அதிமுக அரசின்`சமச்சீர் கல்விச் சட்டதிருத்தம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது!' உயர்நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம்
சென்னை, ஜூலை 19-சமச்சீர் கல்வியை நிறுத் தும் நோக்கத்தில் அதற் கான சட்டப் பிரிவை திருத்தி, தமிழக அரசு திருத்தச்சட்டம் கொண்டு வந்தது, அரசி யல் சாசனத்துக்கு விரோ தமானது என்று, சென்னை உயர்நீதிமன் றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சமச்சீர் கல்வி திட் டம் தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சமச்சீர் கல்வியை உட னடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமி ழக அரசுக்கு உத்தரவிட் டனர். 81 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப் பில் நீதிபதிகள் கூறியி ருப்பதாவது:-
சமச்சீர் கல்விக்கான அறிக்கையில், வல்லுநர் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரின் கருத்தும் பிரதிபலிக்கவில்லை. ஒரு வல்லுநர் தனது முடிவில், மெட்ரிக் மற்றும் சமச்சீர் கல்வித் திட்டமும், பாடப்புத்த கங்களும் தேசிய கல்வித் திட்டத்தை பிரதிபலிக் கவில்லை என்று கருத்து தெரிவித்துள் ளார். சமச்சீர் பாடத்தில் பல திருத்தங்கள் செய் யப்பட வேண்டும் என் றும், அதை படிப்படி யாக செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் சமச்சீர் கல்வியை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டு மொத்தமாக கருத வில்லை.
அதோடு, 2004ஆம் ஆண்டு பாடத்திட்டங் களுக்கு செல்ல வேண் டும் என்றும் அவர்கள் கூறவில்லை. நீதிமன்றத் துக்கு அவர்கள் அளித்த அறிக்கையில், அவர் களின் முழுமையான மற்றும் உண்மையான நோக்கம் வெளிப்படுத் தப்படவில்லை என்று தான் தெரிகிறது. உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
சமச்சீர் கல்வியின் தரம் மற்றும் அதை அமல்படுத்தும் முறை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று தான் வல்லுநர் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. இந்த ஆண்டு அமல்படுத்த லாமா? என்றெல்லாம் ஆய்வு செய்ய உத்தர விடவில்லை. ஆனால் அந்த உத்தரவை தவ றாக எடுத்துக் கொண்டு, வல்லுநர் குழு அறிக்கை அளித்துள் ளது. சமச் சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று அதில் கூறியுள்ளனர்.
செயல்பட்டவர் யார்?
வல்லுநர்களின் இந்த அறிக்கை, இந்த வழக்கில் தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத் தான் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமல்ல, வரைவு அறிக்கை தயா ரிப்பதில் இருந்து இறுதி அறிக்கை தயா ரிக்கும்வரை பள்ளிக் கல்வித்துறை செய லாளர் சபீதாதான் செயல்பட்டுள்ளார். சமச்சீர் பாடப்புத்த கத்தை இந்தக் கல்வி ஆண்டில் உபயோகிக்க முடியாது என்ற கருத்தை குழுவின் உறுப்பினர்கள் தெரி வித்துள்ளனர். முன்ன தாக வரைவு அறிக் கையை நிபுணர் குழு விடம் சபீதா முன் வைத்துள்ளார். அதை அந்தக் குழு ஒரு மன தாக ஏற்றுக் கொண் டுள்ளது. எனவே இந்த அறிக் கையை தயாரிப்பதில் சபீதாவின் பங்கு அதி கம். அதன் அடிப் படையில்தான், இந்த ஆண்டு சமச்சீர் கல் வியை அமல்படுத்த முடியாது என்று வல்லு நர்கள் கூறியுள்ளனர். இந்த பாடப்புத்தகங் களை பின்பற்ற முடி யுமா? என்று ஆராய உச்சநீதிமன்றம் உத்தர விடவில்லை. உயர்நீதி மன்றத்தின் சில உத்த ரவுகளை கடந்த அரசு நிறைவேற்றவில்லை என்றும் அதனால் தான் அதை நிறை வேற்றுவதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வந்ததாக அரசு கூறியது.
வல்லுநர் குழு
சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு ஏராளமான காரணங் களை அரசு கூறினா லும், வல்லுநர் குழு அமைத்து ஆராய்ந்து முடிவெடுத்து, பின் னரே சமச்சீர் கல்வித் திட்டத்தைப் நிறுத்தி வைக்கும் சட்டத்திருத் தத்தை கொண்டு வந்த தற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் அரசு தாக்கல் செய்யவில்லை. சமச்சீர் கல்வித் திட்டம் சிறப்பானது என்றும், அது தேவை யானது என்றும் வல் லுநர் குழுவில் இடம் பெற்றுள்ள பெண் ஒருவர் கூறியிருக் கிறார். அவரது முழு கருத்தும், எங்களிடம் தாக்கல் செய்யப்பட் டுள்ள இறுதி அறிக் கையில் இடம் பெற வில்லை.
சமச்சீர் கல்வியின் ஆக்கபூர்வமான விஷ யங்களையும் தங்கள் அறிக்கையில் வல்லு நர் குழுவினர் குறிப் பிட்டுள்ளனர். அதில் மாற்றங்கள் வேண்டும் என்பதுதான் அவர் களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது. தி.மு.க. வின் கொள் கைகள் உள்ளனவா?
இரண்டு வல்லுநர் களுக்கு இடையே நடந்த `இ மெயில்' கருத்து பறிமாற்றமும் இங்கு சுட்டிக்காட் டப்பட வேண்டும். சமூக அறிவியல் பற் றிய கருத்து பறிமாற் றத்தில், ``சமச்சீர் கல்வி பாடங்களில் குறை பாடுகள் உள்ளன. ஆனால் அவை திருத்தப்படக் கூடியவை. தி.மு.க.வின் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாடங் கள் அதில் ஏறக்குறைய இல்லை. மாணவர்களின் மனதில் இந்தப் பாடத் திட்டத்தின் மூலம் அரசி யலை விதைப்பது கடினம். இந்த பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்கள், தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று நிரூபிப்பதும் மிகக் கடினம்'' என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய கல்விக்கு திரும்புவதாக அரசு எடுத்த முடிவு, ஓரடி பின்னோக்கி செல்லும் நிலையையே காட்டுகிறது. அதை நாங்கள் அனு மதிக்க முடியாது.
உள்நோக்கம் கொண் டது
புதிய ஆட்சி அமைத்த சில நாள்களுக்குள், பழைய பாடத்திட்டத் துக்கு அரசு திடீரென்று மாறுவதற்காக, எந்த வல் லுநர் குழுவின் அறிக்கை யையும் பெறவில்லை என் பதில் அரசின் உள் நோக்கத்துக்கான முகாந் திரம் காணப்படுகிறது.
இது, ஒட்டுமொத்த சமச்சீர் சட்டத்தையும் கிடப்பில் போடும் உள் நோக்கத்துடன் அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் என்பதற்கு மிகப் பெரிய சான்று. சமச்சீர் கல்விச் சட் டத்தை செல்லும் என்று ஏற்கெனவே உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதை எதிர்த்த மனுக்களை உச்சநீதிமன் றம் தள்ளுபடி செய்தது. இந்த சூழ்நிலையில் சட்டத் திருத்தம் என்ற பெயரில் சமச்சீர் கல் வியை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இது உயர்நீதிமன்றத்தின் உத்த ரவை மீறுவதாக அமைந் துள்ளது. எனவே இந்த சட்டத்திருத்தம், கல்வி பெறும் சம உரிமையை பாதுகாக்கும் அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்று கூறு வதில் எங்களுக்கு எந்த வித தயக்கமும் இல்லை. திருத்தச் சட்டத்தை உன் னிப்பாக கவனித்தால், அது சமச்சீர் கல்விக்கான மூல சட்டத்தையே செய லற்றதாக்கும் திருத்தமாக இருப்பது புலப்படும். அரசு கொண்டு வந் துள்ள இந்த திருத்தச் சட்டத்தை அனுமதித் தால், தமிழகத்தில் உள்ள ஒரு கோடிக்கும் மேற் பட்ட மாணவரின் நலனை அது கடுமையாக பாதித்து பின்விளைவு களை ஏற்படுத்தும்.
இந்த குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் தகுதி பற்றியும் பல்வேறு குறைகள் கூறப்பட்டன. அவற்றுக்குள் சென்று ஆய்வு செய்ய நாங்கள் விரும்பவில்லை. எனவே வல்லுநர்கள் குழு நியமனத்தை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.
அரசுக்கு அனுமதி
தற்போது தயாராக உள்ள சமச்சீர் பாடப் புத்தகங்களில், வல்லுநர் குழு சுட்டிக்காட்டும் குறைகளை ஆய்வு செய் வதற்கும், அதை மிகக் குறைந்த காலகட்டத்துக் குள் (3 மாதங்களுக்குள்) சேர்ப்பது, குறைப்பது போன்ற நடவடிக்கை களை மேற்கொள்வதற் கும் அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஒன்று மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை ஏற்கெனவே அமலாகிவிட்டது. ஏற் கெனவே அமலுக்கு வந்த சட்டத்தை, மற்ற வகுப் புகளுக்கும் அமலுக்கு வராமல் தள்ளிவைக்கும் வகையில் சட்டத் திருத் தத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இது அரசு தனது அதி காரவரம்பை மீறும் செயலாகும். கல்வி ஆண்டு 1.6.11 முதல் தொடங்கும் என் பது அனைவருக்கும் தெரி யும். இந்த சூழலில் தமிழக அரசால் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. தன்னால் நேரடியாக சாதிக்க முடியாத விஷ யத்தை, சட்டத் திருத்தம் கொண்டு வந்து, மறை முகமாக சாதிக்க அரசு முயற்சித்துள்ளது.
அரசியல் சாசனத்துக்கு விரோதம்!
ஒரு சட்டத்தில் கொண்டு வரும் திருத்தம், அந்த மூல சட்டத்தின் நோக்கத்தையே பாதிக்கும் வகையில் அமைந்திருந் தால் அது அரசியல் சாச னத்துக்கு முரணாகவே கருதப்படும். இந்த விவ காரத்தில் அரசியல் சாச னத்துக்கு எதிராக அரசு செயல்பட்டுள்ளது. ஏற்கெனவே சமச்சீர் அமல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிச் செல் வது, உயர்நீதிமன்றம் ஏற் கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை மீறும் செய லாகும்.
அதுமட்டுமல்ல, அந்த செயல்பாடு, சமச்சீர் கல்விக்கான மூலச் சட்டத்தையே ரத்து செய்வதற்கு சம மானதாகும். மூலச் சட்டத்துக்கு எதிரான சட்டத்திருத்தத்தை அனுமதித்தால், மாணவர்களின் நலன் பெரிதும் பாதிக்கப்படும். எனவே மீண்டும் பழைய பாடத் திட்டங்களை கொண்டு வர அனுமதிக்க முடியாது. அது மாணவர்களின் நலனுக்கு உகந்ததல்ல.
ஏற்கெனவே ``செட் டில்'' ஆன விஷயத்தில், வேறு எதையாவது செய் தால், மாணவர்களை குழப்புவது போல் ஆகிவிடும். அதை நாங் கள் அனுமதிக்க மாட் டோம். கடந்த அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம், சட்ட விரோத மானது என்றும் இப்ப டிப்பட்ட ஒரு தவறான கொள்கை முடிவெடுத்து அதற்காக ரூ.200 கோடி செலவழித்து, பழைய அரசு, புத்தகங்களை அச்சிட்டு இருப்பதாக ,பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
சமச்சீர் பாடத்திட் டத்தில் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் அனைத் தும் தரமற்றவை என்று அரசும் கொள்கை முடிவு எடுத்துள்ளது. ஆட்சி மாறியதும் திடீரென்று அரசு தனது கொள்கை முடிவை மாற்றி இருக் கிறது. அவசர கதியில் சமச் சீர் கல்வித் திட்டத்தை கடந்த அரசு கொண்டு வந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. குழு அமைத்து 4ஆண்டுகளாக அனைத்து கோணத்தி லும் அதை ஆராய்ந்து, பல மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள நில மையையும் ஆராய்ந்த பிறகுதான், சமச்சீர் கல் வியை முந்தைய அரசு கொண்டு வந்தது.
முந்தைய அரசு பின் பற்றாத நீதிமன்றம் உத் தரவுகளை பின்பற்றுவ தற்காகத்தான் இந்த சட் டத்திருத்தத்தை கொண்டு வந்ததாகக் கூறி அதை நியாயப் படுத்த அரசு முயற்சிக் கிறது. அப்படியானால், நீதிமன்ற உத்தரவுப்படி, சமச்சீர் கல்விவாரியத் தில் அதிகாரிகளை இந்த அரசு நியமித்தி ருக்கலாமே? அதிகாரி களின் செயலற்ற தன் மையினாலும், மனம் போன போக்கினாலும் ஏன் மாணவர்களின் படிப்புப் பாழாக வேண் டும்? 22ஆம் தேதிக்குள்
சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் அரசு ஆய்வு நடத்தி, அதில் சேர்க்க வேண்டியவை, நீக்க வேண்டியவை பற்றி முடிவு செய்ய அரசுக்கு சுதந்திரம் அளிக்கி றோம். உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித் துள்ள உத்தரவுப்படி பாடத்திட்டத்தை அரசு அறிவிக்கலாம்.
எனவே சமச்சீர் கல்விச் சட்டத்தில் கொண்டு வந்த திருத் தத்தை, அரசியல் சாச னத்துக்கு முரணானது என்று கூறி அதை ரத்து செய்கிறோம். வகுப் புகளை உடனடியாக ஆசிரியர்கள் நடத்து வதற்கு வசதியாக சமச் சீர் புத்தகங்களை 22ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
பள்ளிக்குழந்தைகள் தான் நாட்டின் எதிர் காலம் என்பதை கருத் தில் கொண்டு, சமச்சீர் கல்வியை சிறப்போடு நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதே எங்கள் நம்பிக் கையாக உள்ளது.
-இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

No comments:
Post a Comment