Search This Blog

Saturday, July 23, 2011

சமச்சீர் கல்வி: வீண் பிடிவாதம் வேண்டவே வேண்டாம்! - கலைஞர் அறிக்கை

2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்திருந்ததின் அடிப்படையில், சமச்சீர் பள்ளிக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010 இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010-2011ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பு களில் நடைமுறைப்படுத்தப் பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டு ஓராண்டு அந்த மாணவர்களும் அதனைப் படித்து முடித்து விட்டனர்.

2011-2012ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடை முறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்த கங்கள் 200 கோடி ரூபாய்ச் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.

இந்த வகுப்புகளுக்கான பாடத் திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொது மக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை வலை தளத்தில் வெளியிடப்பட்டது. சமச்சீர் கல்விச் சட்டத்தினை தள்ளுபடி செய்யக் கோரி ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் சங்கத் தினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்குகளில் 30.4.2010 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பாணையில்; தமிழக அரசால் பிறப்பிக்கப் பட்ட இச்சட்டம் செல்லத்தக்கது என நிலை நிறுத்தம் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பாணைக்கு இடைக்காலத் தடை வழங்கக்கோரி புதுடெல்லி, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அ.தி.மு.க. அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் திரு. கே. சியாம் சுந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவின் மீது நீதியரசர் கள் திரு. எஸ்.ராஜேஸ்வரன், திருமதி கே.பி.கே. வாசுகி ஆகியோர் கூறும்போது, சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது.

சிறந்த வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கெனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையைச் செலவிடுவது அவசியம் தானா? இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜென ரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். மேலும் ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை - இந்த நீதிமன்றத்தால் உறு திப்படுத்தப் பட்ட சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்விகளுக் கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்து, அ.தி.மு.க. அரசின் சமச்சீர் கல்வி தொடர்பான திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைத்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்தபோது, நீதியரசர்கள் பி.எஸ். சவுகான், சுதந்திரகுமார் அளித்த தீர்ப்பில், 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும். அதை இடையில் நிறுத்தினால் குழப்பம் ஏற்படும். 2 முதல் 5ஆம் வகுப்பு வரையும், 7ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையும் சமச்சீர் கல்வியை அமல்படுத்து வது குறித்து ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படு கிறது. இந்த நிபுணர் குழு தனது அறிக்கையை 2 வார காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தினமும் விசாரணை நடத்தி ஒரு வார காலத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும். என்று கூறினார்கள் . இந்தத் தீர்ப்பின்படி அ.தி.மு.க. அரசு கல்வியாளர்கள் குழு ஒன்றினை அமைத்தது. அந்தக் குழுவில் சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களே இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற கருத்து பலரா லும் சொல்லப்பட்டது.

அதைப் பற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்படாமல், அந்தக் குழு வினைக் கொண்டே அறிக்கை ஒன்றினைத் தயார் செய்து, அந்த அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. அந்த அறிக்கை சமச்சீர் கல்வி முறை ஏற்கத் தக்கது அல்ல என்றும், கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சமச்சீர் கல்வி இல்லை என்றும், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அவசரக் கோலத்தில் தயாரிக் கப்பட்டது என்றும், பாடங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் உள்ளது என்றும் இப்படிப் பல முரண்பட்ட காரணங்களையெல்லாம் சொல்லி யிருப்பதாக செய்தி கூறப்பட்டது. அந்த அறிக்கை யையும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவினைத் தெரிவித்துள்ளது.

சமச்சீர் ஆராயப்பட்ட ஒன்று

சமச்சீர் கல்வி முறை பல்வேறு குழுக்களால் பல ஆண்டுகளாக பரிசீலனை செய்யப்பட்டு, பாடத் திட்டங்கள் முறைப்படி வகுக்கப்பட்டு நடை முறைக்கு வந்த திட்டமாகும். அதனை எப்படி யாவது கெடுக்க ஆட்சிக்கு வந்திருப்போர் முயற்சிப் பதை ஏற்கெனவே உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்ற மும் உணர்ந்துதான் தங்களது கருத்தினைத் தெரிவித்திருக்கின்றார்கள். இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து சென்னை உயர் நீதிமன்றம் இதற்கான தீர்ப்பினை இறுதித் தீர்ப்பாக வழங்கி மாணவர்களின் எதிர்கால நலனைக் காப்பாற்று வார்கள் என்று பெரிதும் நம்புகிறேன் என்று நான் ஏற்கெனவே ஓர் அறிக்கையில் கூறியிருந்தேன். அதன் படி 18-7-2011 அன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பினை அளித்துள்ளது.

தீர்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களும், நீதியரசர் திரு. டி.எஸ். சிவஞானம் அவர்களும் அளித்துள்ள தீர்ப்பில் முக்கியப் பகுதிகளை நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். அவர்கள் தங்கள் ஆணையின் தொடக்கத்திலேயே-
About one crore twenty three lakh school children of Std. I to X and their parents in the State of Tamil Nadu are without any textbooks and syllabus, and are a dilemma as to whether the Uniform Syllabus, which was to commence as per the Tamil Nadu Uniform System of School Education Act, 2010, shall be postponed because of the amendment brought in the Act by the new Government, immediately after coming into power, and whether the textbooks as per the new syllabus got printed and made ready by spending about 200 crores of rupees by the erstwhile Government shall be destroyed or disposed of.

அதாவது தீர்ப்பினைத் தொடங்கும்போதே, 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் 1 கோடியே 23 லட்சம் மாணவர்களும், அவர்களுடைய பெற் றோரும் எந்தப் புத்தகமும் இல்லாமல் குழப்பத் திலே ஆழ்ந் திருக்கிறார்கள் என்றும், புதிய அரசு அமைந்தவுடன் கொண்டு வந்த திருத்தச் சட்டத் தின்படி தயாரித்த பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டுமா அல்லது சமச்சீர் கல்வித் திட்டப்படி 200 கோடி ரூபாய் செலவழித்து தயாரான புத்த கங்களைப் படிக்க வேண்டுமா அல்லது அவைகளை அழித்து விட வேண்டுமா என்று தெரியாத நிலைமை உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தீர்ப்பின் 2ஆவது பத்தியில், For the purpose of achieving social justice and quality education, the erstwhile Government enacted the Samaceer Kalvi Thittam (சமூக நீதியையும், தரமான கல்வியையும் கொடுப்பதற்காக இதுவரை இருந்த அரசாங்கம் சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தது ) என்று நீதியரசர்கள் கூறியிருப்பதிலிருந்தே தி.மு. கழக ஆட்சியில் எந்த நோக்கத்துடன் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்பது தெளிவாகும். உச்சநீதிமன்றம் அரசின் சார்பில் ஒரு குழு வினை அமைத்து, அந்தக் குழு உயர்நீதிமன்றத் திற்குப் பரிந்துரைகளை அளித்து, அதைப்பற்றி உயர்நீதி மன்றம் விசாரித்து தீர்ப்பினை அளிக்க வேண்டு மென்று கூறியது. தமிழக அரசும் அவ்வாறே ஒரு குழுவினை அமைத்தது. அந்தக் குழுவிலே இடம் பெற்றவர்கள் பற்றியெல்லாம் ஏற்கனவே ஏராளமாக ஏடுகளிலே வெளி வந்துள்ளது. அதைப் பற்றி யெல்லாம் இங்கே நான் விவரிக்க விரும்பவில்லை. ஆனால் அந்தக் குழுவின் அறிக்கை எவ்வாறு தயாரானது என்பதைப் பற்றி உயர்நீதிமன்றத் தீர்ப்பிலே கூறப்பட்டுள்ளதை நான் விளக்கிட விரும்புகிறேன்.

தீர்ப்பில் 28வது பத்தியில், From the minutes it is evident that the Secretary, School Education has done all exercise collecting suggestions/views including the preparation of the draft report. It is she, who after preparation of the draft final report, placed the same before the Committee on 29-6-2011, which was unanimously approved. It is, therefore, clear that the Secretary, School Education namely, Smt. D. Sabitha has played a major role in the preparation of the Report (கூட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர்தான் வரைவு அறிக்கை தயாரிப்பது முதல் கருத்துக்களை அறிவது வரை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது.

அவர்தான் இறுதி வரைவு அறிக்கையைத் தயாரித்து 29-6-2011 அன்று நடைபெற்ற கூட்டத் திலே அதனை வைத்து ஏகமனதாக ஒப்புதல் பெற்றுள்ளார். எனவே அறிக்கையைத் தயாரிப்பதில் பள்ளிக் கல்வித் துறையின் செயலாளரான திருமதி டி.சபீதா அவர்கள் பிரதானமான பணியினை வகித்துள்ளார்) என்று நீதியரசரே, அந்த அறிக்கை எவ்வாறு தயாரிக்கப் பட்டது என்பதை விவரித்துள்ளார். இதிலிருந்து அ.தி.மு.க. அரசின் செயலாளரே தன்னிச்சையாக ஓர் அறிக்கையைத் தயாரித்து, குழு கொடுத்ததாக நீதிமன்றத்திலே தாக்கல் செய்திருக் கிறார் என்பது உயர்நீதிமன்றத் தீர்ப்பிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

மேலும் உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பில், பத்தி 29இல் It is worth to mention here that the Same Secretary, School Education Department Mrs. D. Sabitha defended the State by supporting the amendment made Section 3 of the Act of 2010 by filing a counter affidavit. (பள்ளிக் கல்வித் துறையின் இதே செயலாளர்தான் மாநில அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக எதிர் மனுவினைத் தாக்கல் செய்தவர் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்) என்றும் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 2010-2011ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டமே தொடர வேண்டுமென்றும், மாநில அரசினால் அமைக்கப்படும் குழு 2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 7 முதல் 10ஆம் வகுப்பு வரையிலும் சமச்சீர் கல்வி முறையினை எவ்வாறு நடை முறைப்படுத்துவது, அதற்கான புத்தகங்கள் எவை என்பதைப் பற்றி பரிந்துரைகள் தர வேண்டு மென்றும் கூறியிருந்தது என்ற போதிலும், அதற்கு மாறாக தமிழக அரசினால் அமைக்கப்பட்ட குழு சமச்சீர் கல்வி முறையே கூடாதென்றும் அதற்கான பாடத் திட்டங்களே கூடாது என்றும் கூறி யிருப்பது சரியல்ல என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

அதைப்பற்றி கூறும்போது,This is in our view is a total misreading and misinterpretation of the terms of reference made to the Committee, a thorough wrong reading of the scope and ambit of the direction issued by the Hon’ble Supreme Court என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரைக்கு மாறாக தமிழக அரசு செயல் பட்டுள்ளது என்பதை இந்த வார்த்தைகளே தெளிவாக்குகின்றது.

புத்தகங்களைத் தேர்வு செய்வது என்பதைப் பொறுத்து சென்னை உயர்நீதிமன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பினை 10-6-2011 அன்று அளித்தபோதே தெளிவாகச் சொல்லியிருக் கிறது என்றும் ஆனால் மாநில அரசு கேட்கவில்லை என்றும் தீர்ப்பில் 30வது பத்தியில் கூறப்பட்டுள் ளது. நீதியரசர்கள் அதைப்பற்றி எழுதும்போது, However, these orders and directions have been disregarded by the State என்று தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத் தீர்ப் பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு சமச்சீர் கல்வி முறைக்கு எதிராக அறிக்கை கொடுத்ததைப் போல செய்திகள் வந்த போதிலும் உயர்நீதிமன்றம் அந்தக் குழுவின் உறுப்பினர்களிடமிருந்து தனித் தனியாக கருத்துக்களைக் கேட்டுப் பெற்று அவர் களின் தனிப்பட்ட கருத்துக்களும் உயர்நீதி மன்றத் தீர்ப்பிலே விளக்கமாக வெளியிடப்பட்டுள்ளது. அவைகளையெல்லாம் வெளியிட்ட நீதியரசர்கள் அதைப்பற்றி எழுதும்போது, From the comments/report furnished by the members, referred supra, it is evidently clear that the members have not outrightly discarded the Uniform Syllabus and text books (உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக் களைப் பார்க்கும்போது, உறுப்பினர்கள் சமச்சீர் கல்வி முறையையோ, அதன் பாடப் புத்தகங் களையோ ஒரேயடியாக ஒதுக்கிவிடவில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது) என்று கூறியிருப்பதோடு; It appears that the final report submitted to this Court does not contain the full and actual views expressed by each Committee Member and their intent அதாவது நீதி மன்றத்திற்கு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை, அந்தக் குழு வின் ஒவ்வொரு உறுப்பினர்களும் தெரிவித்த உண்மை யான, முழுமையான கருத்துக்களைத் தாங்கிட வில்லை என்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி யும், மற்றொரு நீதிபதியும் தெரிவித்திருக்கிறார்கள் என்றால், நீதிமன்றத்தையே ஏமாற்றிய குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்திருக்கிறதா இல்லையா என்ப தற்கு அவர்கள் விளக்கம் அளித்தாக வேண்டும்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பில் பத்தி 41இல், நீதியரசர்கள்,We have no hesitation to hold that the State has exceeded in its powers in bringing the Amending Act to postpone an enactment which is already come into force- சமச்சீர் கல்விச் சட்டத்தை செல்லும் என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதை எதிர்த்த மனுக்களையும் உச்ச நீதி மன்றம் தள்ளு படி செய்து விட்டது. இந்தச் சூழ்நிலையில் திருத்தச் சட்டம் என்ற பெயரில் சமச்சீர் கல்வியை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இது உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவதாக அமைந்துள்ளது. எனவே இந்தச் சட்டத் திருத்தம் கல்வி பெறும் சம உரிமை யைப் பாதுகாக்கும் அரசியல் சாசனச் சட்டத்துக்கு எதிரானது. மாநில அரசு அதனுடைய அதிகார வரம்பை மீறியுள்ளது என்று கூறுவதற்கு எங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை - என்றே தெரிவித்திருக்கிறார்கள். மாநில அரசு அதனுடைய அதிகார வரம்பை மீறியுள்ளது என்ற நீதியரசர்களின் இந்த வாக்கியத்தை தமிழக ஏடுகளில் பல வெளியிடாமல் ஆளுங்கட்சிக்கு நன்றி விசுவாசமாக நடந்து கொண்டுள்ளன.

நீதியரசர்கள் பத்தி 43இல் கூறும்போது மாநில அரசின் சார்பிலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சார்பிலும் வாதிடும்போது சமச்சீர் கல்வித் திட்டம் விவாதம் எதுவும் இல்லாமல் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்ததால், தங்களைத் திருப்தி செய்து கொள்வதற்காக பல்வேறு ஆவணங் களைத் தருவித்துப் பார்த்ததாக வும், அப்போது முனைவர் முத்துக்குமரன் அளித்த பரிந்துரைகளைப் பார்த்ததாகவும், அந்தப் பரிந்துரைகள் எல்லாம் நன்றாக ஆய்வு செய்யப் பட்டு விவாதிக்கப்பட்ட பிறகுதான் கொடுக்கப்பட் டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள் 13-5-2011 அன்று வெளிவந்தன; 16-5-2011 அன்று பதவியேற்பு நடை பெற்றது; 22-5-2011 அன்று ஒரு மணி நேரம் மட்டுமே அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று, அதில் சமச்சீர் கல்வி உட்பட பல பிரச்சினைகள் பேசப்பட்டன; 23-5-2011 அன்று பழைய பாடத்திட்டங்கள்படி புத்தகங்களைத் தயாரிக்க டெண்டர்கள் கோரப்பட்டன; என்பதையெல்லாம் பார்க்கும் போது எந்தவொரு சான்றோர்களின் குழுவின் அடிப்படையிலும் அரசாங்கம் இந்த மாற்றத்தை எடுக்கவில்லை என்பதையே காட்டு கிறது என்று உயர்நீதி மன்றத்தீர்ப்பு கூறியுள்ளது.

குழப்பங்கள் ஏற்படும்

There would be a great impact on the student community, if the Amending Act is to be implemented. It would unsettle, settled issues causing chaos and confusion in the young minds, which we cannot permit to be done (அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்தத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தினால் மாணவர் சமுதாயத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி, குழப்பத்தையும், பின் விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதால், அதற்கு நாங்கள் உடன்பட வில்லை) என்பதும் தீர்ப்பிலே உள்ள வாசகங் களாகும்.

We may point out that one of the Committee Members nominated by the Government, after the direction was issued by the Supreme Court, in her comments on the Uniform System of Education, the syllabus and text books has stated that the Samacheer Kalvi is a laudable object and a necessity... However, this observation of the Committee member has not been fully brought out in the final report submitted by the Government to this Court. (உச்சநீதி மன்றத் தீர்ப்புக்குப் பிறகு மாநில அரசு அமைத்த குழு உறுப்பினர்களில் ஒருவர் சமச்சீர் கல்வி பற்றியும், பாடத் திட்டங்கள் பற்றியும் தனது கருத்துக்களைத் தெரிவிக்கும்போது சமச்சீர் கல்வி பாராட்டத்தக்கது என்றும் மிகவும் தேவையான ஒன்று என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அந்த உறுப்பினரின் இந்தக் கருத்து அரசு இந்த நீதி மன்றத்திலே இறுதியாக தாக்கல் செய்த அறிக்கையில் முழுவதுமாகத் தெரிவிக்கப்பட வில்லை) - இதுவும் தமிழக அ.தி.மு.க. அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சான்றிதழ் ஆகும்!

We feel that the decision of the State Government to put on hold Uniform System and to revert back to the 2004 stream is undoubtedly a step backward, which we shall not permit அவை (சமச்சீர் கல்வி முறையைத் தள்ளி விட்டு 2004ஆம் ஆண்டு நிலைக்குச் செல்ல வேண்டுமென்ற மாநில அரசின் முடிவு சந்தேகமில்லாமல் பின்னுக்குச் செல்லும் ஒரு நடை முறையாகும், அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்) என்பதும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வாசகங்களாகும்.

The Parent Act has already been implemented insofar as Class I and VI from the academic year 2010-11. Therefore, to revert back to the position prior to 2010-11 would not only amount to violating the decision of the Division Bench of this Court and would have the effect of repealing the Parent Act, but also detrimental to the interests of the Children.(மூலச் சட்டப்படி 2010-11 முதல் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதிலிருந்து பின் செல்வது என்பது இந்த நீதிமன்றத்தின் முடிவுக்கு மாறானது என்பது மட்டுமல்ல, மாணவர்களின் நலன்களைப் பாதிக் கக் கூடியதுமாகும். எனவே இந்த நிலையில் மாண வர்களின் நலன்களைக் கருதி அப்படி பின்னால் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. )

இவைகளையெல்லாம் தங்கள் தீர்ப்பிலே தெரி வித்து விட்டுத்தான் இறுதியாக தங்கள் முடிவுகளை நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதில் 1 ) ஒன்று மற்றும் 6ஆம் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கும் தேவையான சமச்சீர் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு கணிசமான பணிகள் முடிந்து விட்டன. அவை இணையத் தளத்திலும் விடப் பட்டு விட்டன. இந்த நிலையில் சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது, மாணவர்களின் நலனைப் பாதிக்கும். எனவே அந்தச் சட்டத்தின் 3ஆம் பிரிவைத் திருத்தி, தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லாது. அதை ரத்து செய்கிறோம்.

2) சமச்சீர் சட்டத்தின்கீழ் வரும் கல்விக்கான பாடப் புத்தகத்தை மாணவர்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும். இந்தப் பணிகளை 22ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

3) சமச்சீர் கல்விப் பாடங்களை நடத்துவதற்கு ஏதுவான குறிப்புகளை ஆசிரியர்களுக்கு உடனே அரசு வழங்க வேண்டும். அந்தப் புத்தகங் களில் உள்ள ஆட்சேபணைக்குரிய பகுதிகளை நீக்கி அவற்றுக்குப் பதிலாக புதிய பாடங்களை அரசு சேர்க்கலாம். புதிய பாடங் களை கூடுதல் இணைப் புப் புத்தகமாக வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

4) அரசுக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் குறித்த விவரங்களை அரசு அறிவிக்கையாக வெளி யிட வேண்டும்.

எனவே மாணவர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் நலனையும் கருத்திலே கொண்டு, சமச்சீர் கல்வியை அமல்படுத்த, மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் மற்றொரு நீதியரசரும் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு பற்றி உடனடியாக செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து கேட்ட போது, இந்தத் தீர்ப்பை இன் றுள்ள தமிழக அரசு தங்களுக்குக் கிடைத்த தோல்வி யாகக் கருதாமல் - ஏழை யெளிய நடுத்தர மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்த வரப் பிரசாத மாகக் கருத வேண்டும் - வழக்காடியதில் கிடைத்த தோல்வி என்று ஆட்சியினர் கணக்கிடா மல் எதிர்கால புதிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி எடுத்துக்கொண்டால் அது அவர்களுக் கும் நல்லது, எதிர்கால சமுதாயத்திற் கும் நல்லது என்று சொல்லியிருக்கிறேன். நான் மாத்திரமல்ல, அ.தி.மு.க வுடன் தோழமை கொண் டுள்ள கட்சிகளின் நண்பர்கள் எல்லாம் இதுபற்றி தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

சமச்சீர் பிரச்சினையில் அ.தி.மு.க.வின் நிலைப் பாடு தான் சரியானது என்று நேற்று கூறிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கூட, மேல் முறையீட்டைத் தவிர்த் திடுக என்று அறிக்கை விடுத்திருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துக என்று சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் நண்பர் கே.வீ. தங்கபாலு அவர்கள் அ.தி.மு.க. அரசு நீதிக்குத் தலை வணங்கி உடனே சமச்சீர் கல்வியை நடை முறைப்படுத்த வேண்டுமென்று சொல்லி யிருக்கிறார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அவர்கள் பாரதியாரின் கவிதையை எடுத்துச் சொல்லி, மேல் முறையீடு செய்யும் திட்டத்தைக் கைவிட்டு தமிழ்நாட்டில் உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் இளவல் கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் சமச்சீர் கல்விப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி, உடனடி யாக வகுப்புகள் நடைபெற ஆவன செய்ய வேண்டு மென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் திரு.வைகோ விடுத்துள்ள அறிக்கையில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் நெறி முறையற்ற தான்தோன்றித்தனமான போக்கை வன்மையாகக் கண்டித்ததோடு, உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கூறியிருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது என்றும், உயர்நீதி மன்றத் தீர்ப்பை மதித்து அதிமுக அரசு செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சித் தலைவ ரான நண்பர் பொன். குமார் ஜெயலலிதா தனது பிடி வாதத்தை கைவிட்டு சமச்சீர் பாடத் திட்டத்தை அமல்படுத்தவேண்டுமென்று அறிக்கை விடுத்து உள்ளார். கல்வியாளர்கள் பேராசிரியர் மாக்ஸ், பேராசிரி யர் கல்யாணி, எஸ். ராஜகோபாலன், பிரின்ஸ் கஜேந்திரபாபு, அருமைநாதன், முனைவர் முத்துக் குமரன், சாமி சத்தியமூர்த்தி, விஜயன் போன்றவர் களும், தம்பி முனைவர் பொன்முடி, மூத்த வழக் கறிஞர் தம்பி இரா. விடுதலை, ஆசிரியர் பிரதிநிதி மீனாட்சிசுந்தரம் போன்ற வர்கள் எல் லாம் சமச்சீர் கல்வியை உடனடியாக நடைமுறைப் படுத்த தமிழக அரசு முன்வர வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள்.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் இந்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ள அத்தனை கருத்துக்களையும் ஆழமாகப் படித்துப் பார்த்தால், அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி முறைக்கு திருத்தத்தை ஏன் கொண்டு வந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

எனவே இதிலே அரசு பெருந்தன்மையாக தமிழ் நாட்டு மாணவர்களின் நலன் கருதியும், அவர்களது பெற்றோர்களின் தவிப்பினை உணர்ந்தும் இந்தத் தீர்ப்பில் மேல் முறையீடு செய்யாமல் உடனடியாக 22ஆம் தேதிக்குள் மாணவர்களுக்குப் புத்தகங்கள் கிடைத்து அவர்கள் தங்கள் கல்வியைத் தொடர வழிவகுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி: முரசொலி, 20.7.2011

No comments:

Post a Comment