Search This Blog

Saturday, December 4, 2010

ஜெ.தொகுதி அதிருப்தி

பண்டாரஊத்தில் வசித்த 300 குடும்பங்களில் 250 குடும்பங்கள் புலம்பெயர்ந்து வருச நாடு, ஆண்டிப்பட்டி, தேனி, கூடலூர் என போய்விட்டார்கள்.

புலம்பெயர்ந்த குடும்பங்களும், மூட்டை முடிச்சுகளை எப்போது கட்டலாம் என்று திணறிக்கொண்டிருக்கும் குடும்பங்களும், எம்.ஜி.ஆர். மீதும் இரட் டை இலை மீதும் மட்டில்லா பாசம் கொண்டி ருப்பவர்கள்.

""நாங்க எல்லாருமே அந்தக் காலத்துல கூடலூர்லதான் இருந்தோம். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வந்துச்சே... அப்ப போலீஸ் காரங்க செஞ்ச டார்ச்சர் தாங்கமுடியாமத் தான் குழந்தை குட்டி சட்டி முட்டிகளை அள்ளிக்கிட்டு மேற்குத் தொடர்ச்சி மலை வழியா வந்து இந்த வருச நாட்டு பண்டார ஊத்துல தங்கினோம். நிலம் கரைகளை கிரயம் வாங்கி கொட்ட முந்திரி, இலவம் பஞ்சுன்னு விவசாயம் செஞ்சோம். எம்.ஜி.ஆர்.னா எங்களுக்கெல்லாம் உசுரு. அவருக்குப் பொறகு ஜெயலலிதாவுக் குத்தான் ஓட்டுப் போட்டோம். ஆனால் கடைசி வரைக்கும் எங்களைப் பற்றி அந்த அம்மாவும் சரி, அவுங்க ஆளுங் களும் சரி, கவலைப்படவும் இல்லை. காது கொடுத்துக் கேட்கவும் இல்லை'' என்கிறார்கள் எஞ்சி நிற்கும் குடும் பத்தினர்.

""எதற்காக 250 குடும்பங்கள் புலம்பெயர்ந்தன?''

""எதற்கெடுத்தாலும் வருசநாட்டுக் குத்தான் போகணும்... கடை, ஆஸ்பத்திரி, ஸ்கூல் எல்லாத்துக்கும் அங்கேதான் போகணும். வருசநாடு இங்கே இருந்து 3 கிலோமீட்டர், நடந்துதான் போக ணும். நடக்க முடியாத அளவுக்கு முடியா மக் கிடக்கிறவங்களை, புள்ளைத்தாச்சி யளை கயித்துக் கட்டில்ல போட்டுத்தான் தூக்கிட்டுப் போகணும். அய்யா நாங் களும் போகணுமானு கலெக்டர்ட்ட கேட் டோம். அப்புறம்தான் கலெக்டர் முத்து வீரன் 100 நாள் திட்டத்துல மண் ரோடு போட்டுக் கொடுத்திருக்கிறார்'' இது இப் பகுதியில் வாழும் மாயியின் வாக்குமூலம்.

""கோயில் இல்லாத ஊர்ல குடி யிருக்கலாமா? இதுநாள்வரை கோயில் இல்லாமத்தான் இருந்தோம். ஜெயலலிதாவோட ஆண்டிப்பட்டி தொகுதின்னு பேருதான், அடிப்படை வசதி அறவே இல்லை. இப்படித்தான் மந்திரி ஐ.பெரிய சாமி உதவியோடு ஒரு கோயிலைக் கட்டினார் எங்கஊர் ராஜா என்பவர். குடமுழுக்குக்கு வந்த மந்திரி... சீக்கிரம் மண்ரோட்டை தார் ரோடா மாத்திடலாம்னு சொல்லிட்டுப் போனாரு'' இது பண்டார ஊத்து ராதா சொன்னது.

சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த பெத்தணன் நம் மிடம், ""டி.டி.வி. தினகரன் இருந்தப்ப ஆண்டிப் பட்டி தொகுதியில பல ஊர்களுக்கு ரோடு போட்டார். பாலங்களாக கட்டினார். இப்ப அ.தி.மு.க. பொறுப்பாளரான மா.செ. தங்க தமிழ்ச்செல்வன் இந்தப்பக்கம் வருவதில்லை. பாருங்க... ராயக்கோட்டைல இருந்து முருக்கோடைக்கு மூலவகை ஆத்துல இடுப் பளவு தண்ணீல நீந்தித்தான் எல்லாரும் போறம். அம்மா அம்மா தொகுதின்னு சும்மா சொல்லிக்கிட் டே இருந்தா போதுமா? கொஞ்சமாச்சும் வசதி செஞ்சுத் தரவேணாமா? ரொம்ப அவதிப்படுறமுங்க'' என்றார்.

ஜெ. கோட்டைக்குள் ஓட்டை விழுந்துகொண்டி ருக்கிறது. தொகுதி ர.ர.க்களும் கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள்.

-சக்தி
நக்கீரன் 04-12-2010

1 comment: