை சேர்ப்பது - தலைவரைத் தேர்ந்தெடுப்பது என் றெல்லாம் திட்டமிட் டுப் பணிபுரிகின்ற இயக் கம் திராவிட முன்னேற் றக் கழகம். இந்தக் கேள் வியைக் கேட்ட சேகர் போன்றவர்களின் இஷ் டத்திற்கு நாங்கள் மாற் றிக் கொண்டிருக்க முடி யாது.

எதிர்காலத்தில் தி.மு.க.வுக்குத் தலைவர்...

செய்தியாளர்:- இன் றைக்குக் கூட பொதுக் குழுவில் பேசிய மூத்த தலைவர், எதிர்காலத் திற்கு ஒரு மூத்த தலைவ ரைச் சுட்டிக் காட்ட வேண்டுமென்று பேசி யிருக்கிறாரே?

கலைஞர்:- சேகர் என்ற செய்தியாளரை தி.மு.கழகத்தின் எதிர்கா லத் தலைவராக (அனைவரும் சிரிப்பு) தேர்ந் தெடுக்கலாம் என்றுகூட பேசினார்கள்...

செய்தியாளர்:- உள் கட்சியிலே கீழ் மட்டத் திலிருந்து பொறுப்பு களில் மாற்றம் வருமா?

கலைஞர்:- இல்லை.

செய்தியாளர்:- பொதுக்குழுவின் மாலைக் கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லையே?

கலைஞர்:- பொதுக் குழுவில் கலந்து கொள்ள வில்லை என்றால் வந்தே இருக்க மாட்டார். வந் திருந்தார், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற் குப் பிறகுதான் ஊருக்குச் சென்றிருக்கிறார்.

செய்தியாளர்:- இந் தத் தேர்தல் தோல்விக்கு தி.மு.க.தான் காரணம் என்று பா.ம.க. சொல்லி யிருக்கிறது, கொங்கு நாடு முன்னேற்றக் கட்சியும் சொல்லியிருக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர்:- தி.மு.கழ கத்தின் இந்தத் தோல் விக்கு நான்தான் காரணம் என்று பொதுக் குழுவிலே நானே பேசியிருக்கிறேன். அதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறேன்.

-இவ்வாறு தலைவர் கலைஞர் அவர் கள் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment